Skip to content

தூபகலசம்

POCKET PRAYER BOOK

(Revised and enlarged)

தூபகலசம்

———

இது மாஜி
சங்: ஞா. சாமுவேல் ஐயர்
இயற்றியது

 

______________________________________________________________
நூன்முகம்

இயேசுநாதர் உத்தம பிரதான ஆசாரியர். அவர் ஒரேவிசையாய்ப் பரிசுத்தத்துக்கும் பரிசுத்தஸ்தலத்திலே பிரவேசித்து நித்திய மீட்குதலை உண்டுபண்ணினவர். அவர் தமது மீட்பினால் விசுவாசிகளைராஜாக்களும் ஆசாரியருமாக்கினார். விசுவாசிகளாகிய ஞானாசாரியரின் ஜெபமும் தோத்திரமும்பராபரனுக்கு உகந்த தூபவர்க்கமாம். இத்தூபத்தில் கொஞ்சமடங்கிய இச்சிறு நூலைத்தூபகலசமென்கிறோம். இக்கலசம் புறதேச வேலையன்று. அதில் உள்ளது புறத்தேசச் சரக்குமன்று.தமிழ்நாட்டு வேலையும் சரக்குமாதலால் எம் போன்ற தமிழர் மனதுக்கும் நாவுக்கும் இசைந்திருக்குமென்றுநம்புகிறோம். இவை தனிவாசிப்புக்கு உதவக் கருதி, இவற்றை ஒருமை நடையில் எழுதினோம்.

ஜெபத்தைக் கேட்கிறவரே, இந்தத் தூபகலசத்தை உமக்கு பாதகாணிக்கையாக வைக்கிறேன். அதைக்கிருபையாய் ஏற்று ஆசீர்வதியும் சுவாமி, ஆமேன்.

தரங்கை,
1892-ம் வருஷம்  மே மாதம்  2ஆம்  தேதி                                                                                             ஞா.சா.

 

 

______________________________________________________________
காலை மாலை வாசிக்கத்தக்க
ஞான சங்கீதங்கள்
———

ஏழு ஜெபகீதங்கள்
25, 31, 54, 56, 71, 85, 90.

ஏழு சகாய கீதங்கள்
23, 27, 42, 46, 62, 73, 91.

ஏழு போதக கீதங்கள்
1, 15, 60, 68, 101, 127, 133.

ஏழு தோத்தர கீதங்கள்
34, 65, 67, 103, 104, 11, 117.

 

______________________________________________________________
முதலாம் வாரம்

———

1. ஞாயிறு காலை ஜெபம்

இரக்கமுள்ள பிதாவாகிய பராபரனே, தேவரீர் என்னை சென்ற இரவில் யாதொரு மோசமும்விக்கினமுமில்லாமல் பாதுகாத்து, இந்தப் பரிசுத்த நாளைக் காணும்படி கிருபை செய்ததற்காக உம்மைநான் முழுமனதினாலும் ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, தேவரீர் ஒருவரே மெய்யான தேவனென்றும்,உம்மையல்லாமல் வேறு தேவன் இல்லையென்றும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் என் கர்த்தராகியஇயேசுக்கிறிஸ்துவை முன்னிட்டு உமக்கே என்னை ஒப்புவிக்கிறேன். நீர் என்னுடையவர், நான்உம்முடையவன். உமது கிருபை, உமது நாள், உமது ஆசீர்வாதம் யாவும் எனக்குச் சொந்தம். பிதாவே, நீர்எனக்குக் கிருபையாய்க் கட்டளையிட்டிருக்கிற இந்த நாளை நான் பரிசுத்தமாய்த் துவக்கி, பரிசுத்தமாய்க்கழித்து, பரிசுத்தமாய் முடிக்க எனக்கு ஒத்தாசை பண்ணும். இந்த நாளைப் பரிசுத்த குலைச்சலாக்கும்சாத்தானுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். இன்று நான் உம்மைச்சரியாய்ப் புகழ என் நாவையும், உமது வசனத்தைக் கவனமாக்க கேட்க எனது செவியையும், நான்கேட்டதை பத்திரமாய்க் காக்க என் இருதயத்தையும் சுத்திகரியும். உமது பரிசுத்த ஆவியை எனக்குக்கொடுத்து, எனக்குள் மெய் விசுவாசத்தை உண்டு பண்ணியருளும். ஆண்டவரே, இன்று உமது நாமத்தில்எங்கெங்கே உமது பிள்ளைகள் கூடி வருகிறார்களோ அங்கெல்லாம் உமது கிருபையையும்,ஆசீர்வாதத்தையும் பரிபூரணமாய்க் கட்டளையிட்டருளும். உமது திருக்குமாரனின் புண்ணியத்தைமுன்னிட்டு என் ஏழை ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

2.  ஞாயிறு மாலை ஜெபம்

கிருபையுள்ள கர்த்தாவே, தேவரீர் என்னை இன்று முழுவதும் காப்பாற்றி ஆதரித்தீர். விசேஷமாய்உமது திருவசனத்தை எனக்குக் கட்டளையிட்டீர். தேவரீர் அடியேனுக்குப் பாராட்டின இந்தப் பெரியகிருபைக்காக உமது திருநாமத்துக்கு ஸ்தோத்திரம். ஆ, உமது வசனம் மெய்யாகத் தேனிலும் தேன்கூண்டொழுகலிலும் மதுரமானதே. இன்று நான் கேட்டதும் படித்ததுமான உமது திவ்விய வசனத்தை நான்ஒருபோதும் மறவாமல் என் இருதயத்தில் காத்து, பொறுமையோடு கனிகொடுக்கக் கிருபை செய்யும்.இந்தப் பரிசுத்தநாளில் நான் அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களையும் இயேசுவினிமித்தம்எனக்கு மன்னித்தருளும். நான் பாவமன்னிப்பின் நிச்சயத்தோடு என் படுக்கைக்குப் போகும்படி என்பலவீன விசுவாசத்தைப் பலப்படுத்தியருளும். நான் விழித்திருக்கையில் மாத்திரமல்ல, நித்திரையிலும்கிறிஸ்தவனாயிருக்கும்படி என்னைப் பொல்லாத நினைவுகளுக்கும் அசுத்த சொப்பனங்களுக்கும்விலக்கிக் காத்தருளும். சபையிலுள்ள பெரியோர்களையும், உபகாரிகளையும், ஏழைகள், வியாதியஸ்தர்விருத்தாப்பியரையும், தேவரீர் விசேஷித்து நோக்கிப் பார்த்து, அவரவர்க்கு வேண்டிய நன்மைகளையும்ஆசீர்வாதங்களையும் கட்டளையிட்டருளும். எனக்கும், என் வீட்டார் சிநேகிதருக்கும் இந்த இரவில்யாதொரு விக்கினமும் நேரிடாதபடிக்கு உமது பரிசுத்த தூதரைக் கொண்டு காவல் காத்தருளும். சத்தியபரனாகிய கர்த்தாவே, உமக்கென்னை முற்றிலும் ஒப்புவிக்கிறேன். உமது சித்தம் என் பாக்கியம் சுவாமி,ஆமேன்.

———

3. திங்கள் காலை ஜெபம்

இரக்கமுள்ள ஆண்டவரே, தேவரீருடைய திவ்விய பாதுகாப்பினால் பத்திரமாய்இளைப்பாறினேன்; இப்பொழுது சுகமாயெழுந்திருந்து இப்புதுப் பகலைக் கண்டேன். உமது கிருபைக்குஸ்தோத்திரம். இப்பொழுது என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது திருக்கரத்தில் ஒப்புவித்து, உமதுநாமத்தில் என் வேலையைத் துவக்கப் போகிறேன். நான் உண்மையும் சுறுசுறுப்புமாய் யாவையும் செய்துநிறைவேற்ற எனக்குத் துணை நின்றருளும். நான் யாதொன்றிலும் என் சுயமகிமையையும் பொழிவையும்தேடாமல், என் பரம தகப்பனாகிய உமது மகிமையையும், என் சகோதரரின் நன்மையையுமே தேட உமதுஆவியானவர் என்னை ஏவியெழுப்புவாராக. பரிசுத்தஆவியாகிய பராபரனே, நான் பொல்லாதபிசாசுக்கும், ஆகாத லோகத்துக்கும், என் கெட்ட மாமிசத்துக்கும் ஊழியஞ்செய்யாமல், என் பராபரன்ஒருவருக்கே ஊழியஞ்செய்வதற்கான புத்தியையும் பலத்தையும் எனக்குத் தந்தருளும். இஸ்ரவேலின்பராபரனே, நான் தேவரீருக்கு மாத்திரம் என் முழங்கால்களை முடக்கும் உமது தாசன் என்பதை நான்யாவிலும் வெளிப்படுத்தப் பண்ணும். இன்று என் கால்கள் தீயவழியிலே செல்லாமல், நீதியின் பாதையிலேசெல்லும்படி அவைகளை உமது வசனத்திலே உறுதிப்படுத்தியருளும். என் நிலைமையை அறிந்ததேவனே, என் இரட்சகர் நிமித்தம் எனக்கு இரங்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் சுவாமி, ஆமேன்.

———

4. திங்கள் மாலை ஜெபம்

என் அருமை இரட்சகராகிய இயேசுக்கிறில்துவின் பிதாவே, இன்று தேவரீர் எனக்குப் பாராட்டினகிருபைக்கு என்ன ஈட்டைச் செலுத்துவேன். உமது தயவு என்னைப் பராமரித்தது, உமது கிருபை என்னைத்தாங்கிற்று, உமது ஞானம் என்னை நடத்திற்று. கர்த்தாவே, நான் உம்மிடத்தில் பெற்றுக் கொண்டநன்மைகளுக்காக உமக்கு முன் சாஷ்டாங்க தண்டனிட்டு உம்மை நமஸ்கரித்துத் தோத்தரிக்கிறேன்.ஆண்டவரே, இன்று நான் உமது திருச்சித்தத்துக்கு விரோதமாகவும், என் சகோதரருக்கு இடைஞ்சலாகவும்நடப்பித்த எல்லா பாவங்களையும் என் இரட்சகர் நிமித்தம் எனக்கு மன்னித்து, உமக்கு பயப்படுகிறபயத்தையும், உம்மைச் சிநேகிக்கிற சிநேகத்தையும், உமதுபேரில் வைக்கும் திடநம்பிக்கையையும்அடியேனுக்குத் தந்தருளும். இந்த இரவில் தேவரீர் என் காவலாளியாயிருந்து, என் ஞான சத்துருக்களாலும்வேறு சத்துருக்களாலும் எனக்கு யாதொரு பொல்லாப்பும் நேரிடாதபடி என்னைத் தற்காத்திரட்சித்தருளும்.என் இரட்சிப்பின் பராபரனாகிய கர்த்தாவே, பகற்காலத்திலும் இராக்காலத்திலும் உமக்கு முன்பாகக்கூப்பிடுகிறேன். என் விண்ணப்பம் உம்முடைய முகத்துக்கு முன்பாக வரட்டும். என் கூப்பிடுதலுக்குஉம்முடைய செவியைச் சாய்த்தருளும் சுவாமி, ஆமேன்.

———

5. செவ்வாய் காலை ஜெபம்

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே, உமது திருநாமத்தில் படுத்துக்கொண்டேன்.சுகபத்திரமாயிளைப்பாறினேன். உமது நாமத்தில் திரும்பவும் எழுந்து உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். என்ஏழை ஸ்தோத்திரபலியைக் கிருபையாயேற்றுக் கொள்ளும். இன்றைக்கும் என்றைக்கும் தேவரீர்தாம் என்ஜீவன், உமது நாமமே என் ஆறுதல், உமது புண்ணியமே என் நம்பிக்கை, உமது வசனமே என்வழிகாட்டி. தேவரீர் என்னோடுகூட இருந்து என்னை உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாரும். என்பிழைப்பிலும் உழைப்பிலும் உம்மை நான் ஒருபோதும் மறவாமல், உமக்கு யாவிலும் கீழ்ப்படிந்துநடக்கும் சிந்தையை அடியேனுக்குத் தந்தருளும். உம்மை அறியாமலும் ஆராதிக்காமலும் இருக்கிற ஏழைஅஞ்ஞானிகளுக்காகத் தேவரீர் பரிதபித்து, உமது அன்பினால் அவர்களையும் உம்மண்டைக்குஇழுத்தருளும். கர்த்தாவே, இன்று எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் தேவையான ஆத்தும சரீரநன்மைகளைத் தயவாய்க் கட்டளையிடும்படி மன்றாடிக் கேட்கிறேன். இந்த நாள் அடியேனுக்குவிசேஷித்த ஆசீர்வாதமுள்ள நாளாயிருக்கப் பண்ணும். உமது சொல்லிமுடியாத சிநேகத்தினிமித்தமே என்ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

6. செவ்வாய் மாலை ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, என்னை இந்நாள் முழுவதும் சீவனோடும் சுகத்தோடும் காப்பாற்றிஆதரித்த தேவனே, இந்த இரவிலும் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் உமது பிதாவடைவானபாதுகாப்புக்கு ஒப்படைக்கிறேன். உமது செட்டைகளின் அரவணைப்பில் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்.பிதாவே, நான் இன்று உமது கற்பனைகளை மீறி நடந்தேன் என்று துக்கத்தோடு அறிக்கையிடுகிறேன். என்பாவங்களெல்லாவற்றையும் என் இரட்சகர் நிமித்தம் எனக்கு இரக்கமாய் மன்னித்து, அவருடைய பரிசுத்தஇரத்தத்தால் அவைகளைக் கிறுக்கியருளும். நான் இனி பாவமான எதையும் பகைத்து அகற்றும்படிக்குஉமக்கு பயப்படும் பிள்ளைக்கொத்த பயத்தை எனக்குள் உண்டுபண்ணியருளும். பகலிலும் இரவிலும்,வீட்டிலும் வெளியிலும், தேவரீருடைய கண்கள் இடைவிடாமல் என்னைப் பார்க்கிறதென்று நான் அறிந்துஎச்சரிக்கையாய் நடந்து கொள்ளப் பண்ணும். சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்லவர்களுக்கு நான்பயப்படாமல், சரீரத்தையும் ஆத்துமத்தையும் நரகத்திலே தள்ள வல்லவராகிய உமக்கே நான்பயப்படுவேன். உமக்கு பயந்தவர்களுக்குத் தேவரீர் வாக்களித்த சகல நன்மைகளுக்கும் அடியேனைபங்காளியாக்கியருளும். என் விழிப்பிலும் நித்திரையிலும் தெய்வபயம் என்னை ஆளும்படி துணைபுரிந்தருள வேண்டுமென்று அத்தியந்தப் பணிவாய்ப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன் சுவாமி, ஆமேன்.

———

7. புதன் காலை ஜெபம்

தயாபரராகிய கர்த்தாவே, சென்ற இரவில் சகல மோசங்களுக்கும் என்னை மறைத்துக் காத்த உமதுதிருப்பாதத்தைப் பணிந்து போற்றுகிறேன். இந்தப் பகலிலும் என்னையும் என் வேலையையும் என் கவைகாரியம் அனைத்தையும் உமக்குக் கையளிக்கிறேன். என்னை உமது திருக்கண்ணால் நோக்கியருளும்,உமது திருக்கரத்தால் தாங்கியருளும். தேவரீர் ஒருவரே என் பொன்னும் பொருளும் பொக்கிஷமுமாயிருக்கிறீர் என்பதை நான் ஒருபொழுதும் மறவாமல், உம்மை முழு இருதயத்தாலும்சிநேகிக்கும்படி எனக்கு சுத்த இருதயத்தையும் நல் மனசாட்சியையும் மாயமற்ற விசுவாசத்தையும்கொடுத்தருளும். அன்பின் அவதாரமாகிய என் அருமை இரட்சகரே, தேவரீர் என்னில் தரித்திருந்து,என்னை மெய் சிநேகத்துக்கு ஏவியெழுப்பி, உமது கற்பனைகளைக் கைக்கொள்ள எனக்குப் பெலன்தந்தருளும். பரிசுத்தஆவியே, நான் இன்று தினத்தில் நினைப்பது, பேசுவது, செய்வது யாவும்சிநேகத்தினின்று உற்பத்தியாகும்படி அனுக்கிரகியும். உம்மை சிநேகிக்கிற மெய் விசுவாசிகளுக்குத் தேவரீர்ஆயத்தம் பண்ணின நன்மைகளில் எனக்கும் பங்கருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். இன்றுஎனக்கும், என்னைச் சேர்ந்த யாவருக்கும் வேண்டிய ஆத்தும சரீர நன்மைகளை உமது ஞானமுள்ளசித்தத்தின்படியே தேவரீருடைய பரிபூரணத்திலிருந்து இரக்கமாய்க் கட்டளையிட்டருளும். உமதுகிருபையினிமித்தம் என் ஏழை ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும் சுவாமி, ஆமேன்.

———

8. புதன் மாலை ஜெபம்

பரிசுத்த திரியேக பராபரனே, தேவரீரின் திருச் சிநேகம் இந்நாள் முழுவதும் என்னைத் தாங்கிஆதரித்ததென்றறிந்து உம்மை மகிமைப்படுத்துகிறேன். இந்த இரவில் நான் என்னை மறுபடியும் உமக்கேஒப்படைத்து உமது திருப்பாதத்தில் என் சிரசை வைத்துப் படுத்துக் கொள்ளுகிறேன். என் பாவங்களைஇரக்கமாய் மன்னித்து, வாழ்விலும் தாழ்விலும், ஜீவனிலும் சாவிலும், தேவரீர் ஒருவரையே முழுமனதினாலும் நம்புகிற நம்பிக்கையை அடியேனுக்குள் உண்டுபண்ணும். பருவதங்கள் விலகிக் குன்றுகள்சாய்ந்தாலும், நம்முடைய கிருபை உன்னை விச்சு விலகாமலும் நமது சமாதானத்தின் உடன்படிக்கைசாயாமலும் இருக்கும் என்று தேவரீர் கொடுத்த திவ்விய வாக்குத்தத்தத்தை இம்மட்டும் என்னிடத்தில்நிறைவேற்றி வந்தீர், இனிமேலும் நிறைவேற்றுவீர். உம்மை நம்புகிறவர்கள் ஒருபோதும்வெட்கமடைவதில்லை என்பது எனக்கு நிச்சயம். இந்த நிச்சயத்தோடு நான் நித்திரை செய்யப் போகிறேன்.ஏழைப் பாவியாகிய என்னையும், மற்றெல்லா சகோதரரையும் உமது செட்டையின் நிழலிலேதிடன்கொண்டு தங்கப்பண்ணும். பிதாவே, என் ஜெபத்தைக் கேளும். என் ரட்சகரே, எனக்காக வேண்டுதல்செய்து என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.

———

9. வியாழன் காலை ஜெபம்

கிருபையுள்ள கர்த்தாவே, தேவரீர் எனக்குப் போன இரவிலே நல்லிளைப்பாறுதலைக்கட்டளையிட்டு, இந்தப் புதுப்பகலைக் காணுவதற்கு அருள்புரிந்ததற்காக உமக்கு அனந்த ஸ்தோத்திரம்.கர்த்தாவே, அநேகருக்குப் பணம் அடைக்கலம், அநேகருக்கு ஜனம் அடைக்கலம், அடியேனுக்கோஇஸ்ரவேலில் பெரிதாகிய உமது திருநாமமே அடைக்கலம். கர்த்தரின் நாமம் அரணான துருக்கம்; அதில்நீதிமான் ஓடிப் பத்திரமாயிருக்லிõறான் என்றபடி இப்பொழுது உமது நாமத்தை நம்பியே ஓடி வருகிறேன்.என்னை இரக்கமாயேற்றுக் கொள்ளும். இன்று நான் ஆகாதவர்களுடைய ஆலோசனையில் நடவாமலும்,பாவிகளுடைய வழியில் நில்லாமலும், சரசக்காரர் உட்கார்ந்திருக்கிற இடத்தில் உட்காராமலும் என்னைப்பாதுகாத்தருளும். இத்தினத்தில் நானுமது திருநாமத்துக்கு மகிமையாய் பிழைப்பதற்கு உமது ஆவியால்எனக்குத் துணைபுரியும். பிசாசின் தந்திரத்துக்கும், உலகத்தின் சூதுக்கும், மாமிசத்தின் மோசத்துக்கும்என்னைத் தேவரீர்தாமே தப்புவியும். எல்லாக் காலத்திலும் நானுமது திருவசனப்பட்டயத்தைப் பிடித்து,விசுவாசத்தால் என் சத்துருக்களை ஜெயிக்கும்படிக்கான பலத்தை எனக்குத் தந்தருளும். நான் இன்றுஉலகத்தார் நடக்கும் விசால வழியில் நடவாமல், உம்முடைய பிள்ளைகள் நடக்கும் நெருக்க வழியிலேநடக்கக்கூடும்படி உமது பரிசுத்த ஆவியாலென்னை நடத்தியருளும். அப்பொழுது இந்த நாள் எனக்குச்சந்தோஷமும், என் வேலையெல்லாம் ஆசீர்வாதமுமாய் முடியும். கர்த்தாவே எனக்கிரங்கும். இயேசுவே,என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

10. வியாழன் மாலை ஜெபம்

சர்வ வல்லமையுள்ள பராபரனே, தேவரீர் அடியேனுக்கு இன்றளவும் காண்பித்த எல்லாக்கிருபைக்கும் எல்லா உண்மைக்கும் நான் எம்மாத்திரம். அபாத்திர பாவியாகிய நான் இன்று உமது திருக்கரத்தினின்று சொல்லிமுடியாத நன்மைகளைப் பெற்றனுபவித்தேன். இவ்வளவு நன்மைகளைஅனுபவித்தும், நான் உமக்கேற்க நடவாமல், காணாதே போன ஆட்டைப் போல் வழி தப்பினேன்; அடியேனைத் தேடும். இயேசு சுவாமியின் திருமுகத்தைப் பார்த்து என் பாவங்களை எனக்கு மன்னியும்.இப்பொழுதே என் இருதயத்தையும் நாவையும் சுத்திகரித்து, நான் சுத்தமானவற்றை நினைக்கவும்சுத்தமானவற்றைப் பேசவும் பண்ணும். நான் என் வாக்கினாலாவது நடக்கையினாலாவது உம்மை தூஷிக்கிறவனாயிராமல் எல்லா விதத்திலும் உம்மை மகிமைப்படுத்துகிறவனாயிருக்கப் பண்ணும்.கர்த்தாவே, தேவரீருக்கு உம்முடைய சனத்தின்மேல் உள்ள கிருபையின்படி நீர் என்னை நினைத்து, உமதுஇரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். தேவரீர் இந்த இரவில் எனக்கு நல்ல நித்திரையையும்முசிப்பாற்றியையும் கட்டளையிட்டு, சுகத்தோடும் ஜீவனோடும் மறுநாளில் எழுந்திருக்கப் பண்ணும். என்ஒன்றான இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவின் பாடுகள் மரணத்தைப் பார்த்து என் மன்றாட்டைக்கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

11. வெள்ளி காலை ஜெபம்

கிருபை மிகுந்த கர்த்தாவே, சென்ற இரவிலே அடியேனை உமது ஆதரவில் வைத்துக்காத்ததற்காக உமக்குத் துதியுண்டாகக்கடவது. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக இன்றுகாலையில் என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்துஒத்தாசை வரும் என்று காத்திருக்கிறேன். எனக்காகப் பாடுபட்டு இரத்தஞ்சிந்தின என் ஒன்றான இரட்சகர்நிமித்தம் என்னை இரக்கமாய்க் கண்ணோக்கிப் பாரும். அவர் எனக்காகச் செய்யும் வேண்டுதலைக்கேளும். இந்நாளிலும் நீர் எனக்கு உமது ஆவியைத் தந்து, நான் என் இரட்சிப்பை பயத்தோடும்நடுக்கத்தோடும் நடப்பிக்கத்தக்கதாக, இதமியமான மனதையும் செய்கையையும் என்னில்உண்டுபண்ணியருளும். எனக்கு வரும் சகல துன்பங்களிலும் மனிதரிடத்திலாவது பிசாசினிடத்திலாவதுஎன் சகாயத்தைத் தேடாமல், சிலுவையில் அறையுண்ட என் இயேசுவையே மாறாக் கண்ணாய் நோக்கிப்பார்த்து, அவரை முன்னிட்டு தேவரீரிடத்தில் சகாயத்தைத் தேடும்படி என் விசுவாசத்தைப் பலப்படுத்தும்.என் விசுவாசத்தை விட்டு என்னைத் தள்ளப் பார்க்கும் சகல கள்ளப் போதகங்களுக்கும்சோதனைகளுக்கும் என்னை விலக்கமாய்க் காரும். இயேசுவின் நிமித்தமே என்னை ஆசீர்வதித்தருளும்சுவாமி, ஆமேன்.

———

12. வெள்ளி மாலை ஜெபம்

இயேசு, ஐயரே, தாவீதின் குமாரனே, உமது ஐந்து காயத்தண்டை ஓடி வருகின்ற ஏழைப் பாவியைஇரக்கமாய்க் கண்ணோக்கிப் பாரும். தன்னண்டை ஓடி வந்த புறாவை நோவா கைநீட்டிப் பிடித்து,பேழைக்குள் ஏற்றுக் கொண்டதுபோல், இந்த ஏழைப் பாவியையும் தேவரீர் உமது அடைக்கலத்தில் ஏற்றுக்கொள்ளும். தேவரீர் என்னை உமது திவ்விய ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாத்தால் மாத்திரம் எனக்குசீவனும் பெலனுமுண்டு. ஆண்டவரே, நான் வேஷங்காட்டும் பேர்க்கிறிஸ்தவனாயிராமல், உமக்குள்ளும்உமக்கென்றும் பிழைக்கிற மெய்க்கிற்ஸ்தவனாயிருக்கப் பண்ணும். உறங்காக் கண்ணும் தூங்காவிழியுமுள்ள காவல்காரராகிய இயேசுவே, இந்த இரவில் தேவரீர் என் காவலாளியாயிரும். உமதுபாடுகளும் மரணமும் என் ஆத்துமத்தின் யோசிப்பும் தியானிப்புமாயிருப்பதாக. இந்த இரவு என் கடைசிஇரவாயிருக்குமாகில், தேவரீருடைய திரு மரணம் போல, என் மரணமும் இருக்கக் கிருபை செய்தருளும்.பிதாவே, எனக்கிரங்கும். குமாரனே, என்னை ஆசீர்வதியும். பரிசுத்தஆவியே, என்னில் வாசம்பண்ணிஎன்னைப் பரிசுத்தமாக்கியருளும் சுவாமி, ஆமேன்.

———

13. சனி காலை ஜெபம்

இரக்கமுள்ள இயேசுவே, அபாத்திர பாவியாகிய அடியேனை இவ்வளவு அன்பாய்ப் பாசுகாத்தஉமக்கு அனந்த ஸ்தோத்திரம். இந்தப் பகலிலும் நான் உமது ஆதரவைத் தேடி வருகிறேன். தேவரீர் என்மீட்பரும் சகாயருமாயிரும். நான் எப்பொழுதுலிó ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருக்க விரும்புகிறேன்.தேவரீர் விண்ணப்பங்களின் ஆவியை என் இருதயத்தில் ஊற்றி, உமக்கு ஏற்றபடி ஜெபம் செய்யஎனக்குக் கற்றுக் கொடும். நான் வாய்ஜெபமும், வழக்க ஜெபமும் செய்கிறவனாயிராமல், உமக்கு உகந்தஇருதய ஜெபம் செய்ய என்னைப் பழக்குவியும். உமது சித்தத்துக்கு கீழ்மையும், மனத்தாழ்மையையும்,உமது வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொள்ளும் நம்பிக்கையையும், உமது வேளைக்குக் காத்திருக்கும்பொறுமையையும் அடியேனுக்குத் தந்தருளும். கர்த்தாவே, ஜெபங்களுக்கு மனத் தெளிவாயிராமல்அசடராயிருக்கும் பேர்களுக்காகத் தேவரீர் பரிதபித்து, அவர்களை ஜெபத்துக்கு ஏவி எழுப்பியருளும்.நம்முடைய முகத்தைத் தேடுங்கள் என்றீரே என்று என் இருதயம் உமக்குச் சொல்லுகிறது. உமது முகத்தைத்தேடுகிறேன் கர்த்தாவே. தேவரீர் என்னை என் இடுக்கண்களுக்கு நீங்கலாக்கி விடுவித்து, எனக்கு உமதுஆசீர்வாதங்களைப் பரிபூரணமாய்க் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

14. சனி மாலை ஜெபம்

சேனைகளுடைய கர்த்தராகிய பராபரனே, சென்ற பகலிலும், சென்ற வாரம் முழுமையிலும்என்னையும் எனக்கடுத்த யாவரையும் பாதுகாத்த தேவரீர் ஒருவரே சகல துதி தோத்திரம் புகழ்ச்சிக்கும்பாத்திரராயிருக்கிறீர். தேவரீருடைய தயவையும் கிருபையையும் நினைக்கும் நன்றியறிந்த இருதயத்தை நீர்எனக்குத் தந்து, ஏற்றபடி உம்மைத் துதித்துத் தோத்தரிக்க என் நாவை சுத்திகரியும். நான் வாழ்விலும்சுகத்திலும் மாத்திரமல்ல, தாழ்விலும் சாவிலுங்கூட உம்மை உம்மை மகிமைப்படுத்த எனக்கு பலந்தந்தருளும். நான் எத்தனையாய் நிலையற்றவன் என்று உணர என் முடிவையும், என் நாட்களின் அளவுஎம்மாத்திரம் என்கிறதையும் எனக்குத் தெரிவியும். நான் மரித்தபின் மோட்சத்திலே தப்பாமல் பிரவேசித்து,அங்கே உம்மைப் புகழ்ந்து போற்றும் தேவதூதரின் கூட்டத்தில் நானும் சேர்ந்து, உமக்கு அல்லேலூயாபாடும் பாக்கியத்தை எனக்குத் தரவேண்டுமென்று உம்மைப் பணிந்து கேட்கிறேன். இந்த இரவில் தேவரீர்என்னையும், எல்லாக் கிறிஸ்தவர்களையும் உம்முடைய அடைக்கலத்தில் வைத்துப் பாதுகாத்து, காலையில்நான் புதுப் பலத்தோடு எழுந்திருக்கப் பண்ணும். என் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் என்விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்தருளும் சுவாமி, ஆமேன்.

______________________________________________________________
இரண்டாம் வாரம்

 

———

15. ஞாயிறு காலை ஜெபம்

இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற கர்த்தாவே, தேவரீர் மறுபடியும் எனக்கு ஒருதிருநாளைக் கொடுத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். நான் என் பாவத்தினிமித்தம் கஷ்டமானஉழைப்புக்கும் களைப்பான வேலைக்கும் உள்ளானவன். ஆகிலும் உமது கிருபையும் இரக்கமும் எனக்குஇளைப்பாற்றியையும் ஓய்வையும் கட்டளையிட்டதென்று அறிந்து உம்மை முழுமனதாலும்மகிமைப்படுத்துகிறேன். ஆண்டவரே, இந்த நாளில் என் ஆத்துமமும் சரீரமும் உம்மிடத்தில் தரித்துஉமக்குள் ஓய்ந்திருக்க உமது பரிசுத்தஆவியால் என்னை ஆண்டருளும். நான் மெய்யான பரிசுத்தத்தில்தேறும்படி என்னை உம்முடைய சத்தியத்திலே வழிநடத்தி என்னைப் போதிவித்து இந்த நாளின்தேவாராதனையை எனக்கு ஆசீர்வாதமாக்கியருளும். உமது வசனத்தைப் பிரசங்கிக்கும் உமது ஊழியருக்குஉமது பரிசுத்தஆவியைப் பரிபூரணமாய்க் கட்டளையிட்டு ஆசீர்வதியும். தேவரீர் என்னை உமதுதிருவசனமாகிய சத்தியத்தில் பரிசுத்தமாக்கியருளும். நான் மேலெழுச்சியும் அசமந்தமுமாய் உம்முடையவசனத்தைக் கேளாமல், அதை என் இரட்சிப்புக்கென்று கருத்தும் கவனமுமாகக் கேட்கப்பண்ணும்.இத்திருநாளின் ஆசீர்வாதங்களுக்கு என்னை நீங்கலாக்கக்கூடிய சகல பாவங்களுக்கும் என்னைவிலக்கமாய்க் காத்து, எனக்குத் தேவையான சகல நன்மைகளையும் எனக்குக் கட்டளையிட்டருளும்சுவாமி, ஆமேன்.

———

16. ஞாயிறு மாலை ஜெபம்

தயவுள்ள பராபரனே, இந்த நாளில் நான் உமது திருக்கரத்தினின்று பெற்றுக்கொண்ட சகலநன்மைகளுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தேவரீர் இன்று என்னைப் புல்லுள்ள தலங்களில்மேய்த்து, அமர்ந்த நீரூற்றுகளண்டைக்கு என்னை நடத்தியருளினீர். உமது வீட்டின் நன்மைகளால்திருப்தியானேன். ஆண்டவரே, நான் கேட்ட வசனம் என்னில் தரிகொள்ளாதபடிப் பிரயாசைப்படுகிறபிசாசின் முயற்சிகளை வீணாக்கிப் போடும். நான் உமது திருவசனத்தைப் பொன்னிலும் அபரஞ்சியிலும்விலையேறப்பெற்ற பொக்கிஷமாக மதித்து அதை பத்திரமாய்க் காத்துக்கொள்ளத் துணைபுரியும்.எப்பொழுதும் உமது வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதாக.இயேசையரே, நான் இன்று மனோவாக்கு காயத்தால் செய்த சகல பாவங்களையும் எனக்கு மன்னித்து,சுத்த இருதயமும் நல்மனசாட்சியும் மாயமற்ற விசுவாசமுமுள்ளவனாய் என் படுக்கைக்குப் போகக் கிருபைசெய்தருளும். நான் விழிப்பிலும் நித்திரையிலும், பிழைப்பிலும் இறப்பிலும் உம்முடையவனாய்இருக்கும்படி எப்பொழுதும் என்னோடிருந்து என்னைக் காப்பாற்றி அரவணையும். இந்த இரவில் தேவரீர்என்னைச் சூழ அக்கினி மதிலாயிருந்து எனக்கும் என்னுடையவர்களுக்கும் யாதொரு விக்கினமும் நேரிடாதபடி பாதுகாத்தருளும் சுவாமி, ஆமேன்.

———

17.  திங்கள் காலை ஜெபம்

அன்புள்ள கர்த்தராகிய பராபரனே, உமது பிதாவடைவான தயவுகள் சொல்லிமுடியாதவைகளென்று நான் திரும்பத் திரும்பக் கண்டு உம்மை மகிமைப்படுத்துகிறேன். என்னைப் பெற்றுவளரக்கத் தாய்தகப்பன்மாரையும், என்னைப் போதிக்கப் போதகமாரையும், என்னை ஆண்டு நடத்தஅதிகாரிகளையும், எனக்கு வேலை கொடுத்துப் பராமரிக்கும் எசமான்களையும் கட்டளையிட்ட உமதுபெரிய உபகாரத்துக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் எனக்கு மேலாக வைத்திருக்கும் யாவரையும்ஆசீர்வதியும். அவரவர் தம்தம் அழைப்பில் உண்மையாயிருந்து, அதைச் சரியாய் நிறைவேற்றுவதற்கானவரத்தையும் பலத்தையும் தந்தருளும். திருச்சபையிலுள்ள தாய்தகப்பன்மார் யாவரும் தங்கள் பிள்ளைகளைஉமக்குப் பயப்படுகிற பயத்திலும், உம்மை சிநேகிக்கிற சிநேகத்திலும் வளர்க்க உமது ஆவியின்ஒத்தாசையைக் கட்டளையிடும். கர்த்தாவே, நான் இன்றைக்குச் செய்யப்போகிற வேலையில் தேவரீர்என்னோடிரும். நான் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதிலெல்லாம் தேவரீருடைய மகிமையையும்,பிறத்தியாருடைய நன்மையையும் தேடப்பண்ணியருளும். என் உட்சீர் புறச்சீர் யாவும் அறிந்த கர்த்தாவே,என்னை நன்மைக்கென்று நினைத்தருளும் சுவாமி, ஆமேன்.

———

18. திங்கள் மாலை ஜெபம்

என் நேசமுள்ள கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே, இந்த நாள் மறுபடியும் உமது ஒப்பற்றஅன்புக்குச் சாட்சியானதை அறிந்து உமது திருநாமத்தை ஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் என்னைப்பராமரித்திராதேபோனால் நான் செத்துப் போயிருப்பேன். தேவரீர் என்னைத் தாங்கியிராவிட்டால், வேலைசெய்திருக்கமாட்டேன். ஆண்டவரே, இன்று நான் என் ஊழியத்தில் காண்பித்த சோம்பலையும் உண்மைத்தாழ்ச்சியையும் எனக்கு இரக்கமாய் மன்னித்தருளும். கீழ்ப்படிகிற இருதயத்தையும், உம்முடைய வழிகளில்நடக்கும் சிந்தையையும் அடியேனுக்குத் தந்து, நான் பரிசுத்தத்தில் வளர்ந்து தேறக் கிருபை செய்தருளும்.தேவரீர் நியாயந்தீர்க்க வரும்போது நான் திகிலும் பயமும் நிறைந்தவனாய் நிற்காமல், என் இரட்சகராகியஉம்முடைய நீதியைத் தரித்து உமது சந்நிதானத்தில் தைரியமாய் நிற்கவும், உத்தமமும் உண்மையுமுள்ளஊழியக்காரா, நீ கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அனேகத்தின்மேல் உன்னை அதிகாரியாய்வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்ற சொல்லை உமது திருவாயால் நான்கேட்கக்கூடியவனாயிருக்கவும் சகாயம் பண்ணும். இந்த இரவில் என்னை பொல்லாத சொப்பனங்களுக்கும்,பயங்கர வியாதிகளுக்கும், அசுப்பான துன்மரணத்துக்கும் விலக்கமாய்க் காத்தருளும். இயேசுவே, தாவீதின்குமாரனே, நான் உமது ஐந்துகாயக் கோட்டையில் பத்திரமாய் இளைப்பாறி, நற்சுகத்தோடும்சந்தோஷத்தோடும் மறுநாளில் எழுந்திருக்க எனக்குக் கிருபை செய்தருளும் சுவாமி, ஆமேன்.

———

19. செவ்வாய் காலை ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே, தேவரீர் எனக்கு சரீரத்தையும் ஆத்துமத்தையும் கொடுத்தருளினதுமன்றி,என்னை இன்றளவும் ஜீவனோடும் சுகத்தோடும் காத்து வந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம், சிநேகமாகியபராபரனே, என்னை மெய் சிநேகத்தால் நிரப்பியருளும். பகை, கோபம், எரிச்சலாகிய பொல்லாதபாவங்களுக்கு என்னை விலக்கிக் காரும். பிறத்தியாருடைய நல்நிலைமையையும் சுகவாழ்வையும் பார்த்துப்பொறாமைப்படுகிறவர்களின் சதியோசனைக்கு என்னை நீங்கலாக்கும். தேவரீர் உமது அன்பின் ஆவியைஎன் இருதயத்தில் ஊற்றி, என்னில் பொறாமை உண்டாகாதபடிக்குக் கிருபை செய்யும். நான் சகலதுர்க்குணத்தையும் அருவருத்துத் தள்ளுவதற்கான பெலனை எனக்குத் தாரும். உமக்குப் பிரியமான சகலநற்குணமும் என்னில் வளரக்கூடும்படிக்குத் தேவரீர்தாமே என்னில் வாசம்பண்ணியருளும். இந்தநாளிலும், நான் உயிரோடிருக்கும் எல்லா நாளிலும் யாவருக்கும், விசேஷமாய் விசுவாசத்தின்வீட்டாருக்கும் நன்மை செய்கிறவனாயிருக்கப்பண்ணும். இயேசு ராஜாவே, உமது அன்பு என்னை ஆண்டு,உமது ஞானம் என்னை நடத்துவதாக. உத்தமமும் நிதானமும் என்னைக் காக்கக் கடவது. உம்முடையபாடுகள் மரணம் உயிர்த்தெழுதலின் நிமித்தம் என் கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து என்னைஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.

———

20. செவ்வாய் மாலை ஜெபம்

கர்த்தராகிய பராபரனே, இன்று பகலெல்லாம் என்னை ஆதரித்தவரே. இந்த இரவிலும் என்னைஉமது திருக்கரத்தில் ஒப்புவிக்கிறேன். என்னைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். பிதாவே, இன்று நான்உமது திருச்சித்தத்துக்கு ஏற்க நடவாமல், உமது கோபத்துக்கு என்னைப் பாத்திரனாக்கினேன். எனக்குஇரங்கும் கர்த்தாவே. என் பாவங்களை எனக்கு மன்னித்தருளும், இயேசுவே. தேவரீர் என்னை உமதுஐக்கியத்தில் ஏற்றுக் கொண்டு, உமக்கு என்னைச் சாயலாக்கியருளும். துஷ்டருக்குச் சாந்தத்தையும்,பகைஞருக்குச் சிநேகத்தையும், சத்துருக்களுக்குப் பொறுமையையும் காண்பிக்க எனக்குப் பெலன் தாரும்.அந்தி நேரமாகிய இப்பொழுது சூரிய வெளிச்சம் விலகிப் போயிற்று. தேவரீர் என்னை விட்டுவிலகாதேயும். எல்லாக் கண்களும் மூடிவிட்டன. உமது திருக் கண் என்பேரில் திறந்திருப்பதாக. இந்தஇரவிலே தேவரீர் என் வீட்டிலும் இருதயத்திலும் தங்கி, ஆத்துமத்துக்கும் சரீரத்துக்குமுரிய சகலவிக்கினங்களுக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். நல் நினைவுகளும் எண்ணங்களும் விருப்பங்களுமேஎன் இருதயத்தை நிரப்பி ஆளக்கடவது. கர்த்தாவே, உமக்கு சித்தமுண்டானால், நான் மறுத்தினத்தையுங்கண்டு, உம்மைத் தோத்தரித்து மகிமைப்படுத்தத் தயை புரியும். தேவரீருக்கு நித்தம் காத்திருக்கிறேன்,சுவாமி, ஆமேன்

———

21. புதன் காலை ஜெபம்

தேவ திருச்சுதனாகிய இயேசுநாதரே, சென்ற இரவில் என்னைச் சேதமறக் காப்பாற்றின உமதுதிருநாமத்துக்கு ஆயிரந்தரம் சங்கீர்த்தனம். இப்பகலிலும் என்னைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு, தாங்கி,ஆசீர்வதியும். உம்மையல்லாமல் நான் ஒரு நன்மையும் செய்யக்கூடாதவனாயிருக்கிறேன். தீவிதிராட்சைச்செடியாகிய உம்மில் என்னைக் கொடியாய் நிலைத்திருக்கப் பண்ணும். அப்பொழுது நான்பரமபிதாவின் திருச்சித்தத்துக்குப் பொருந்தின நற்கனிகளைக் கொடுக்கக்கூடியவனாயிருப்பேன்.ஆண்டவரே, நான் இந்த அசுத்த லோகத்தால் தீட்டுப்படாமல், கற்பும் சுத்தாங்கமுமாய் நடக்கத்துணைபுரியும். அசுத்தப் பார்வையால் நான் தீட்டாகாதபடி என் கண்ணையும், அசுத்தக் கேள்வியால் நான்தீட்டாகாதபடி என் காதையும், அசுத்தப் பேச்சால் நான் தீட்டாகாதபடி என் நாவையும் காவல்காரும்.எல்லாக் காவலைப் பார்க்கிலும் விசேஷமாய் என் இருதயத்தைக் காத்து அதைப் பிசாசு, லோகம்,மாமிசமென்ற சத்துருக்கள் கெடுத்துப்போடாதபடி கிருபை செய்யும். நான் போசனத்திலும் பானத்திலும்உடையிலும் நடையிலும் மட்டு மேலரயாயிருப்பதற்கு ஒத்தாசை புரியும். இன்று என்னை உமதுதிருச்சித்தத்திற்குப் பொருந்திய பாதையிலே நடத்தியருளும் சுவாமி, ஆமேன்.

———

22. புதன் மாலை ஜெபம்

பரிசுத்த வஸ்துவாகிய இயேசுவே, இந்த ஏழைப் பாவிக்கு இரங்கும். நான் சிறுவந்தொட்டுஇற்றையில்வரைக்கும் செய்த எல்லாப் பாவங்களையும் எனக்கு இரக்கமாய் மன்னித்து, உமது பரிசுத்தஇரத்தத்தால் என்னைக் கழுவிச் சுத்திகரியும். இந்த இரவில் என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும்உமது திருக்கரத்தில் ஒப்புவிக்கிறேன். யாவரையும் இரக்கமாய்ப் பார்த்தருளும். விசேஷமாய், சகலசமுசாரிகளையும் கண்ணோக்கிப் பாரும். யாவரிடத்திலும் விவாகம் கனமாக எண்ணப்பட்டு, விவாகமஞ்சம்தீட்டில்லாதிருக்கக் கடவது. தேவரீர் விபச்சாரக்காரரையும் வேசிக்கள்ளரையும் அருவருத்து நியாயந்தீர்க்கிறபரிசுத்தமுள்ள தேவனென்றும், அவைகளை நடப்பிக்கிறவர்களைத் தேவரீர் அழிப்பீரென்றும் யாவரும்அறிந்து, அவைகளுக்கு விலகியிருக்கக் கிருபை பண்ணும். இந்த இரவில் தேவரீர் என்னையும் எல்லாக்கிறிஸ்தவர்களையும் உம்முடைய சிறகுகளாலே மூடி, இரவின் அருக்களிப்புக்கும், இருளில் நடமாடும்பெருவாரிக்காய்ச்சலுக்கும் விலக்கமாய்க் காத்தருளும். என்னை இந்த இரவில் பரிசுத்த நினைவுகளாலும்,நல்ல தியானிப்பாலும் பிரயோஜனமுள்ள யோசனைகளாலும் நிரப்பியருளும். கர்த்தாவே, உம்மைப் போல்என்னைப் பாதுகாப்பார் ஆருமில்லை என்று அறிந்து, நம்பிக்கையோடு படுத்து, அமைதாக இளைப்பாறி,மகிழ்ச்சியோடு எழுந்திருந்து உம்முடைய திருநாமத்துக்குத் துதி செலுத்துவேன், சுவாமி ஆமேன்.

———

23. வியாழன் காலை ஜெபம்

சர்வத்திற்கும் வல்ல அநாதி பராபரனே, இதோ, காலை பலியாக என் நன்றியறிந்த ஸ்தோத்திரத்தைஉமக்குச் செலுத்துகிறேன். இயேசுவின் நிமித்தம் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். நானும், எனக்கு உள்ளதுஉரியது யாவும் உமக்குச் சொந்தம் என்று நான் அறிந்திருக்கிறேன். உமக்குச் சொந்தமானதை உமக்குமகிமையாகவும் உமது பிள்ளைகளுக்கு நன்மையாகவும் கையாட என்னை உமது பரிசுத்தஆவியால்ஏவியெழுப்பியருளும். கர்த்தாவே, அந்நிய சொத்து எதுவும் என்னிடத்தில் வந்து சேராமலும் அதனால் எனக்கு சாபம் லபிக்காமலும் இருக்கத்தக்கதாகத் தேவரீர் என் காவலாளியாயிரும். நான் ஒருபோதும்யாருக்கும் பாரமாயிராமல், என் முடிவுமட்டும் என் சொந்தப் பிரயாசையால் சாப்பிடும்படிக்கு எனக்குவேண்டிய சுகத்தையும், பலத்தையும் உண்மையையும் கட்டளையிடும். கர்த்தாவே உம்மை என்அடைக்கலமும், என் கோட்டையும், நான் நம்பியிருக்கிற என் பராபரனும் என்கிறேன். தேவரீர் என்னைப்பகலில் பறக்கும் அம்புக்கும், மத்தியானத்தில் பாழ்க்கடிக்கும் சங்காரத்திற்கும் விலக்கமாய்க் காத்தருளும்.கருணாநிதியே, இன்று காலமே உமது கிருபையை நான் கேட்கப்பண்ணும், ஏனெனில் உம்மைநம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு அறிவியும். ஏனெனில் உம்மண்டைக்கு என்ஆத்துமத்தை உயர்த்துகிறேன், சுவாமி ஆமேன்

———

24. வியாழன் மாலை ஜெபம்

கிருபை மிகுந்த பிதாவே, இந்நாள் முழுவதும் தேவரீர் என்னோடிருந்து எனக்கு ஒருபொல்லாப்பும் நேரிடாமல் காத்து, இந்த இளைப்பாற்றி நேரத்துக்குக் கொண்டுவந்து சேர்த்ததற்காக உம்மைஸ்தோத்தரிக்கிறேன். இன்று நான் என் ஊழியத்தில் காண்பித்த உண்மைத்தாழ்ச்சியையும் சோம்பலையும்நான் செய்த என் எல்லாப் பாவங்களையும் தேவரீர் எனக்குக் கிருபையாய் மன்னித்தருளும். தேவரீர்எனக்கு இரங்குவதுபோல் நானும் பிறனுக்கு இரங்கவும், வெறும் பேச்சால் மாத்திரம் அல்ல,நற்செய்கையால் அவனுக்கு இரக்கம் காண்பிக்கவும் தேவரீர் எனக்கு ஒத்தாசை பண்ணும். பொழுதுசாய்ந்த இந்த நேரத்தில் நான் ஆரண்டைக்குப் போவேன். என் ஒன்றான தகப்பனும் ஆதரவுமாகியஉம்மண்டைக்கே ஓடிவருகிறேன். இதோ, கர்த்தாவே உம்மை எப்போதும் எனக்கு முன்பாக வைத்துக்கொள்ளுகிறேன். தேவரீர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் அசைக்கப்படாதிருப்பேன். என்கர்த்தராகிய இயேசுவே, உம்மைப்பற்றி, உம்மில் நிலைத்திருக்கும் திடவிசுவாசத்தை எனக்குத் தந்து,என்னையும் எனக்கடுத்த எல்லாரையும் தற்காத்து இரட்சிக்கும்படி, உமது ஐந்து காயங்களை முன்னிட்டுஉம்மைப் பணிவாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன் சுவாமி, ஆமேன்.

———

25. வெள்ளி காலை ஜெபம்

எனக்காகப் பாடுபட்ட என் அருமை ரட்சகரே, நான் அதிகாலையில் உம்மை நினையாமல் யாரைநினைப்பேன். உம்மைத் துதியாமல் யாரைத் துதிப்பேன். இன்று தேவரீர் என்னைக் கண்ணோக்கிப் பார்த்து,உமது திருப்பாடுகளின் புண்ணியத்தை அடியேனுக்குப் பலிதமாக்கியருளும். என்னை உமது உள்ளானஐக்கியத்தில் ஏற்றுக் கொண்டு உமது மகிமைக்கு என்னைப் பங்காளியாக்கும். சத்தியத்துக்குச் சாட்சிகொடுக்க வந்த இயேசுவே, என்னை சத்தியவானாக்கியருளும். நான் எல்லாக் காலத்திலும் என்வாக்கினாலும் நடக்கையினாலும், என் பாடுகள் மரணத்தாலுங்கூட சத்தியத்துக்கு சாட்சி கொடுக்கப்பண்ணும். பொய்யினாலும், பொய்யராலும் நிறைந்திருக்கும் என் ஏழை தேசத்துக்காகத் தேவரீர் பரிதபித்து,அதைச் சத்தியத்தின் அறிவுக்குக் கொண்டுவந்து சேர்த்தருளும். என் நாவைப் பொல்லாப்புக்கும் என்உதடுகளைக் கபட்டு வசனிப்புக்கும் விலக்கமாய்க் காரும். இந்தப் பகலில் நான் என் கடமையைச் சரியாய்நிறைவேற்றப்பண்ணும். பொய், தூஷணம், அவதூறுகளால் நான் என்னைத் தீட்டாக்காமலும்,எவ்விதத்திலும் என் சகோதரருக்கு இடறல் உண்டாக்காமலும் தேவரீர் என்னைத் தற்காத்தருளும். நீர்உம்முடைய முகத்தை உம்முடைய ஊழியக்காரன் மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலேஎன்னை இரட்சியும் சுவாமி, ஆமேன்.

———

26. வெள்ளி மாலை ஜெபம்

இரக்கமுள்ள பரம தகப்பனே, இன்று தேவரீர் அடியேனுக்குச் செய்துவந்த எல்லாஉபகாரங்களுக்காகவும் நான் செலுத்தத்தக்க ஈடென்ன. என் நொறுங்குண்ட இருதயத்தையே உமக்குஅந்திப்பலியாக ஒப்படைக்கிறேன். தேவரீர் அதைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். உமதுதிருக்குமாரனின் பரிசுத்த இரத்தத்தினால் அதைக் கழுவிச் சுத்திகரித்து ஆற்றித் தேற்றியருளும். எனக்குஉமது பரிசுத்தஆவியைக் கொடுத்து, நான் சுத்த இருதயத்தினாலும் சுத்தநாவினாலும் உம்மைமகிமைப்படுத்தப்பண்ணும். எனக்கு இந்த இரவில் நல் இளைப்பாறுதலைத் தாரும். என் புறக்கண்தூங்கினாலும் என் அகக்கண் தூங்காமல் எந்நேரமும் விழித்திருக்கவும் நான் உம்மோடு சஞ்சரித்து உமதுஐக்கியத்தில் நிலைத்திருக்கவும் பண்ணும். தேவரீர் இந்த இரவில் என்னை உமது சிநேகக்கரத்தால்அணைத்து, உமது கிருபை செட்டையால் மூடி, எனக்கு நல் இளைப்பாறுதலையும் சுகநித்திரையையும்தந்தருளும். தேவரீர் என்னை அழைக்கும்போது என் அருமை ரட்சகருடைய திருப்பாடுகளின்புண்ணியத்தால் அலங்கரிக்கப்பட்டவனாய் உமது மகிமையில் பிரவேசிக்க எனக்கு சகாயம் செய்வீராக. உம்மையே நம்பியிருக்கிறேன், என்னைக் கைவிடாதேயும் சுவாமி, ஆமேன்.

———

27. சனி காலை ஜெபம்

என் ஒன்றான மீட்பராகிய இயேசுநாதரே, தேவர்களில் உமக்கு ஒப்பானவன் ஆர். பரிசுத்தத்தில்மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்குஒப்பானவன் ஆர். உமது கிருபையால் நான் சென்ற இரவில் இளைப்பாறி இந்தப் புதுப்பகலைக் கண்டேன்.உமக்கு அனந்த ஸ்தோத்திரம். கர்த்தாவே, நான் துர்க்குணத்தில் உருவானவன். பாவத்தில்கர்ப்பந்தரிக்கப்பட்டவன் என்பதைத் தேவரீர் அறிந்திருக்கிறீர். என் இருதயத்தின் தோற்றுதல்சிறுவயதுமுதல் நித்தம் பொல்லாததாய் இருக்கிறது. இரட்சகரே, தேவரீர் எனக்கு இரங்கி, உமதுபரிசுத்தஆவியை எனக்குத் தந்து, நான் என் பொல்லாத ஆசை இச்சகளைச் சிலுவையில் அறைகிறதற்குத்துணை செய்தருளும். இந்த நாளில் நான் என் இரட்சிப்பைப் பயத்தோடும் நடுக்கத்தோடும்நடப்பிக்கத்தக்கதாக உமது ஆவி என் பலமும், உமது வசனம் என் வழிகாட்டியுமாயிருக்க விரும்புகிறேன்.இயேசுவே, என் விருப்பத்தை நிறைவேற்றியருளும். தேவரீர் உமக்குப் பயந்தவர்களுக்குவைத்திருக்கிறதும், உம்மை நம்புகிறவர்களுக்கு நீர் உண்டுபண்ணினதுமான நன்மைகளை அடியேனும்அனுபவிக்கச் செய்தருளும். கர்த்தாவே, உம்மை நோக்கியிருக்கிறேன். உமது திருச்சித்தத்தின்படி எனக்குஆகக்கடவது, சுவாமி, ஆமேன்.

———

28. சனி மாலை ஜெபம்

சகல நன்மைகளுக்கும் காரணராகிய பராபரனே, சென்ற பகலிலும், சென்ற வாரம் முழுமையிலும்தேவரீர் எனக்குச் செய்துவந்த உபகாரங்களுக்காக உம்மைப் புகழ்ந்து போற்றுகிறேன். உமது தயவை நான்நினைக்கும்பொழுது, என் பாவத்தையும் நன்றிக்கேட்டையும் நினைத்து துக்கப்படுகிறேன். ஆண்டவரே,நான் உமது கற்பனைகளை மீறினதால் உமது உபகாரங்களில் எதுக்கும் நான் பாத்திரவானல்லவென்றுஅறிக்கையிடுகிறேன். தேவரீர் எனக்கிரங்கி, என் பேரில் உமது திருக்கரத்தை வைத்து: மகனே, திடன்கொள்,உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று அடியேனுக்குச் சொல்லும். அப்பொழுது நான்சந்தோஷத்தோடு படுத்துச் சமாதானமாய் இளைப்பாறுவேன். இயேசுவே, நான் மரணநிழலின்பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். ஏனென்றால் உம்முடைய கோலும் உம்முடையதடியும் என்னைத் தேற்றுகிறது. ஆண்டவரே, தங்கள் முடிவை நினையாமலும் அதற்குத் தங்களைஆயத்தப்படுத்தாமலும் இருக்கிற நிர்விசாரிகளுக்குத் தேவரீர் இரங்கி, அவர்களைத் தட்டியெழுப்பி,அவர்களுக்கு மெய்யான குணப்படுதலைக் கட்டளையிடும். இந்த இரவில் நான் என்னையும், என்சகோதரரான சகல கிறிஸ்தவர்களையும் உமது பாதுகாப்புக்கு ஒப்புவிக்கிறேன். உமது அடியாரைக்கிருபையாய் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.

______________________________________________________________
மூன்றாம் வாரம்

 

———

29. ஞாயிறு காலை ஜெபம்

ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவே, தேவரீர் ஞாயிற்றுக்கிழமை மரித்தோரில் இருந்துஎழுந்ததால், நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உமது உயிர்த்தெழுதலை நினைத்து உம்மைமகிமைப்படுத்த எனக்கு பெலன் தாரும். உம்மையல்லாமல் நான் பாவி, உம்மாலோ நான் நீதிமான்.உம்மையன்றி நான் மரணத்துக்குள்ளானவன், உம்மாலோ நான் சீவனைப் பெற்றவன். கர்த்தாவே, தேவரீர்எனக்கு சம்பாதித்த நீதியையும் ஜீவனையும் நான் எப்போதும் வாஞ்சிக்கத்தக்கதாய் என் பாவக்கேட்டைநான் உணர்ந்துகொள்ளப் பண்ணும். வெளிச்சம் உண்டாகக்கடவது என்றவுடனை வெளிச்சம்உண்டானதுபோல் உமது வசனத்தால் என் இருண்ட இருதயத்தில் இன்று வெளிச்சம் உதிக்கப்பண்ணும்.ஆண்டவரே, இன்று உமது வசனத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கிறதற்கு என் கண்களைத்திறந்தருளும். தங்கள் பாவ நிர்ப்பந்தத்தையும், நியாயத்தீர்ப்பையும், நரகக் கொடுமையையும் நினையாமல்காலங்கழிக்கும் நிர்விசாரரைத் தேவரீர் உமது வாக்கின் வல்லபத்தால் குணப்படுத்தியருளும். கர்த்தாவேஎன்னைத் திருப்பும், அப்பொழுது திரும்புவேன்; என்னை நடத்தும், அப்பொழுது நடப்பேன்; என்னைஇழும். அப்பொழுது பின்செல்லுவேன். நீர் இந்தத் திருநாளின் ஆசீர்வாதத்தை எனக்கும் எல்லாக்கிறிஸ்தவர்களுக்கும் பரிபூரணமாய்க் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

30. ஞாயிறு மாலை ஜெபம்

திரியேக பராபரனாகிய கர்த்தாவே, தேவரீர் என்நை இன்று முழுவதும் காப்பாற்றி, என்ஆத்துமத்தையும் சரீரத்தையும் போஷித்து ஆசீர்வதித்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இத்திருநாளில்நான் அறிந்தும் அறியாமலும் செய்த எல்லாப் பாவங்களையும் தேவரீர் கிருபையாய் மன்னித்து, நான்சமாதானமும் சந்தோஷமுமாய் இந்நாளை முடிக்கப்பண்ணியருளும். என் நேசமுள்ள ரட்சகர் சம்பாதித்தநீதியால், என்னைப் போர்த்து, அவருடைய சகல ஆசீர்வாதங்களாலும் என்னை நிரப்பியருளும். உம்மால்ஆசீர்வதிக்கப்பட்டவனை யார் சபிக்கக்கூடும். கிறிஸ்துவின் நீதியைப் போர்த்தவனை யார் குற்றஞ்சாட்டலாம். இந்த விசுவாசத்திலே என்னைப் பாதுகாத்தருளும். இந்த இரவில் நான் என்னையும், என்உபகாரிகள் பெரியோர் சிநேகிதரையும் உமது திருக்காப்புக்கு ஒப்படைத்து, இளைப்பாறி நித்திரை செய்யப்போகிறேன். உமது கிருபையும் ஆசீர்வாதமும் என்பேரிலும், என்னை ஜெபம் செய்யக் கேட்டுக்கொண்டயாவர் பேரிலும் வந்து தங்குவதாக. கர்த்தாவே எனக்கிரங்கும், கிறிஸ்துவே எனக்கிரங்கும், கர்த்தாவேஎனக்கிரங்கும் ஆமேன்.

———

31. திங்கள் காலை ஜெபம்

எல்லா நல்லீவுகளுக்கும் ஊற்றாகிய பராபரனே, போன இரவிலே யாதொரு மோசமும் எனக்குநேரிடாமல் பாதுகாத்த உமது கிருபையை வணங்கித் தோத்தரிக்கிறேன். என் ஆத்துமத்தையும் சரீரத்தையும்உமது அரவணைப்பில் ஏற்றுக் கொள்ளும். உமது கிருபையையும் ஆசீர்வாதத்தையும் எனக்குக்கட்டளையிடும். இன்று நான் பாவத்துக்கு நீங்கலாயிருந்து, என் வேலையையெல்லாம் உமக்கேற்றவிதமாய்ச்செய்யும்படி எனக்கு மெய்விசுவாசத்தைத் தந்து என்னை அதிலே காப்பாற்றியருளும். விசுவாசத்தைத்துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவே, தேவரீர் என் அந்தகாரப்புத்தியைத் தெளிவாக்கும். என்துர்ச்சித்தத்தை உமக்குக் கீழ்ப்படுத்தும். நல்லுணர்வை எனக்குள் உண்டுபண்ணும். நீர் என்னைச் சோதித்து,என் சிந்தனைகளை அறிந்துகொண்டு, என்னில் வேதனை உண்டாக்கும் வழி உண்டோவென்று பார்த்துஎன்னை நித்திய வழியிலே நடத்தும். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றுதிருவுளம்பற்றின உம்மிடத்திலே நான் எக்காலமும் உண்மையாய் நிலைத்திருக்கப்பண்ணும். எனக்கு என்னகுறைந்த போதிலும், உம்மைப் பற்றும் விசுவாசம் ஒருபோதும் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துவரக்கிருபை செய்தருளும். இன்று நான் செய்யும் வேலைகளையெல்லாம் தேவரீர் நலமாக முடியப்பண்ணி,சகலவிதப் பொல்லாங்குகளுக்கும் என்னை விலக்கமாய்க் காத்தருளும் சுவாமி, ஆமேன்.

———

32. திங்கள் மாலை ஜெபம்

கர்த்தாவாகிய பராபரனே, உம்மை நம்பி இன்று காலையில் எழுந்தேன். உமது கிருபையால் ஒருபகலைப் போக்கினேன். இப்பொழுது உமது அடைக்கலத்தில் இளைப்பாறப் போகிறேன். நீர் என்பாவங்களைப் பாராமல், உமது திருக்குமாரனின் புண்ணியத்தைப் பார்த்து, அவர் நிமித்தம் என்னை உமதுகிருபையென்ற செட்டைக்குள் ஏற்றுக் கொள்ளும். என் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு அவர்செய்யும் வேண்டுதலைக் கேட்டு, என்னை உறுதியான விசுவாசத்தில் காப்பாற்றும். விசுவாசிக்கிறேன்ஆண்டவரே, என் அவிசுவாசத்துக்கு உதவிசெய்யும் என்று கூப்பிட்ட அந்த ஏழையைப்போல் நான்கூப்பிடுகிறேன். எனக்குச் சகாயம் செய்யத் தீவிரியும். என் மகனே, நீ வேண்டுமென்றபடி உனக்குஆகக்கடவது என்று அடியேனுக்குச் சொல்லியருளும். இந்த இரவிலும் தேவரீர் எனக்குப் பலத்தகன்மலையும் அரண்மனையுமாயிரும். அப்பொழுது நான் பத்திரமாயிளைப்பாறுவேன், சுகமாய் நித்திரைசெய்வேன். ஆண்டவரே, என் சகோதரராகிய யாவருக்கும் இந்த இரவு நல்இளைப்பாறுதலின்இரவாயிருக்கும்படி அனுக்கிரகியும். சேனைகளுடைய கர்த்தாவே என்னோடுகூட இரும். யாக்கோபுடையபராபரனே, தேவரீர் என் உயர்ந்த அடைக்கலம் சுவாமி, ஆமேன்.

———

33. செவ்வாய் காலை ஜெபம்

சர்வவல்லவரே, பரமபிதாவே, அதிகாலையில் அடியேனுக்குச் செவிசாய்த்தருளும். என்னைச்சூழ்ந்திருக்கிற ஏழை அக்கியானிகள் உம்மை அறியாதவர்களாய் இருக்கையில், தேவரீர் எனக்கு உம்மைவெளிப்படுத்தியிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறேன், புகழுகிறேன், மகிமைப்படுத்துகிறேன். தேவரீர்சர்வவல்லவர், எனக்கு வேண்டிய யாவற்றையும் செய்து நிறைவேற்றுவீர். தேவரீர் ஞானமுள்ளவர்,எல்லாவற்றையும் எனக்கு நன்மையாய் முடிப்பீர். நீர் எங்கும் நிறைந்தவர், நான் வீட்டிலிருந்தாலும்வேலைக்குப்போனாலும் என்னோடிருக்கிறீர். நீர் எல்லாமறிந்தவர், என் உட்சீர் புறச்சீர் ஒன்றும் உமக்கு மறைவாயிராது. ஆ, பிதாவே, உமது அன்பின் பெருக்கத்தையும், இரக்கத்தின் ஐசுவரியத்தையும் நான்பூரணமாய் நம்பி, என்னையும் என் ஊழியத்தையும், என் போக்குவரத்து நினைவு பேச்சு செய்கையாவையும் உமது நடத்துதலுக்கு ஒப்புவிக்கிறேன். என்னை ஆசீர்வதியும், என் பேச்சை ஆசீர்வதியும், என்வேலையை ஆசீர்வதியும், என் காலின் ஒவ்வொரு அடியையும் ஆசீர்வதியும். அப்பொழுது நான்சந்தோஷமும் சுகமுமாய் இந்த நாளை முடிப்பேன். உமது திருச்சித்தத்தின்படி எனக்கு ஆகக் கடவது,ஆமேன்.

———

34. செவ்வாய் மாலை ஜெபம்

அன்புள்ள பரம தகப்பனே, என்னை இந்த நாள் முழுவதும் தாங்கி ஆதரித்த உமது பாதபடியில்அடியேன் தெண்டனிட்டு உம்மை நமஸ்கரிக்கிறேன். என்னைச் சூழ்ந்திருக்கும் யாவும் உம்முடையஅன்புக்கும் தயவுக்கும் சாட்சி கொடுக்கின்றன. வானத்தையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும்,பகலையும், இரவையும் தேவரீர் எனக்கென்று படைத்தருளினீர். நீர் கொடுத்த உணவைப் புசித்து, உமதுநீரூற்றின் தண்ணீரைக் குடித்துப் பகலில் வேலை செய்தேன். நீர் என்னுடைய இளைப்பாற்றிற்குக்கொடுத்தருளிய இரவில் நித்திரை செய்யப்போகிறேன். எனக்குக் கலக்கமற்ற நல்ல நித்திரையைத் தாரும்.பாவமும் வீணுமான நினைவுகளுக்கும், அசுத்த சொற்பனங்களுக்கும், துஷ்டர் பயத்துக்கும், கொள்ளைநோய்களுக்கும், சகலவித மோச விக்கினங்களுக்கும் என்னையும் என்னுடையவர்களையும் விலக்கிக்காத்தருளும். அடியேனுக்கு எந்தெந்த நன்மைகள் தேவையென்பதைத் தேவரீர் அறிவீர். அவைகளைஉமது பிதாவடைவான சித்தத்தின்படி எனக்குக் கட்டளையிட்டருளும். நான் ஒருபிடி சாப்பாட்டுக்காவது,ஒரு மிணறு தண்ணீருக்காவது, ஒரு ஜான் வஸ்திரத்துக்காவது பாத்திரானாயிராதிருந்தும், என் இரட்சகர்நிமித்தம் என் பாவங்களை எனக்குக் கிருபையாய் மன்னித்து என் ஜெபத்தை இரக்கமாய்க் கேட்டருளும்சுவாமி, ஆமேன்.

———

35. புதன் காலை ஜெபம்

பரமபிதாவாகிய ஆண்டவரே, காலமே என் சத்தத்தைக் கேட்பீராக. காலமே உமக்கு நேரே வந்துஆயத்தமாகிக் காத்திருக்கிறேன். கர்த்தாவே, உமது தயவைப் புகழுகிறேன். கிருபையைத் துதிக்கிறேன்.தேவரீர் என்னைப் புத்தியற்ற மிருகமாய்ச் சிருஷ்டிக்காமல், புத்தி சித்தம் உணர்ச்சியுள்ள மனிதனாய்ச்சிருஷ்டித்த உமது மட்டற்ற அன்புக்குத் தோத்திரம். தேவரீர் எனக்குக் கொடுத்திருக்கிற ஆத்துமத்தினாலும்சரீரத்தினாலும் இன்றும் என்றும் உமக்கு ஊழியஞ்செய்து, உம்மை எல்லாக்காலத்திலும் மகிமைப்படுத்தஉமது பரிசுத்தஆவியால் என்னை ஏவி எழுப்பியருளும். கர்த்தாவே, பாவத்தால் நான் உமது திருச்சாயலைஇழந்து பரிதபிக்கிறேன்; என்னை இரக்கமாய்க் கண்ணோக்கிப் பாரும். என்னை உமது திருக்குமாரனின்ஐக்கியத்துக்குட்படுத்தி, தெய்வசாயலை எனக்குள் திரும்பவும் உண்டுபண்ணியருளும். சுத்தஇருதயத்தைஎனக்குச் சிருஷ்டியும் பராபரனே, நிலைவரமான ஆவியை என்னுள்ளத்தில் புதிதாய் உண்டாக்கும்.ஒன்றான மெய்த்தெய்வமாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசுக்கிறிஸ்துவையும் அறிகிற அறிவிலேநான் இந்நாளிலும் தேர்ச்சியடைய எனக்குத் துணைபுரியும். தேவரீர் எனக்குக் கொடுத்திருக்கும்பலத்தையும் வரத்தையும் உமது நாமத்தின் மகிமைக்கென்றே செலவிட ஒத்தாசை பண்ணும். உமக்கும்குமாரனுக்கும் பரிசுத்தஆவிக்கும் துதிதோத்திரமுண்டாவதாக, ஆமேன்.

———

36. புதன் மாலை ஜெபம்

சர்வஜீவ தயாபரரே, தேவரீர் சென்ற பகல் முழுவதும் உமது பரிசுத்த சம்மனசுகளை எனக்குக்கட்டளையிட்டுக் காப்பாற்றினீர். என் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் என்னைக் கைகளில்ஏந்திக்கொண்டு போனார்கள் என்றறிந்து உம்மைத் தோத்தரிக்கிறேன். தகப்பனை, இந்த இரவிலும் உமதுபரிசுத்த தூதரை எனக்குக் காவலாக வைத்தருளும். உமது கற்பனைப்படி எனக்குப் பணிவிடை செய்யும்சம்மனசுகளை என் அசுத்த நடக்கையால் துக்கப்படுத்தாமல், நான் அவர்களைப் போல் மெய்யானபரிசுத்தத்திலே நடந்து, உமக்கு உண்மையும் உற்சாகமுமாய் ஊழியஞ்செய்கிற ஊழியக்காரனாக்கியருளும்.நான் சாகும் நேரம் சமீபிக்கும்பொழுது நீர் உமது பரிசுத்த தூதரை என்னண்டைக்கு அனுப்பி, ஏழைலாசருவுக்குச் செய்ததுபோல், என்னை உம்மிடம் ஆபிரகாமின் மடியிலே கொண்டுவந்துசேர்க்கப்பண்ணும். அங்கே நானுமக்கு அல்லெலூயா பாடி, சேனைகளுடைய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்,பரிசுத்தர் என்று புகழ்ந்து போற்ற ஆவலாயிருக்கிறேன். இந்த என் ஆவல் நிறைவேறுமளவும் என்னைஉமது அடைக்கலத்தில் வைத்துப் பாதுகாத்து, எனக்கும் என்னுடையவர்களுக்கும் உமது பரிபூரணஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டருளும். இயேசுவின் நிமித்தம் என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

37. வியாழன் காலை ஜெபம்

தயவுள்ள பிதாவே, காலைப்பலியாக என் ஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளத் தேவரீரைப்பிரார்த்திக்கிறேன். தேவரீர் சகல ஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்காய்க் குஞ்சுகளுக்கும்ஆகாரங்கொடுக்கிறவராய் இருக்கிறீர். நானும் உம்மையே நோக்கியிருக்கிறேன். உம்மை நோக்கியேகூப்பிடுகிறேன். எனக்கிரங்கி என்னை ஆசீர்வதியும். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்துபட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாதென்று உமது வசனம்சொல்லுகிறதே. இது சத்தியம் என்தை நானும் அறிந்திருக்கிறேன். இந்த விசுவாசத்திலே இன்றுதினத்தையும் துவக்குகிறேன், போக்குவேன், முடிப்பேன். பரமபிதாவே, எனக்கு எது குறைந்தாலும்உம்மைப் பிடித்துக் கொள்ளுகிற விசுவாசம் ஒருபோதும் குறையாமல், நாளொருவண்ணமாய் அதுஅதிகரித்து வளரும்படி கிருபை செய்யும். என் வறுமையில் முதலாய் நான் உமது பராமரிப்பைக் குறித்துகொஞ்சமும் சந்தேகப்படாமல், போதுமென்ற மனதோடு உமது திருக்கரத்தை முத்தி செய்யும் பிள்ளைப்பக்தியை அடியேனுக்குத் தந்தருளும். தேவரீர் சரீரத்துக்கும் ஜீவனுக்கும் வேண்டிய சகல நன்மைகளையும்எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் கிருபையாய்க் கட்டளையிடும். என் சகோதரராகிய ஏழைக்கிறிஸ்தவர்களுக்கு நீர் பரிதபித்து அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தளர்ந்து போகாதபடிக்கு அவர்களைகைதூக்கி ஆதரித்தருளும். இயேசுவின் திருமுகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி,ஆமேன்.

———

38. வியாழன் மாலை ஜெபம்

கிருபை மிகுந்த பிதாவே, இன்று தினத்திலும், கடந்த எல்லா நாட்களிலும் நான் பெற்றனுபவித்தஉமது பிதாவடைவான பராமரிப்புக்காக உமக்கு அனந்த துதியுண்டாவதாக. ஆண்டவரே, என்னைநன்றிகேட்டுக்கு விலக்கமாய்க் காரும். உம்மிடம் சகல நன்மைகளையும் அனுபவித்தபின் உம்மைவிட்டுமனம்விலகி உமக்கு துரோகம் செய்கிறவர்களின் கூட்டத்தில் நான் இராமல், உமக்கு எல்லாக் காலத்திலும்தோத்திரம் செலுத்துகிற பரிசுத்த கூட்டத்தில் நான் இருக்கும்படி உமது பரிசுத்தஆவியால் என்னைஆண்டு நடத்தியருளும். நான் வாக்கினால் மாத்திரமல்ல, பரிசுத்த நடக்கையாலும் என் நன்றியறிதலைக்காண்பித்து உம்மை மகிமைப்படுத்த எனக்கு ஒத்தாசை பண்ணும். என் நாவு ஓய்ந்தாலும் என் மனதுஓயாமல் உம்மை எந்நேரமும் துதிக்கும் பாக்கியத்தை அடியேனுக்குத் தந்தருளும். ஆண்டவரே,பொழுதுசாய்ந்த இந்த நேரத்தில் குருவிகள் தங்கள் கூட்டிலும், மிருகங்கள் தங்கள் தொழுவத்திலும்இளைப்பாறும். நானோ என் அருமை இரட்சகரின் ஐந்து காயத்தில் என் இளைப்பாற்றியைத் தேடுகிறேன்.இதை எனக்குக் கிருபையாய்க் கட்டளையிட்டு, எனக்கு நல்ல நித்திரையைத் தந்து, காலமே என்னைசுகத்தோடு எழுப்பியருளும். உமது திருப்பாதமே என் பாக்கியத்தலம், சுவாமி, ஆமேன்.

———

39. வெள்ளி காலை ஜெபம்

ஒப்பற்ற நேசமுள்ள கர்த்தராகிய இயேசுவே, பராபரனுடைய ஏகசுதனே, தேவரீர் என்னைசிநேகித்த சிநேகத்தால், உமக்குப் பிதாவினிடத்திலிருந்த சகல மகிமையையும் வெறுத்து, இந்தப்பூலோகத்துக்கு என் ரூபெடுத்துவரச் சித்தமானீரே, நீர் விசேஷமாய் என் பாவத்தைச் சுமந்து,தேவகோபத்துக்கும் சாபத்துக்கும் உம்மையுள்ளாக்கி சொல்லிமுடியாத பாடுகளுக்கும் சிலுவையின்மரணத்துக்கும் உம்மை உட்படுத்தினீர் என்பதை வெள்ளிக்கிழமையாகிய இன்று நினைத்து உம்மைமுழுமனதினாலும் தோத்தரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மால் பாவம் மரணம் பிசாசின் வல்லமைக்குநீங்கலானேன். என் இருதயத்தில் உமது ஆவியை ஊற்றி, உமது பரம பனியால் அதைச்செழிப்பாக்கியருளும். என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது ஐந்து காய அடைக்கலக்கோட்டையில்வைத்துப் பாதுகாரும். என்னை எல்லாப் பாவமும் நீங்கச் சுத்திகரியும். சகல நற்கிரியைக்கும், என்னைச்சமர்த்தனாக்கியருளும். இயேசுவே, என் உழைப்பிலும் களைப்பிலும் உமது திருப் பாடுகளே எனதுஆறுதலும், நம்பிக்கையும், ஜீவனும், பெலனுமாயிருக்கப் பண்ணும். தேவரீர் என்னை இந்த அழுகைப்பள்ளத்தாக்கில் வைத்திருக்குமளவும் என்னோடிருந்து என்னை ஆசீர்வதியும். என்னை நீர் அழைக்கச்சித்தமாகும்பொழுது, உமது நித்திய மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் என்னைப் பங்காளனாக்கியருளும்.பாவத்தைச் சுமந்த தெய்வஆட்டுக்குட்டியே, தேவரீர் அடியேன்பேரில் இரங்கி எனக்கு உமதுசமாதானத்தைக் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

40. வெள்ளி மாலை ஜெபம்

மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசுநாதரே, எனக்காகப் பாடுபட்டு மரித்த தேவரீரை நினைக்காமல்நான் படுக்கக்கூடுவது எப்படி? பரிசுத்த சிலுவை மரத்திலே பாவிகளுக்காக வேண்டுதல் செய்தவரே, என்பாவங்களெல்லாவற்றையும் எனக்கு மன்னித்தருளும். வலதுபாகக் கள்ளனை நோக்கிப் பார்த்த கண்ணால்என்னையும் நோக்கிப் பார்த்து, எனக்கும் மோட்சப்பிரவேசம் கிடைக்கும் என்கிற திடநம்பிக்கையைத்தந்தருளும். இந்த நம்பிக்கையிலே நான் இன்றிரவையும், என் ஜீவகால முழுவதையும் பாக்கியமாய்க்கழிக்கத் துணைபுரியும். உமது சிலுவையண்டை நின்ற உமது தாய்க்கும் மற்றவர்களுக்கும்ஆறுதலளித்ததுபோல், இப்பொழுது எனக்கும் நல்லாறுதலைத் தந்து ஆசீர்வதியும். தேவரீர் எனக்காகஅனுபவித்த ஆத்தும வேதனையையும் சரீர வேதனையையும் எல்லா நேரத்திலும் நான் நினைத்துதியானிக்க உமது ஆவியானவர் என்னை ஏவியருள்வாராக. நீர் முற்றுமுடித்த இரட்சிப்பில் அடியேனும்பங்குபெற்று, கடைசியாய் நான் மரிக்கும்போது உம்மைப் போல்: பிதாவே, உமது கைகளில் என் ஆவியைஒப்புவிக்கிறேன் என்று சொல்லிப் பாக்கியமாய் மரிக்கவும் எனக்குக் கிருபை செய்தருளும். இந்தஇரவிலே தேவரீர் என்னை எவ்வித மோசத்துக்கும் விலக்கிக் காத்து, மறுநாளில் ஜீவனோடும் சுகத்தோடும்என்னை எழுந்திருக்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.

———

41. சனி காலை ஜெபம்

அன்பு மிகுந்த அருமை இரட்சகரே, உம்முடைய கிருபைக்கும் இரக்கத்துக்கும் அனந்தஸ்தோத்திரம். தேவரீர் என்னை எல்லாப் பாவங்களினின்றும் மீட்டிரட்சித்தீர் என்பதையறிந்து, நான் இன்றும்ஒவ்வொரு நாளிலும் பாவத்தைப் பகைத்து அதை மேற்கொண்டு, பரிசுத்தத்தில் நடந்து தேறப்பண்ணும்.தேவரீர் என்னை மரணத்துக்கு நீங்கலாக்கினீரே. ஆண்டவரே, நான் மரணத்துக்கஞ்சாமல், எப்போதும்அதற்கு சந்தோஷமாய்க் காத்திருக்கப் பண்ணும். நான் பசாசை எப்பொழுதும் உமது பலத்தால்மேற்கொண்டு, ஜெயமடைய எனக்குத் துணை நின்றருளும். கர்த்தாவே, உமது தெய்வீக ரத்தத்தால்கொள்ளப்பட்ட உமது ஆளாகிய நான் உம்மை விட்டு ஒருக்காலும் தப்பி ஓடிப் போகாமல் உம்மிடத்தில்முடிவுமட்டும் நிலைத்திருக்கும்படி என்னைக் காப்பாற்றியருளும். இந்தப் பகலை நான் உமக்கு மகிமையாகஉபயோகிக்கும்படி தேவரீர் எனக்கு ஒத்தாசை பண்ண வேண்டுமென்று உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.எனக்கும் என்னுடையவர்களுக்கும் என்ன தேவையென்பதை தேவரீர் அறிந்திருக்கிறீர். ஆகையால்என்னை முற்றிலும் உமக்கு ஒப்புவிக்கிறேன். என்னை உமது அற்புத கரத்தால் ஆதரித்து, உமதுநன்மைகளால் நிரப்பியருளும் சுவாமி, ஆமேன்.

———

42. சனி மாலை ஜெபம்

இயேசு சுவாமியே, அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாகிய உமது கிருபையால் நான்திரும்பவும் ஒரு வாரத்தை முடிக்கிறேன். நீர் என் கர்த்தரும், நான் உமது ஆளுமாயிருக்கையில் எனக்குஎன்ன குறைவுண்டு. நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். தேவரீர் என்னைக் கேட்கிறீர். நான்மன்றாடுகிறேன். நீர் கொடுக்கிறீர். நான் தவறிவிழுந்தால், தேவரீர் என்னைக் கைதூக்கி ஆதரிக்கிறீர்.இயேசுவே, சென்ற பகலிலும் நான் வெகுவாய்த் தவறினேன் என்று மனஸ்தாபப்படுகிறேன். நான் செய்யவேண்டாததைச் செய்து, செய்யவேண்டியதைச் செய்யாமற் போனேன் என்று அறிக்கையிடுகிறேன்.எனக்காகப் பரிதபித்து என் குற்றத்தை மன்னித்தருளும். உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவும்.என்னைப் பாபமறச் சுத்திகரியும். வாரத்தின் கடைசி இரவாகிய இப்பொழுது என் கடைசி முடிவைநினைக்கிறேன். எனக்குப் பாக்கியமான முடிவைத் தந்தருளும். உம்மைப் பற்றும் விசுவாசத்தில்உறுதியாகவும், மெய்நம்பிக்கையில் திடமாகவும், மோட்ச வாஞ்சையால் பூரித்தவனாகவும் என் ஆவியைவிட்டுவிடும்படி, என் மூச்சொடுங்கும் அந்த நேரத்தில் தேவரீர் என் பக்கத்துணையாயிரும். என்னில்நற்கிரியையைத் துவக்கின பராபரனே, தேவரீர் அதை இயேசுக்கிறிஸ்துவின் நாள்மட்டாக முடியநடத்திவாரும். என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பத்திரமாய் இளைப்பாறப்பண்ணி, உமதுதிருநாளைக் காணும்படி சுகத்தோடு எழுப்பிவிட்டருளும் சுவாமி, ஆமேன்.

______________________________________________________________
நான்காம் வாரம்

 

———

43. ஞாயிறு காலை ஜெபம்

கர்த்தராகிய பராபரனே, தேவரீர் சென்ற இரவில் என்னைச் சகல மோசங்களுக்கும் மறைத்து, சகல பொல்லாங்குகளுக்கும் தற்காத்திரட்சித்து இந்தத் திருநாளைக் காணச் செய்ததற்காக உம்மைஸ்தோத்தரிக்கிறேன். நான் இந்தப் பரிசுத்தநாளைச் சரியாய் ஆசரிக்கத் துணை செய்தருளும்.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருந்தால்,எத்தனைக்கு அதிகமாகப் பரமபிதா தம்மைக் கேட்கிறவர்களுக்குப் பரிசுத்தஆவியைக் கொடுப்பாரென்றுஎங்கள் இரட்சகர் திருவுளம்பற்றின வாக்குத்தத்தத்தை இன்று என்னில் நிறைவேற்றியருளும். உமதுஆவியானவர் என்னையும், இன்று தெய்வாராதனை செய்யப்போகிற எல்லாக் கிறிஸ்தவர்களையும்,விசேஷமாய் உமது திருவசனத்தைப் பிரசங்கிக்கிறவர்களையும் பிரகாசிப்பித்து ஆண்டுகொள்வாராக. ஆண்டவரே, இன்று நான் உம்மை மனமும் வாக்கும் ஒத்துப் புகழவும், உமது வசனத்தைக் கவனமாக்ககேட்டுப் படிக்கவும், உம்மை நோக்கி மெய்விசுவாசத்தோடு ஜெபிக்கவும் இப்படியே இத்திருநாளின் சகலஆசீர்வாதங்களையும் பெற்றனுபவிக்கவும் கிருபை செய்தருளும். பாடுபட்டு, மரித்து உயிர்த்தெழுந்தஇயேசுவின் நிமித்தமே என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

44. ஞாயிறு மாலை ஜெபம்

பரிசுத்தத் திரியேக பராபரனே, தேவரீர் இன்று எனக்குப் பாராட்டின சகல கிருபைக்காகவும்உம்மை வணங்கி ஸ்தோத்தரிக்கிறேன். பிதாவே, உமது திருக்கரம் என்னைப் பராமரித்து நடத்திற்று.குமாரனே, உமது இரட்சிப்பு என்னைத் திருப்தியாக்கிற்று. பரிசுத்தஆவியே, உமது தேற்றரவால் நான்ஆறுதல் அடைந்தேன். இப்பொழுதும் ஆண்டவரே, என்னோடு தங்கியருளும். அதேனென்றால் அந்திநேரமாகிப் பொழுது சாய்ந்து போயிற்று. தேவரீர் என் பேரில் கிருபை கூர்ந்து, என்னைப் பரிசுத்தமாக்கி,நான் மெய்விசுவாசியாய்ப் படுத்து நித்திரை செய்யத் துணைபுரியும். யார் என்னைக் கைவிட்டாலும் நீர்என்னைக் கைவிடாதேயும். நான் எதுக்குத் தூரமானாலும் உமது கிருபைக்குத் தூரமாகாதபடிக் காப்பாற்றும்.கர்த்தாவே, நான் இன்று கேட்ட உமது வசனம் என்னில் நிலைத்து வேரூன்றிக் கனிகொடுக்கப் பண்ணும்.சபையின் பெரியோர், சிறியோர், ஸ்திரீகள், புருஷர்கள், வலியோர், எளியோர் அனைவரையும், என்னைஜெபம் செய்யக் கேட்டுக்கொண்ட என் சகோதரர் சிநேகிதர் யாவரையும் இரக்கமாய்க் கண்ணோக்கிப்பார்த்து, அவர்களுக்கு வேண்டிய சகல நன்மைகளையும் கிருபையாயக் கட்டளையிடும். இரவின் சகலமோசங்களுக்கும் என்னை விலக்கமாய்க் காத்து, உமக்கு சித்தமுண்டானால் சுகத்தோடு எழுந்திருக்கப்பண்ணும். உமக்கு இப்பொழுதும் எப்பொழுதும் மகிமையுண்டாவதாக, சுவாமி, ஆமேன்.

———

45. திங்கள் காலை ஜெபம்

அன்புள்ள கர்த்தரே, தயவுள்ள பிதாவே, தேவரீர் எனக்குச் செய்துவந்த உபகாரங்களையும் எனக்குஅளித்திருக்கிற நன்மைகளையும் யோசித்துப் பார்க்கையில் அவை சொல்லிமுடியாதவைகளாகஇருக்கின்றன. நான் உம்மை அறியாத புறமதஸ்தர்களின் மத்தியில் ஜீவனுள்ள பராபரனாகிய உம்மைஅறிந்த கிறிஸ்தவனாயிருக்க கிருபை அளித்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆண்டவரே, தேவரீர்என்னை உமது திருச்சபையின் அவயமும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்துக்குப் பங்குள்ளவனுமாக்கினீர்.இந்தப் பெரிய சிலாக்கியத்தை நான் ஒருபோதும் இழந்துபோகாதிருக்கத்தக்கதாய் உமது கிருபையில்என்னை நிலைநிறுத்திக் காப்பாற்றும். நான் இம்மையில் போராடும் சபையின் அவயமாய்ப் பசாசோடுஎதிர்த்து நிற்கவும், மறுமையில் வெற்றிசிறந்த சபையில் ஜெயக் குருத்தோலாகளுடன் உம்மைஎன்றென்றைக்கும் மகிமைப்படுத்தவும் துணைபுரிந்தருளும். இன்று நான் செய்யப்போகிற வேலைகளைஆசீர்வதித்து, அவை உமது திருச்சித்தத்துக்குப் பொருந்தினபடியே நிறைவேறச் செய்தருளும். உமதுஒன்றான குமாரனாகிய இயேசுவின் நிமித்தமே எனக்கிரங்கியருளும் சுவாமி, ஆமேன்.

———

46. திங்கள் மாலை ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, உமது கிருபையால் நான் இந்நாள் முழுவதும் யாதொரு சேதமுமின்றிபிழைத்திருக்கிறேன். உமக்கே மகிமை உண்டாவதாக. இந்த இரவிலும் தேவரீர்தாம் என் துணை, என்காவல், என் அடைக்கலம். இப்பொழுது நான் யாதொரு பயமும் இல்லாமல் இளைப்பாறத்தக்கதாய் தேவரீர்என் பாவங்களையெல்லாம் எனக்குக் கிருபையாய் மன்னித்தருளும். கர்த்தாவே, நான் பாவமன்னிப்புஉண்டென்று விசுவாசிக்கிறேன். என் பாவம் இரத்தாம்பரத்தைப்போல் சிகப்பாயிருந்தாலும், தேவரீர்அதைப் போக்கி என்னை உறைந்த மழையிலும் வெண்மையாக்க வல்லவரும் சித்தமுள்ளவருக இருக்கிறீர்.இதை நான் எக்காலத்திலும் பரிபூரணமாய் நம்பப்பண்ணும். இந்த நம்பிக்கையைவிட்டு என்னைப்பேர்க்கப்பார்க்கும் பிசாசின் சோதனையை நான் மேற்கொள்ள அடியேனுக்குப் பெலன் தாரும்.பராபரனுடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் திருரத்தம் என்னை எல்லாப் பாவமும் நீங்கச் சுத்திகரிக்கிறது என்கிற திவ்விய சத்தியம் என் ஊன்றுகோலாயிருக்கத் தயை புரியும். கர்த்தாவே, தேவரீர்என் பலவீனத்தில் பலமும், வியாதியில் ஒüஷதமும், எளிமையில் ஐசுவரியமுமாயிரும். இந்த இரவில்என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் விசேஷமாய் என் உபகாரிகளையும், சிநேகிதரையும், என்னைச்செபம் செய்யக் கேட்டுக்கொண்ட யாவரையும் உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாத்தருளும். உமதுபாதமே கதி, சுவாமி, ஆமேன்.

———

47. செவ்வாய் காலை ஜெபம்

இயேசு ஐயரே, உமது திருநாமத்தை முன்னிட்டு இந்த நாளைத் துவக்குகிறேன். இந்நாள்முழுவதும் தேவரீர் என்னோடிருந்து என் போக்கையும் வரத்தையும், என் நினைவுகள், வார்த்தைகள்,கிரியைகளையும் உமக்கு உகந்ததாக்கியருளும். விசேஷமாய் என் விசுவாசத்தைப் பலப்படுத்தி, நான்சிநேகத்தில் பெருகத் துணை செய்யும். நான் பரதேசம் பண்ணும் சகல நாளிலும் நித்தியஜீவ நம்பிக்கையில்பெருகி, பரம பரதீசை எனக்கு இலக்காக வைத்துப் பிழைக்கக் கிருபை கூர்ந்தருளும். இந்த நாள் தேவரீர்எனக்குக் கொடுத்த கிருபையின் நாள் என்று நான் நன்றையறிந்து, இதில் என் இரட்சிப்பைப் பயத்தோடும்நடுக்கத்தோடும் நடப்பிக்கப்பண்ணும். சாத்தானின் கண்ணியிலும், லோகத்தின் மாயையிலும், மாமிசஇச்சைகளிலும் நான் சிக்கிக் கொள்ளாமல், என் காலடிகளை உமக்குகந்த நீதியின் பாதையிலேநடத்தியருள உம்மைத் தாழ்மையாய்க் கெஞ்சி மன்றாடுகிறேன். என் சீர் நிருவாகமெல்லாம் அறிந்திருக்கும்பிதாவே, தேவரீர் என் குறைவை நிறைவாக்கி, என் பலவீனத்தில் என்னைப் பலப்படுத்தி, என்வேலைகளை வாய்க்கப்பண்ணி, என்னையும் எனக்கடுத்த யாவரையும் பேர்பேராய் ஆசீர்வதித்தருளும்.உமது புண்ணியத்தினால் என் ஜெபம் உமக்கு ஏற்றிருப்பதாக சுவாமி, ஆமேன்.

———

48. செவ்வாய் மாலை ஜெபம்

மகா, கிருபையுள்ள பராபரனே, தேவரீர் என் பிதாவும் நான் உமது பிள்ளையுமாயிருக்கிறதற்காகக்களிகூர்ந்து, உம்மைத் துதித்துத் தோத்தரிக்கிறேன். நீர் ஒருவரே வானத்திலும் பூமியிலுமுள்ள சகோதரக்கூட்டமனைத்துக்கும் நாமகாரணராயிருக்கிறீர். நான் உமது அடிமைக்கு அடிமையாயிருந்தஅபாத்திரனாயிருந்தும், என் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் தேவரீர் என்னை உமதுபிள்ளையாக்கிக் கொண்டீர். இந்த உமது சுத்தக் கிருபைக்கு நான் என்ன பதில் செலுத்தப் போகிறேன்.இன்று தேவரீர் என்னைப் பிதாவடைவாகக் கண்ணோக்கினீர். தாங்கி ஆதரித்தீர். தற்காத்து ரட்சித்தீர்.நானோ பிள்ளை பக்தியாக உம்மை முழுமனதாலும் சிநேகித்ததில்லை என்று மனஸ்தாபத்தோடுஅறிக்கையிடுகிறேன். கெட்டக் குமாரனை ஏற்றுக்கொண்ட தகப்பனைப் போல் என்னையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் பிதாவே. நாமே உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும், நருங்குண்ட பணிந்தஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறோம் என்று திருவுளம்பற்றின கர்த்தாவே, தேவரீர்அடியேனிடத்திலும் வாசம்பண்ணும். கல்லான இருதயத்தை என்னிலிருந்து எடுத்துப்போட்டுச் சதையானஇருதயத்தை எனக்குத் தாரும். தேவரீர் என்னை எவ்விதத் தீமைக்கும் விலக்கிக் காப்பாற்றும். ஆசீர்வாதக்கர்த்தராகிய உமது செட்டைக்குள் வந்தடைகிற இந்த ஏழையைத் தள்ளிவிடாதேயும் சுவாமி, ஆமேன்.

———

49. புதன் காலை ஜெபம்

பரமதகப்பனே, இரக்கமுள்ள பிதாவே, தேவரீர் ஏழை அடியேனுக்குப் பாராட்டின கிருபைக்காகஉம்மை முழுமனதினாலும் ஸ்தோத்தரிக்கிறேன். இந்தப் பகலிலும் என்னைக் கண்ணோக்கிப் பாரும்.கர்த்தாவே, சேனைகளுடைய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று புகழ்ந்து போற்றப்படுகிறஉம்முடைய திருநாமம் என்னிடத்திலும் என்னாலும் பரிசுத்தமாகவேண்டும் என்பது என் வாஞ்சையும்தவனமுமாயிருக்கிறது. எல்லாக்காலத்திலும் உமது திருச்சபையில் உமது திருவசனம் உள்ளது உள்ளபடியேசுத்தமாய்ப் போதிக்கப்பட கிருபைசெய்யும். ஆண்டவரே, நானும் என்னுடையவர்களும் எந்தமுகாந்திரத்தை முன்னிட்டும் சத்தியத்தைவிட்டுப் பிசகிப்போகாமல், சுத்த போதகத்தில் மரணபரியந்தம்விசுவாசமாய் நிலைத்திருக்கப் பெலன் தந்தருளும். சத்தியத்துக்கு விரோதமாய்ப் போதிக்கிற கள்ளப்போதகருக்குத் தேவரீர் பரிதபித்து அவர்களைத் திருப்பியருளும். துர்ப்போதகத்தால் கெட்டுத்துர்நடக்கையாய் நடந்து, அஞ்ஞானிகளுக்குள் உமது நாமம் தூஷணிக்கப்படுவதற்குக் காரணராயிருக்கிறபொல்லாத கிறிஸ்தவர்களுக்கும் தேவரீர் இரங்கி அவர்களை மெய் விசுவாசத்துக்குக் கொண்டுவந்துசேர்த்தருளும். அடியேன் இந்தப் பகலில் உமது வசனத்துக்கு ஒத்த நெருக்கமான வழியிலே நடந்து,உம்மை யாவிலும் மகிமைப்படுத்த எனக்கு ஒத்தாசை செய்தருள உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். தேவரீர்பரிசுத்தராயிருக்கிறதுபோல் நானும் பரிசுத்தனாகும்படி உமது பரிசுத்தஆவியால் என்னை நிரப்பிச் சுத்திகரித்தருளும். சத்திய பராபரனே, உமது திருக்கரத்தில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும்ஏற்றுக்கொள்ளும் சுவாமி, ஆமேன்.

———

50. புதன் மாலை ஜெபம்

கிருபை மிகுந்த பிதாவே, அந்திப்பலியாக நான் கொண்டுவருகிற என் ஸ்தோத்திரத்தைஏற்றுக்கொள்ளும். நான் எப்பொழுதும் உம்மை நோக்கி ஜெபம் செய்யவும், உமக்கே துதிசெலுத்தவுங்கூடும்படி தேவரீர் என்னை உமது ராஜ்ஜியத்தின் குடியாக்கின மட்டற்ற கிருபைக்காக உம்மைமகிமைப்படுத்துகிறேன். இன்னமும் உமது கிருபையை ஏற்றுக் கொள்ளாமலும், உமது ராஜ்ஜியத்துக்குஉள்ளாகாமலும் இருக்கிற ஏழை அக்கியானிகளுக்கு இரங்கி அவர்களை அந்தகார ராஜ்ஜித்திலிருந்துதிருப்பி உமது திருக்குமாரனின் இராஜ்ஜியத்தில் கொண்டுவந்து சேர்த்தருளும். இதற்காகப்பிரயாசைப்படுகிற உமது ஊழியருக்கு நற்சுகத்தையும் பலத்தையும், விசேஷமாய் உமது ஆவியின்வரத்தையும் கட்டளையிட்டு அவர்கள் வேலைகளை ஆசீர்வதியும். உமது கிருபையின் ராஜ்ஜியத்திலேஇருக்கிற நானும் மற்றெல்லாக் கிறிஸ்தவர்களும் தெய்வபக்தியாய்ச் சீவனம் பண்ண உமதுபரிசுத்தஆவியால் பலப்படுத்தியருளும். நான் மரிக்கும்போது பரிசுத்தவான்களும் தேவதூதரும் இருக்கிறமகிமையின் ராச்சியத்தில் தப்பாமல் வந்துசேரக் கிருபை செய்யும்படி உம்மைப் பணிந்து வேண்டிக்கொள்ளுகிறேன். நீர் அங்கே என்னை சேர்க்குமளவும் நான் அதன்மேல் வாஞ்சையுள்ளவனாய்க்காத்திருக்க என்னைப் பரமசிந்தையால் நிரப்பியருளும். இந்தச் சிந்தையோடு நான் இந்த இரவிலும்நித்திரை செய்து, இதே சிந்தையோடு எழுந்திருக்க ஒத்தாசைபண்ணும் சுவாமி, ஆமேன்.

———

51. வியாழன் காலை ஜெபம்

அன்புள்ள பராபரனே, உமது பிதாவடைவான பாதுகாப்பில் நான் பத்திரமாய் இளைப்பாறினேன்.உமது கிருபையினால் சுகத்தோடு எழுந்திருக்கிறேன். இந்தப் பகல் முழுவதும் நான் உமதுதிருச்சித்தத்துக்குக் கீழமைந்து நடக்க விரும்புகிறேன். நான் யாவிலும் அதை நிறைவேற்றத் தேவரீர்துணைபுரியும். உமது சித்தம் ஒன்றே மகா நல்லதும், அது கிருபையுள்ளதுமாயிருக்கிறதென்பதை நான்இம்மட்டும் அறிந்திருப்பதுபோல் இன்றும் அறிந்துகொள்ளப்பண்ணும். எனக்கு வரும் பாடுகள்உபத்திரவங்கள் யாவிலும் நான் என் அருமை ரட்சகர் சொன்னதுபோல், எனக்கல்ல, உமக்கேசித்தமாயிருக்கிறபடி ஆவதாக என்று சொல்லக் கிருபை செய்தருளும். கர்த்தாவே, உமது பரிசுத்தசித்தத்தைச் சம்மனசுகள் நிறைவேற்றுவதுபோல், அடியேனும் உற்சாகமும் தீவிரமுமாய் இரவும் பகலும்நிறைவேற்ற உமது பரிசுத்தஆவியைக் கொண்டு என்னை நடத்தியருளும். நான் உமது பரிசுத்த சித்தத்தைநிறைவேற்றாதபடி பலவிதத்திலும் தடைசெய்கிற பசாசு உலகம் மாமிசம் என்ற பொல்லா சத்துருக்களின்துர்ச்சித்தம் என்னிடத்தில் நிறைவேறாதபடிக்குத் தேவரீர்தாமே என் காவலாளியாயிரும். நான் இன்றுசெய்யப்போகிற வேலைகளில் எது உமக்கு ஏற்காததோ அதைத் தேவரீர் தடுத்துப்போடும். எது உமக்குஏற்றதோ அதை ஆசீர்வதித்து, நான் இந்த நாளைச் சரியாய் முடிக்கத் துணை செய்தருளும் சுவாமி,ஆமேன்.

———

52. வியாழன் மாலை ஜெபம்

சர்வஜீவ தயாபரராகிய பராபரனே, எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கின்றன. தேவரீர் ஏற்றவேளையிலே அவைகளின் போசனத்தை அவைகளுக்குக் கொடுக்கிறீர்.உம்முடைய கையைத் திறந்து ஜீவனுள்ளதெல்லாவற்றையும் இரம்மியமாய்த் திருப்தியடையப் பண்ணுகிறீர்.இதை நான் இந்த நாளிலும் கண்டுணரத்தக்கதாய்த் தேவரீர் என் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும்தேவையானவற்றைக் கட்டளையிட்டுப் பராமரித்ததற்காக உம்மை முழுமனதினாலும் தோத்தரிக்கிறேன்.இன்னமும் எனக்குத் தேவையானவைகள் என்னவென்று தேவரீர் அறிவீர். அவைகளையும் எனக்குக்கிருபையாய்க் கட்டளையிட்டருளும். விசேஷமாய் ஏழைக் கிறிஸ்தவர்களுக்காக உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். தேவரீர் அவர்களுக்கு இரங்கி, அவர்கள் குறைவை நிறைவாக்கி, அவர்களை ஆற்றித்தேற்றிபலப்படுத்தியருளும். எனக்கு நன்மை செய்துவருகிற எல்லா உபகாரிகளையும் தேவரீர் ஆசீர்வதியும். என்கன்மலையாகிய கர்த்தாவே, பொழுதுசாய்ந்த இந்த நேரத்திலே அடியேன் என்னையும்,என்னுடையவர்களையும், எனக்கடுத்த யாவரையும் உமது திருக்கரத்தில் ஒப்புவித்து, உமது பாதாரவிந்தத்தில்படுத்துக்கொள்ளுகிறேன். நான் மெய்விசுவாசியாய் இளைப்பாறி நித்திரை செய்யவும், சுகத்தோடும்பத்தோடும் எழுந்து உம்மை மகிமைப்படுத்தவும் எனக்கு ஒத்தாசை செய்தருளும் சுவாமி, ஆமேன்.

———

53. வெள்ளி காலை ஜெபம்

கிருபை மிகுந்த பிதாவே, தேவரீர் மன்னிப்பில் பெருத்த தேவனென்று நான் அறிந்து உமக்குப்பயந்து, உம்மைத் தோத்தரிக்கிறேன். நான் ஜென்மத்தாலும் கெட்டவன், செய்கையாலும் பாதகன் என்பதைதேவரீர் அறிவீர். என் பாவங்களையெல்லாம் எனக்குக் கிருபையாய் மன்னியும். என் அருமை ரட்சகர் என்கடனைத் தீர்க்கும்படி பட்டனுபவித்த பாடுகளைப் பாரும். அவர் சிந்தின திரு இரத்தத்தையும், அவருடையபரிசுத்த மரணத்தையும் கண்ணோக்கும். தேவரீர் தினந்தோறும் என் பாவங்களைக் கிருபையாய்மன்னிக்கிறீர் என்பதை நான் நினைத்து, என் சகோதரருக்கு அவர்கள் குற்றங்களைமன்னிக்கிறவனாயிருக்கப்பண்ணும். நான் என் சத்துருக்களைச் சிநேகிக்கவும், சபிக்கிறவர்களைஆசீர்வதிக்கவும், பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யவும் கூடும்படிக்கு தேவரீர் என்னை ஆண்டுநடத்தியருளும். என் நீதியின் பராபரனே, நான் கூப்பிடுகையில் என்னைக் கேளும். தேவரீர்உம்முடையவர்களை அதிசயமாய் நடத்துகிறவர் என்பதை நான் இன்றும் அறிந்து உம்மைமகிமைப்படுத்தத் துணை செய்தருளும். உமது திருக்குமாரனினிமித்தம் என்மேல் இரங்கி, என்விண்ணப்பத்தைக் கேட்டு, என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.

———

54. வெள்ளி மாலை ஜெபம்

இரக்கமுள்ள தகப்பனை, இன்று தேவரீர் அடியேனுக்குப் பாராட்டின எல்லாக் கிருபைக்காகவும்,உண்மைக்காகவும் உமக்குக் கனம் புகழ்ச்சி தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, நான் பரிசுத்தத்தில்தேர்ச்சியடையத் துணைபுரியும். நான் பாம்புக்குப் பயந்து ஓடுவதுபோல் பாவத்துக்குப் பயந்து ஓடும்படிஉமக்கு பயப்படுகிற பயம் என்னை ஆள்வதாக். உமது திருக்கரம் என்னை மோட்சவழியிலே நடத்தக்கடவது. நான் உமது கற்பநைகளை மீறிப் பாவம் செய்வதற்கு என்னை சோதிக்கும் எல்லாசத்துருக்களையும். நான் திடமாய் எதிர்த்து மேற்கொள்ளும்படிக்கு எனக்குப் பெலன் தந்தருளும்.கர்த்தாவே, இது சோதனை மிகுந்த  பொல்லாத உலகம் என்பதைத் தேவரீர் அறிவீர். எனக்கு வரும் எல்லாசோதனைகளிலேயும் நான் என் இரட்சகர் செய்ததுபோல், உமது திருவசனத்தை எப்பொழுதும்விசுவாசமாய்க் கையாடவும், என் கண் தூங்கினாலும், இருதயம் விழித்திருந்து ஜெபம்பண்ணவும் தேவரீர்உமது பரிசுத்த ஆவியால் என்னை ஏவியருளும். ஆண்டவரே, நான் மெய்விசுவாசிகளுக்கு ஒத்தபடி என்படுக்கையில் என் இருதயத்தில் பேசி அமர்ந்திருக்கப்பண்ணும். அப்பொழுது நான் மாதானத்திலேசயனித்துக்கொண்டும் நித்திரை பண்ணியும் இருப்பேன். ஏனெனில் கர்த்தாவே, தேவரீர் ஒருவரே என்னைசுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் சுவாமி, ஆமேன்.

———

55. சனி காலை ஜெபம்

தயாபரராகிய கர்த்தாவே, உமது சொல்லிமுடியாத கிருபைக்காக உம்மை அதிகாலையில்தோத்தரித்து, உமது நாமத்தில் என் கைகளை ஏறெடுப்பேன். நான் இன்று காலையில் என் ஆத்துமம்சரீரம், வேலை சோலிகள், போக்குவரத்து, பொருள், கனம், யாவையும் எனக்குள்ளதனைத்தையும் உமக்குஒப்புவிக்கிறேன். ஆண்டவரே, எனக்கு வரக்கூடிய எல்லாத் தீமையினின்றும் தேவரீர் என்னைக்கிருபையாய் இரட்சித்துக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். பரமபிதாவாகிய உமது திருச்சித்தமில்லாமல் என்தலையின் ஒரே மயிர் முதலாய் விழுவதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். தகப்பனே, எனக்கு எந்தத்தீமை நேரிட்டாலும், அது உம்மைவிட்டு என்னைப் பிரிக்கிறதாயிராமல், உம்மைப் பற்றும்மெய்விசுவாசத்தில் என்நைப் பலப்படுத்துகிறதாயிருக்கப்பண்ணியருளும். கர்த்தாவே, என் விசுவாசத்தைவளர்ப்பியும். என்னை உமது சிநேகத்தில் வேரூன்றப்பண்ணும், மெய்நம்பிக்கையில் என்னைஉறுதிப்படுத்தும். நான் இந்த அழுகையின் பள்ளத்தாக்கில் தங்கியிருக்குமளவும் தேவரீர் என் ஆறுதலும்பலமுமாயிரும். அப்பொழுது நான் எந்தப் பொல்லாப்புக்கும் பயப்படேன். மரணத்துக்கும் அஞ்சேன்.கர்த்தாவே, நான் உமக்கென்று பிழைக்கவும் உமக்கென்று மரிக்கவும் எனக்குத் துணை புரிந்தருளும்சுவாமி, ஆமேன்.

———

56. சனி மாலை ஜெபம்

பிதா, குமாரன், பரிசுத்தஆவியாகிய திரியேக பராபரனே, உமது மட்டில்லாத இரக்கம் என்னைஇம்மட்டும் கொண்டுவந்ததென்று அறிக்கையிட்டு உமக்கு அத்தியந்து பணிவோடு தோத்திரம்செலுத்துகிறேன். தேவரீர் இன்று பகலில் என்னை ஆதரித்ததுபோல் இந்த இரவிலும் என்னைஆதரித்தருளும். தேவரீர் எனக்குத் துணையாயிருக்கிறதினால் உம்முடைய செட்டைகளின் நிழலிலே கெம்பீரிப்பாயிருக்கிறேன். கர்த்தாவே, நான் படுத்தாலும், எழுந்தாலும், நித்திரை செய்தாலும்,விழித்திருந்தாலும் உம்மை ஒருபோதும் மறவாமல் எக்காலத்திலும், உம்மோடுசஞ்சரிக்கிறவனாயிருக்கப்பண்ணும். நான் எக்காலத்திலும் உமது இராச்சியத்தின் குடியாயிருந்து அதன்நன்மைகளை அனுபவிக்கவும், உமது வல்லமையை நம்பும் நம்பிக்கையிலே பெருகவும், உமதுமகிமையையே என் இலக்காக வைத்துப் பிழைக்கவும் ஒத்தாசை பண்ணும். என் கவலைகளையும்,விசாரங்களையும் உமதுபேரில் எறிந்து போட்டுப் படுத்துக் கொள்ளுகிறேன். எனக்குநல்லிளைப்பாற்றியையும், சுகமான நித்திரையையும் கட்டளையிட்டருளும். சேனைகளின் பராபரனாகியகர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் பராபரனே செவிகொடும். என் கேடயமாகியபராபரனே, கண்ணோக்கமாயிரும். நீர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக்கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

______________________________________________________________
ஐந்தாம் வாரம்

 

———

57. ஞாயிறு காலை ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீருடைய கிருபைகள் பெரியவைகள் என்பதை நான் உண்மையாய்அறிக்கையிட்டு உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உம்மை அடிக்கடி நான் மறந்தும், தேவரீர் என்னைக்கைவிடாமல் கடந்த இரவிலும், சென்றவாரம் முழுமையிலும் சுகபத்திரமாய்க் காப்பாற்றினீர். உம்முடையதிருநாளைக் காணவும் எனக்குச் சமயங்கொடுத்தீர். இந்நாளில் நான் உமது வசனத்தைக் கேட்டுப்படிக்கவும்,உமது ஐக்கியத்திலே இந்நாளைக் கழிக்கவும் என்னை ஏவி எழுப்பியருளும். உமது வசனத்தைப்பிரசங்கிக்கும் உமது ஊழியர்களை உமது வல்லமையுள்ள சாட்சிகளாக்கியருளும். உமது வசனத்தின்திருச்சபையை ஆசீர்வதிக்கவும், நான் இன்று கேட்டுப் படிப்பவைகளால் உமது வழிகளில் நிலைப்படவும்கிருபை செய்தருளும். இந்நாளில் உமது திருக்கற்பனைகளுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ய சோதிக்கும்பிசாசையும், அதன் தோழரையும் நான் ஜெயித்து, சமாதானமும் சந்தோஷமுமாய் இந்நாளை முடிக்கச்செய்தருளும் சுவாமி, ஆமேன்.

———

58. ஞாயிறு மாலை ஜெபம்

கர்த்தாவே, உமது கிருபையால் நான் இந்த நாளை முடிக்கிறேன். கடந்த பகலில் நான் கேட்டுப்படித்தவற்றை மறவாமல் அவைகளின்படி நடப்பதற்கான மனதையும், பலத்தையும் அடியேனுக்குத்தந்தருளும். தேவரீர் என் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பிய உமது வசனத்தின் பலத்தை என் நடக்கையால்நான் ரூபிக்க உமது ஆவியை அதிகமதிகமாக எனக்கு அருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.உமது வசனத்தை அசட்டை பண்ணுகிறவர்களைத் தேவரீர் கண்ணோக்கிப் பார்த்து, அவர்களைகுணப்படுத்தியருளும். உமது வசனத்தை சிநேகிக்கும் சிநேகத்தை எனக்குள்ளும் என்நைச் சேர்ந்தஎல்லாருக்குள்ளும் அதிகமதிகமாய் உண்டாக்கியருளும். உம்முடைய பரிசுத்தநாளை நான்எவ்விதத்திலாவது வீணாக்கியிருந்தால், தேவரீர் என் அருமை இரட்சகர் நிமித்தம் எனக்குக் கிருபையாய்மன்னியும். இந்த இரவிலே தேவரீர் என்னோடும், போதகமார் சபையார் யாவரோடும் இருந்து, யாவரையும்உமது செட்டைகளின் நிழலிலே திடங்கொண்டு தங்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.

———

59. திங்கள் காலை ஜெபம்

பரமதகப்பனே, உமது பெரிய இரக்கத்துக்காகவும், தயவுக்காகவும் நான் உம்மை வணங்கிஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் கடந்த இரவிலே எனக்கு வரக்கூடிய சகல பொல்லாப்புகளுக்கும் அடியேனைவிலக்கியருளினீர். கர்த்தாவே, நன்றியறிதலுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். தேவரீரை நான்என்னுடைய வேலை சோலிகளிலும் சம்பாஷணைகளிலும் மறக்கவொட்டாதேயும். நான் இன்று செய்யும்யாவையும் தேவரீருடைய பலத்தால் செய்யவும், தேவரீருடைய மகிமைக்கென்று செய்யவும் உமதுஆவியினால் என்னை ஆண்டு நடத்தியருளும். நான் என் வாக்கினாலும் நடக்கையினாலும் என்னைச்சுற்றிலுமுள்ள புறமதஸ்தருக்குமுன் உமக்குச் சாட்சிகொடுக்கத் தகுந்தவனாக்கியருளும். உமதுமகிமைக்கென்றும், பிறத்தியாரின் நன்மைக்கென்றும் இந்நாளை உபயோகிக்க என்னை உமது ஆவியால்நடத்தி எனக்குத் துணைநின்றருளும். இந்த என் ஏழை மன்றாட்டை இயேசு ரட்சகர் நிமித்தம்கேட்டருளும், சுவாமி, ஆமேன்.

———

60. திங்கள் மாலை ஜெபம்

அன்புள்ள இயேசுவே, உமது திருநாமத்திலே இந்நாளைத் துவக்கினேன்; உமது நாமத்திலேயேஅதை முடிக்கிறேன். நான் இந்த நாளில் என் வேலையில் காண்பித்த அஜாக்கிரதையையும்சுறுசுறுப்பில்லாமையையும் கிருபையாய் மன்னித்தருளும். என்னைப் பாரப்படுத்தும் கவலைகள்,விசாரங்கள் எவ்வளவு என்பதைத் தேவரீர் ஒருவரே அறிவீர். என் உள்ளத்தின் விசாரங்கள்பெருகுகையில் தேவரீருடைய வசனம் என்னைத் தேற்றரவு பண்ணாவிட்டால், நான் அழிந்தே போவேன்.ஆண்டவரே, எனக்காகப் பரிதபியும். தேவரீர் எனக்காக விசாரிப்பாயிருக்கிறீர் என்ற நிச்சயத்தை எனக்குத்தாரும். என் ஆத்தும இரட்சிப்பைத் தடைப்படுத்தும் உலகக்கவலைக்கு என்னை நீங்கலாக்கியருளும். உமதுஜனத்தின் கூப்பாட்டைக் கேட்கிற ஆண்டவரே, எனக்குச் சகாயம் செய்யத் தீவிரியும். தேவரீருடையபிதாவடைவான பராமரிப்பை நான் நம்பி, இந்த இரவிலே என்னையும், எனக்கடுத்தவர்களையும், என்னைஜெபம் செய்யக் கேட்டுக்கொண்ட யாவரையும் உமது திருக்காப்புக்கு ஒப்படைக்கிறேன். உமது சித்தம் என்பாக்கியம் சுவாமி, ஆமேன்.

———

61. செவ்வாய் காலை ஜெபம்

வல்லமையுள்ள ஆண்டவரே, பரமபிதாவே, தேவரீருடைய திருச்சந்நிதிக்கு முன்பாகஸ்தோத்தரிப்போடும் புகழ்ச்சியோடும் வந்து நிற்கிறேன். என் பாவங்களைப் பாராமல் என் ஏழைஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளும். என்னுடைய சித்தத்தை உமது சித்தத்துக்குக் கீழாக்கும். உமதுவசனத்தை எப்போதும் என் நடக்கைக்குப் பிரமாணமாக்கும் புது இருதயத்தை எனக்குக் கொடுத்தருளும்.நான் கேடுபாடுள்ள என் பழைய வழிகளை முற்றிலும் விட்டு, என் வயது ஆகஆக, உமது குமாரனைஅறிகிற அறிவிலும் உமது வசனத்தை வாஞ்சிக்கும் வாஞ்சையிலும் அதிகரிக்க எனக்குச் சகாயம்செய்தருளும். உமது வழிகளில் என் கால்கள் நிலைவரப்பட இன்று உமது பரிசுத்த தூதரின் காவலைஎனக்குக் கட்டளையிடும். நான் மறுமையிலே உமது பரிசுத்த சமுகத்தை முகமுகமாய்த் தரிசிக்குமட்டும்உமது கிருபையை என்பேரில் பெரிதாக்கி, உமது பாதையிலே என்னை நடத்தியருளும். தேவரீர் என்ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது பாதுகாப்பில் ஏற்றுக்கொண்டு என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி,ஆமேன்.

———

62. செவ்வாய் மாலை ஜெபம்

கர்த்தராகிய இயேசுவே, இந்த அந்திநேரத்திலே என் வீட்டுக்குள் வாரும். பாவியைன சகேயுவின்வீட்டை ஆசீர்வதித்தவரே, பாவியாகிய என் வீட்டையும் தேவரீர் ஆசீர்வதியும். என்நைச் சூழ்ந்திருக்கும்யாவருக்கும் என் வீடு முன்மாதிரியான கிறிஸ்தவ வீடாய் விளங்கக்கூடும்படி எனக்கும் என் வீட்டார்யாவருக்கும் உமது பரிசுத்தஆவியைத் தந்தருளும். தேவரீர், உமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்துநடந்ததுபோல், நானும் எனக்கு மேலாகத் தேவரீர் வைத்தவர்களுக்கு அடங்கியிருக்கும் மனத்தாழ்மையைஎனக்குத் தந்தருளும். உமது பரிசுத்த சித்தத்துக்கு எதிர்த்து நிற்கும் பெருமையைத் தேவரீர் என்னையும்என் வீட்டார் யாவரையும் விட்டு அகற்றியருளும். உமது கிருபைக்கு என்னைப் புறம்பாக்கும் சாபத்தீடானயாவையும் என் வீட்டினின்று விலகிப்போகப் பண்ணும். நானும் என் குடும்பத்தார் யாவரும் உமக்குஉண்மையான ஊழியராக நடக்கவும், கடைசியிலே நிர்ப்பந்தம் நிறைந்த இவ்வுலகத்தைவிட்டு உமதுபரிசுத்த பட்டணத்துக்குள் சந்தோஷமாய்ப் பிரவேசிக்கவும் கிருபை செய்தருளும். இந்த இரவில் தேவரீர்என் காவலாளியாயிருந்து, எனக்கு நல்ல நித்திரையைத் தந்து, என்னைச் சுகத்தோடும் ஜீவனோடும்மறுகாலையில் எழுப்பியருள உம்மை மன்றாடிக் கேட்கிறேன், சுவாமி, ஆமேன்.

———

63. புதன் காலை ஜெபம்

என் பராபரனே, உமது கிருபையுள்ள காவலைக் கடந்த இரவில் அபாத்திரனாகிய எனக்குக்கட்டளையிட்டீர். உமது பெரிய அன்புக்கு ஸ்தோத்திரம். நான் இந்நாள் முழுவதும் உமது வெளிச்சத்தில்நடக்க என் புத்தியையும் மனதையும் உமது பரிசுத்தஆவியினால் பிரகாசிப்பித்தருளும். குருட்டாட்டமானஎண்ணங்களுக்கும் சகல அவபக்திக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். உமது வசனத்தின் வழியைவிட்டுவிலகிப்போகப்பண்ணும் சகல சோதனைகளையும் நான் மேற்கொள்ள எனக்குப் பலந்தாரும். பூரணசற்குணராகிய உமது திருச்சாயலை நான் தரித்து நடக்க எனக்கு ஒத்தாசை பண்ணும். என்னையும் என்வீட்டாரையும் மாத்திரம் சிநேகிக்கும் தற்சிநேகத்துக்கு என்னை விலக்கிக் காத்தருளும். எல்லாரையும்சிநேகிக்கும் கருத்தான சிநேகத்தை என்னில் ஊற்றியருளும். தேவரீர் என்னைச் சிநேகித்துவரும் உமதுசிநேகத்துக்கு நான் பாத்திரமாக நடந்து, உமக்கு மகிமையாக இந்நாளை முடிக்கத் துணைசெய்தருளும்,சுவாமி, ஆமேன்.

———

64. புதன் மாலை ஜெபம்

பரமதகப்பனே, அந்திநேரமாகிய இப்பொழுது நான் உமக்கு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்த உமதுகிருபையின் ஆசனத்துக்கு முன்பாக வருகிறேன். இந்நாளில் நான் உமக்கு விரோதமாகச் செய்த சகலபாவங்களையும் மன்னித்து, என் ஸ்தோத்திரபலியைக் கிருபையாய் ஏற்றுக்கொள்ளும். தேவரீர் எனக்குச்செய்திருக்கும் உபகாரங்களுக்குத் தகுந்தவண்ணமாய் உம்மை ஸ்தோத்தரிக்க நான் கூடாதவன் என்பதைநீர் அறிவீர். என்றாலும் ஆண்டவரே, என் வாயின் வார்த்தைகளையும், என் நடக்கையையும் உமக்குஸ்தோத்திரமாக தேவரீர் மாற்ற வல்லவர். அடிக்கடி நான் என் இருதயத்தின் யோசனையினாலும், என்பேச்சினாலும், நடக்கையினாலும் உம்மை விசனப்படுத்தினேன். என் இருதயத்தைத் திருப்பும். அதைஉம்முடையதாக்கும். என் வாயிலிருந்து புறப்பட்ட தூஷண வார்த்தைகளும் சாபனைகளும் உமக்குத்தெரியாததல்ல. இவைகளையெல்லாம் தேவரீர் எனக்கு மன்னித்து என் இருதயத்தை சுத்திகரியும். உமதுபரிசுத்தஆவியை எனக்குத் தாரும். நான் உமது நேசகுமாரனைக் குறித்துப் பிறருக்குச் சொல்லக்கூடும்படிஎன்னை இரட்சிப்பின் சந்தோத்தால் நிரப்பியருளும். என்னுடைய சகல கவலைகளையும் உமதுதிருப்பாதத்தில் எறிந்துவிட்டுப் படுத்துக்கொள்ளுகிறேன். எனக்கும் என் வீட்டார் சிநேகிதருக்கும் இந்தஇரவில் நல்இளைப்பாறுதலைக் கட்டளையிட்டு, எல்லாரையும் மறுநாள் காலையில் ஜீவனோடும்சுகத்தோடும் எழுப்பி உம்மைத் துதிக்கப்பண்ணியருளும் சுவாமி, ஆமேன்.

———

65. வியாழன் காலை ஜெபம்

என் ஆண்டவரே, உமது கிருபையை நம்பி நான் இந்த நாளைத் துவக்க, தேவரீருடையஆசீர்வாதத்துக்காகக் காத்திருக்கிறேன். என்னை ஆசீர்வதியும். உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் மாத்திரம்நான் என் வேலையைச் செய்யக்கூடும். உமது ஆசீர்வாதமில்லாமல் நான் என்ன செய்தாலும்வீணாயிருக்கும். ஆதலால் உமது ஆசீர்வாதம் என் குடும்பத்தார் யாவர்பேரிலும் வந்து தங்குவதாக.இன்றைக்கு நான் என் வரத்தையும், பலத்தையும் உமக்கு மகிமையும் என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்குப்பிரயோசனமுமாகக் கையாட எனக்குத் துணையாயிரும். உமது நாமத்தை அறிக்கை பண்ணுவதில் நான்அஞ்சாதவனாய் விளங்க என்னைப் பலப்படுத்தும். என்னையும் என் வீட்டையும் நான் பார்க்கையில்உமது ஆசீர்வாதம் இல்லாததுபோல் பல சமயங்களில் காணுகிறது. உமது கரம் மெய்யாகவே எங்களைஆசீர்வதிக்கிறது என்கிற நிச்சயத்தை எனக்குத் தாரும். உமது ஆசீர்வாதத்துக்கு என்னையும் என்வீட்டையும் தூரமாக்கும் இருதயத்தின் சீர்கேட்டை எடுத்துப்போடும். உமது பரம பனியினால் அதைச்செழிப்பாக்கும். என் உட்படுதலையும், புறப்படுதலையும் தேவரீர் ஆசீர்வதித்து நான் என் ஆத்துமத்திலும்சரீரத்திலும் உமது நன்மைகளை ருசித்தவனாய் இந்நாளை முடிக்க எனக்குக் கிருபை செய்தருளும் சுவாமி,ஆமேன்.

———

66. வியாழன் மாலை ஜெபம்

சகல நன்மைகளுக்கும் ஊற்றாகிய பராபரனே, தேவரீர் இந்நாளிலும் சகல நாட்களிலும் எனக்கும்என் வீட்டாருக்கும் செய்துவந்த நன்மைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். இன்று நான் உமது மகிமைக்குக்குறைவாகச் செய்திருக்கும் சகல பாவங்களையும் மன்னித்தருளும். என் இருதயத்தில்சமாதானமடைந்தவனாய் என் படுக்கைக்குப் போகும்படி எனக்குக் கிருபை செய்தருளும். என் தரித்திரம்,வியாதி முதலிய சரீரக்கவலைகள் என் சமாதானத்தைக் குலைத்துப் போடுவதைத் தேவரீர் அறிவீர். என்பலவீனத்துக்காகப் பரிதபியும். எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தால் என் இருதயத்தைநிரப்பியருளும். அப்பொழுது நான் என்ன வந்தாலும் கலங்க மாட்டேன். என் வீட்டிலே மெய்யானசமாதானத்தைத் தாரும். என் வீட்டார் யாவரும் சமாதானப்பிரபுவாகிய இரட்சகரின் பிள்ளைகளாய்விளங்கும்படி உமது ஆவியை எங்கள் உள்ளத்தில் அனுப்பும். உலகக்காரியங்களாலும் பிசாசின்தந்திரத்தாலும் என் வீட்டின் சமாதானம் குலைந்து போகாதபடி என்னைப் பாதுகாத்தருளும். நானும்,என்னுடையவர்களும் ஒருவரையொருவர் பகைக்காமல், பிசாசையும் பாவத்தையும் மாத்திரம் பகைக்கவும்,உம்மையும் உமக்குள்ளே மற்றவர்களையும் சிநேகிக்கவும் ஒத்தாசை செய்தருளும். நான் அமைதலாய்நித்திரை செய்து உமது ஆவியினால் பலமடைந்தவனாய்க் காலையில் எழுந்திருக்கச் சகாயம்செய்தருளும். உமது திருக்குமாரன் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

67. வெள்ளி காலை ஜெபம்

எனக்காகப் பாடுபட்ட இயேசு சுவாமி, உமது திருச்சிலுவையினடியிலே வந்து நிற்கிறேன். என்பாவத்தினாலேதான் உமக்கு இந்தப் பாடுகள் வந்தன; என்னை மீட்கத் தேவரீர் இவ்வளவு அகோரவேதனைக்குள்ளானீரே. உமக்கு என்ன ஈடு செலுலிóதுவேன். ஆண்டவரே, உமது பாடுகளுக்குக்காரணமான சகல பாவத்தையும் பகைக்கவும், உமக்கு நன்றியறிந்தவனாய்ப் பிழைக்கவும் என்னில் உமதுநேசத்தை ஊற்றியருளும். உமது நேசத்தால் எனக்குப் பாவம் யாவும் கசக்கவும், உமது திருப்பாடுகளின்தியானத்தால் நான் எனக்குள் என் சகலத்தையும் என் ஜீவனையும் கூட உமக்கென்று இழந்துபோகஆயத்தமுள்ளவனாகவும் என்னைத் திருப்பியருளும். உமது சிலுவையின் மகத்துவத்தைஅறியாதிருப்பவர்களுக்கு அதை உமது சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தும். உமது சிலுவையின்சுவிசேஷத்துக்கு எதிர்த்து நிற்கும் சகல எதிரிகளின் துர்ஆலோசனையையும் அவத்தமாக்கியருளும்.நானும் என் வீட்டாரெல்லாரும் தேவரீர் அனுப்பும் சிலுவையை முறுமுறுக்காமல் சந்தோஷத்தோடுஏற்றுக்கொள்ளும் பொறுமையைத் தாரும். இந்நாள் முழுவதும் தேவரீர் என்னையும் என் வீட்டார்சிநேகிதர் உபகாரிகள் யாவரையும் உமது ஐக்கியத்திலே வைத்துப் பாதுகாத்தருளும். உமது சிலுவையின்மரணத்தினிமித்தமே என் ஜெபத்தைக் கேட்டருளும். சுவாமி, ஆமேன்.

———

68. வெள்ளி மாலை ஜெபம்

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே, எங்களுக்காக பலியான தேவஆட்டுக்குட்டியே, எங்கள்மேலிரங்கும். தேவகோபத்துக்குப் பாத்திரனாகிய எனக்காகப் பிணைபட்டீரே; என்னை முழுவதும் உமக்குக்கையளிக்கிறேன். தேவரீர் பிதாவின் சித்தத்துக்கு அடங்கினதுபோல் என் சித்தமல்ல, உமது சித்தமேஎன்னில் நிறைவேறவும், என் வழிகள் அல்ல, உமது வழிகள் என்னில் ஆயத்தமாகவும் உமக்கென்னைமுழுவதும் ஒப்புவிக்கிறேன். என்னை என்னுடைய சகல பாவங்களுக்கும் அக்கிரமங்களுக்கும்நீங்கலாக்கியருளும். தேவரீர் உம்மைத் துன்பப்படுத்தின சத்துருக்களுக்காகச் செபம் செய்தீரே. உம்மைப்பாடுபடுத்தின பாதகனாகிய எனக்காகவும் தேவரீர் பிதாவின் வலதுபாகத்தில் வேண்டுதல் செய்கிறீர்.ஆண்டவரே, பிறரிடத்தில் பழிவாங்கும் சுபாவத்தை என்னைவிட்டு முழுவதும் விலக்கியருளும்.யாவருக்கும் மன்னிக்கும் சிந்தையையும் நன்மை செய்யும் குணத்தையும் எனக்குத் தாரும். இந்த இரவிலேசாத்தானாவது வேறெந்த பொல்லாப்புமாவது என்னையும் எனக்கடுத்த யாவரையும் அணுக ஒட்டாமல்பாதுகாத்தருளும். உமது ஐந்து காயங்களினிமித்தம் என் ஜெபத்தைக் கேட்டருளும். சுவாமி, ஆமேன்.

———

69. சனி காலை ஜெபம்

கிருபை மிகுந்த பிதாவே, தேவரீர் கடந்த இரவில் என்னைச் சகல பொல்லாப்புக்கும் விலக்கி,இந்நாளைக் காணச் செய்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்நாளிலே நான் உமது பிள்ளையாய் நடக்கஎனக்கு உமது ஆவியின் ஒத்தாசையைத் தாரும். உமது திருக்குமாரனின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நான்உமக்குப் பிரியமாய் நடக்க என்னைப் பலப்படுத்தும். உமது நாமத்துக்கு அவமானமாகவும் உமதுதிருச்சபைக்கு இடறலாகவும் நடக்கும் மோசத்துக்கு என்னையும் சகல கிறிஸ்தவர்களையும் தூரமாக்கும்.உமது திருச்சபையிலுள்ள யாவரையும் உமது பரம சுதந்தரவாளிகளாக்கும். நான் மோட்சத்திலுள்ள நித்தியவாழ்வையே பெரிதாக மதித்து, உலக வாழ்வை அற்பமாக எண்ண என்னைப் பரமசிந்தையுள்ளவனாக்கும். லோகத்தை சிநேகித்து உமது சிநேகத்தை இழந்து போகும் மோசம் எனக்குண்டுஎன்பதைத் தேவரீர் அறிவீர். என்னையும் என் வீட்டாரையும் எங்களை அழைத்த பரிசுத்தரின்சாயலாக்கியருளும். இத்தேசத்தார் யாவரையும் உமது பிள்ளைகளாக்கியருளும். பிள்ளைக்கொத்தவிசுவாசத்தையும், நம்பிக்கையையும் என்னில் அதிகரிக்கச் செய்தருளும்; தேவரீர் எனக்குக் கிருபையாய்க்கொடுத்தருளிய நாளையும் நேரத்தையும் நான் உமக்குப் பொருந்தியபடி செலவிட அனுக்கிரகம்செய்தருளும் சுவாமி, ஆமேன்.

———

70. சனி மாலை ஜெபம்

மட்டில்லாத தயவுள்ள பராபரனே, கடந்த பகலிலும், சென்ற வாரம் முழுமையிலும் தேவரீர்எனக்குச் செய்து வந்திருக்கும் உபகாரம் மிகுதி. உமது உபகாரங்களில் எதுக்கும் நான் பாத்திரனல்ல. கடந்தவாரத்தில் நான் செய்திருக்கும் வேலையைப் பார்த்தால், என் கடமையை நான் உண்மையாய்ச்செய்யவில்லை என்று அறிக்கையிட வேண்டியவனாயிருக்கிறேன். உமது மகிமையைப் பார்க்கிலும் என்மகிமையை நாடும் சோதனை எனக்கு வந்தது என்பதையும் தேவரீர் அறிவீர். உள்ளிந்திரியங்களைஎல்லாம் அறிந்த ஆண்டவரே, என் பாவங்களுக்குத் தக்கபடி எனக்குச் செய்யாமலும், என் அக்கிரமங்களுக்குத் தக்கதாக எனக்குச் சரிக்கட்டாமலும் இரும். நான் நல்ல மனச்சாட்சியுள்ளவனாய்இவ்வாரத்தை முடிக்கும்படி தேவரீர் என் பாவங்களையெல்லாம் மன்னியும். நான் புதிய வாரத்தில்பிரவேசிப்பேனா என்று அறியேன்; ஆதலால் இப்பொழுதே என்னையும் என் வீட்டாரையும் முடிவுக்குநல்லாயத்தப்படுத்தியருளும். உம்மைச் சந்திக்க எப்போதும் ஆயத்தமானத் தாரும். உமது வருகைக்குக்கொஞ்சமேனும் கவலைப்படாத கிறிஸ்தவர்களை நிர்விசாரத்தினின்று எழுப்பியருளும். நாளைக்கு உமதுசபைக்கு வசனத்தைக்கூற ஆயத்தம் செய்யும் போதகருக்கு உமது ஆவியை அளித்துப்பலப்படுத்தியருளும். உமது வசனத்தைக் கேட்கச் சகல இருதயங்களையும் ஆயத்தமாக்கியருளும்.இன்பமாய் இளைப்பாறி ஜீவனோடும் சுகத்தோடும் எழுந்து, உமது திருநாளைக் காணக் கிருபைசெய்தருளும் சுவாமி, ஆமேன்.

 

 

______________________________________________________________
குடும்ப விசேஷங்களில் வாசிக்கத்தக்க
ஞான சங்கீதங்கள்
———

விவாகம்: 128
ஞானஸ்நானம்: 127
இக்கட்டுக்காலம்: 77
கொள்ளை நோய்: 91
பிரயாணம்: 121
துக்கம்: 90

 

______________________________________________________________
குடும்ப விசேஷ
ஜெபங்கள்

 

———

86. கலியாணம்

பரிசுத்த சமுசார மார்க்கத்தை ஏற்படுத்தின பராபரனே, உமது திருநாமத்தை முன்னிட்டுத்திருச்சமுசார மார்க்கத்தில் பிரவேசித்த இந்த உமது பிள்ளைகளைக் கிருபையாய்க் கண்ணோக்கிஆசீர்வதியும். அவர்களைத் தேவரீர் இம்மட்டும் தாங்கி ஆதரித்தீர். அவர்கள் பிரவேசித்த இந்தச் சமுசாரமார்க்கத்திலும் தேவரீர்தாமே அவர்கள் ஆதரவாயிரும். அவர்களை உமக்கு மகிமையும் திருச்சபைக்குஅலங்காரமுமாயிருக்கப்பண்ணும்.  தேவரீர்தாமே அவர்கள் வீட்டைப் பலமாகக் கட்டி, அவர்களுக்குநற்சுகத்தையும், பலத்தையும், தீர்க்காயுசையும், புத்திரசந்தானத்தையும், சமுசார மார்க்கத்துக்குத் தேவரீர்வாக்குத்தத்தம் பண்ணின சகல பாக்கியத்தையும் பரிபூரணமாய்க் கட்டளையிடும். அவர்களைவிசேஷமாய் மெய்விசுவாசத்திலும் அனலான சிநேகத்திலும் காப்பாற்றி, அவர்கள் மோட்சசுதந்தரவாளிகளாகும்படி கிருபை செய்தருளும். கானாவூர் கலியாணத்தை ஆசீர்வதித்த அருமை ரட்சகரைமுன்னிட்டு இந்த ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

87. குழந்தை ஞானஸ்நானம்

பிதா, குமாரனே, பரிசுத்தஆவியாகிய திரியேக பராபரனே, தேவரீர் இந்த ஏழைப்பிள்ளையைபரிசுத்த ஞானஸ்நானத்தின் வழியாய் உமது பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உமது சொல்லரியகிருபைக்காக உமக்கு அனந்த ஸ்தோத்திரம். இக்குழந்தையை முடிவுபரியந்தம் உமது கிருபையில்தற்காத்தருளும். அதன் சரீர வளர்த்தியோடு ஞானவளர்த்தியும் கூடிவரப்பண்ணும். இது உம்மை அறிகிறஅறிவிலும், மெய் விசுவாசத்திலும் வளர்ந்து தேறும்படி இதை உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாரும்.இது திருச்சபையின் ஜீவனுள்ள அவயமும், தேசத்தின் உத்தமுமான குடியுமாய் வளரும்படி உமதுபரிசுத்தஆவியால் இதை நடத்தியருளும். இதன் பெற்றோரையும், இதைச் சேர்ந்த யாவரையும் தேவரீர்ஆசீர்வதித்து, அவர்களை ஆத்தும சரீர நன்மைகளால் நிரப்பியருளும். இயேசுவின் புண்ணியங்களைமுன்னிட்டு இந்த ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும், சுவாமி, ஆமேன்.

———

88. ஞானஸ்நான உடன்படிக்கைப்

புதுப்பிப்பு

இன்று நான் என் பரிசுத்த ஞானஸ்நான உடன்படிக்கையைப் புதுப்பித்து, பிசாசையும் அதன்எல்லாக் கிரியைகளையும், அதன் எல்லா வழிகளையும், இந்தப் பொல்லாத பாவலோகத்தையும், என் சுயபாவ மாமிசம் இரத்தத்தையும் அருவருத்து விட்டுவிடுகிறேன். பிதா, குமாரன், பரிசுத்தஆவியே உமதுகைகளில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் ஒப்புவிக்கிறேன். என் ஆத்தும, சரீர, நித்திய ஷேமத்தையும்,எனக்கருமையானவர்களின் ஷேமத்தையும் உமது பாதுகாப்புக்கு ஒப்படைக்கிறேன். என் பரம தகப்பனே,நான் என்னை உமது விசாரிப்பு, இரக்கம், அன்பு, உண்மைக்கு முற்றிலும் கையளிக்கிறேன். என்
இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவே, உமது புண்ணியம் நீதியால் என்னை உடுத்திக் கொள்ளுகிறேன். உமதுஅருமையான இரத்தமும், காயங்களும், ஐக்கியமும் அடியேனின் நம்பிக்கை. பரிசுத்தஆவியே,ஸ்தோத்தரிக்கப்பட்ட தேற்றரவாளனே, நான் உமது இரக்கமுள்ள நடத்துதலுக்கும், உமது பெலன்வெளிச்சம் ஆறுதலுக்கும் என்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறேன். திரியேக பராபரனே, தேவரீர்என்னுடையவர், நான் உம்முடையவன். தேவரீர் என் பிதா, நான் உமது பிள்ளை. தேவரீர் என் மேய்ப்பர்,நான் உமது ஆட்டுக்குட்டி. தேவரீர் என் கர்த்தரு, நான் உமது ஆள். என் பராபரனே, நான் உம்மைப்போந்தபடித் தோத்தரிக்க அறியேன். தேவரீர் நீசப்பாவியாகிய என்னை ஒரு பொருட்டாயெண்ணி, பரிசுத்தஞானஸ்நானத்தால் என்னை மறுபடியும் செனிப்பித்துக் கிறிஸ்து இயேசுவிலுள்ள இரட்சிப்பை எனக்குக்கொடுத்தருளினீரே. இந்த உமது கிருபையில் என்னை மரணபரியந்தம் காப்பாற்றும். என் பராபரனே,தேவரீரின் மீட்பு எல்லாக் காலத்திலும் பேய், பாவம் மரணத்துக்கு எதிராக என் ஆறுதலாயிருக்கப்பண்ணும். ஆ, நான் இதையே எல்லா உலக கனத்துக்கும் கீர்த்திக்கும் மேலாக மதித்து, கிறிஸ்துஇயேசுவுக்குள் நான் பாக்கியமாய் மரிக்குமளவும் நான் பெற்ற இரட்சிப்புக்கேற்றவண்ணம் பரிசுத்தமும்தேவபக்தியுமாய் சீவனம் பண்ணச் சுறுசுறுப்பாய் முயலுவேன். ஆ, பிதாவே உமது பரிசுத்த ஆவியின்பலத்தால், உமது நேசகுமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் என் ஜெபத்தை இரக்கமாய்க்கட்டளையிட்டருளும். இவையெல்லாவற்றிற்காகவும் திரியேக பராபரனாகிய உமக்கே கனம், துதி,தோத்திரம் என்றென்றைக்கும் உண்டாகக் கடவது, ஆமேன்.

———

89. இக்கட்டு நேர ஜெபம்

சர்வத்திற்கும் வல்ல பராபரனே, நெருக்கப்படுகிற நாழியிலே, நம்மை நோக்கிக் கூப்பிடு,அப்பொழுது உம்மை விடுவிப்போம், அதற்காக நீ நம்மை மகிமைப்படுத்தக்கடவாய் என்று தேவரீர்கிருபையாய்த் திருவுளம் பற்றினீரே. இதோ, அடியேன் நெருக்கத்தில் இருக்கிறேன். என் கூப்பிடுதலுக்குச்செவிகொடும். தேவரீர் எனக்கு அனுசாரியாயிருந்தால் எனக்கு விரோதமாயிருப்பவனார்? கர்த்தாவே,எனக்கிரங்கும். என் பாவங்களுக்குத் தக்கபடி செய்யாமல், உமது கிருபையின்படி என்னைக் கண்ணோக்கிப்பார்த்து, என்னை என் இடுக்கண்களுக்கு நீங்கலாக்கி விடுவியும். அக்கினிச் சூளையில் நின்று கூப்பிட்டஅந்த நீதிமான்களுக்கு மாத்திரமல்ல, காவற்கிடங்கிலிருந்து கூப்பிட்ட காதகனாகிய மனாசேக்கும்இரங்கினவரே, பாவியாகிய எனக்கும் சகாயம் செய்யத் தீவிரியும். எல்லாக் காலத்திலும் என் விசுவாசம்தள்ளம்பாறாமல் என்னைக் காத்திரட்சித்தருளும். பாவிகளை இரட்சிக்க இவ்வுலகத்தில் வந்த உமதுதிருக்குமாரனாகிய இயேசுவின் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.

———

77. துக்கம்

இயேசையரே, தேவரீர் துக்கத்தில் ஆறுதலாயிருக்கிறீர் என்று அறிந்து, இந்த நேரத்தில் உம்மண்டைஓடிவருகிறோம். மரணத்தினால் இங்கே நேரிட்டிருக்கும் துக்கத்தில் எங்களையும், விசேஷமாய் இந்தவீட்டாரையும் கண்ணோக்கிப் பார்த்து, அழாதோயுங்கள் என்று சொல்லி, உமது நல்லாறுதலால்நிரப்பியருளும். நாங்கள் நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் துக்கப்படாமல், கர்த்தருக்குள் சாகிறமரித்தோர் பாக்கியவான்கள் என்பதை நாங்கள் நம்பி ஆறுதலடையப்பண்ணும். கண்ணீர்விடுகிறவர்களுக்கு உமது பரிசுத்தஆவியை அருளி, அவர்களை மகிழ்ச்சியினால் நிரப்பியருளும். எங்கள்மரணநேரம் எப்பொழுது என்று நாங்கள் அறியாமையால், நாங்கள் அதற்கு ஆயத்தமுள்ளவர்களாய்எந்நேரமும் விழித்திருக்கப்பண்ணும். நாங்கள் இவ்வுலகில் இருக்குமளவும் எங்கள் இரட்சகரைப் பற்றும்மெய்விசுவாசத்தில் பிழைக்கவும், தேவரீர் எங்களை அழைக்கும்போது நித்திய சீவநம்பிக்கையோடுபாக்கியமாய் மரிக்கவும் எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும், சுவாமி, ஆமேன்

———

78. பிரயாணம்

கர்த்தாவே, நான் உமது திருநாமத்தை முன்னிட்டு என் வீட்டிலிருந்து புறப்படுகிறேன். என்பயணத்தில் தேவரீர் என்னோடுகூட வாரும். பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித் தூணிலுமிருந்துநீர் உமது சனத்தைக் காத்து நடத்தினதுபோல் என்னையும் நடத்தியருளும். என் பிரயாணத்தை நீர்வாய்க்கப்பண்ணி, நான் சந்தோஷத்தோடு என் வீட்டுக்குத் திரும்பிவரக் கிருபை செய்யும். தேவரீர் என்வீட்டாரோடும் இருந்து அவர்களைப் பாதுகாத்து, நான் அவர்களை சீவனோடும் சுகத்தோடும் கண்டுசந்திக்கப்பண்ணும். நான் இப்பூமியில் தங்குமளவும் அரதேசியும் பரதேசியுமாயிருக்கிறேன் என்பதைநினைத்து, மோட்சமாகிய என் சுதேசத்துக்குப் போய்ச் சேர்வதற்கான பாதையிலே நடக்கும்படி உமதுபரிசுத்தஆவியால் என்னை நடத்தியருளும் சுவாமி, ஆமேன்.

———
79. வேதவாசிப்புக்கு முன்

கர்த்தாவே, உம்முடைய வேதத்தில் உள்ள அதிசயங்களை நான் பார்க்கிறதற்காக என் கண்களைத்திறந்தருளும் சுவாமி, ஆமேன்.

———

80. வேதவாசிப்புக்குப் பின்

நான் இப்பொழுது வாசித்த உமது வசனம் என்னிருதயத்தில் நன்றாய்த் தரித்து வேரூன்றி நித்தியசீவனுக்கென்று திரளான கனிகளைக் கொடுக்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.

அன்புள்ள கர்த்தராகிய பராபரனே, உமது பிதாவடைவான தயவுகள் சொல்−முடியாதவைகளென்று நான் திரும்பத் திரும்பக் கண்டு உம்மை மகிமைப்படுத்துகிறேன். என்னைப் பெற்றுவளரக்கத் தாய்தகப்பன்மாரையும், என்னைப் போதிக்கப் போதகமாரையும், என்னை ஆண்டு நடத்தஅதிகாரிகளையும், எனக்கு வேலை கொடுத்துப் பராமரிக்கும் எசமான்களையும் கட்டளையிட்ட உமதுபெரிய உபகாரத்துக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் எனக்கு மேலாக வைத்திருக்கும் யாவரையும்ஆசீர்வதியும். அவரவர் தம்தம் அழைப்பில் உண்மையாயிருந்து, அதைச் சரியாய் நிறைவேற்றுவதற்கானவரத்தையும் பலத்தையும் தந்தருளும். திருச்சபையிலுள்ள தாய்தகப்பன்மார் யாவரும் தங்கள் பிள்ளைகளைஉமக்குப் பயப்படுகிற பயத்திலும், உம்மை சிநேகிக்கிற சிநேகத்திலும் வளர்க்க உமது ஆவியின்ஒத்தாசையைக் கட்டளையிடும். கர்த்தாவே, நான் இன்றைக்குச் செய்யப்போகிற வேலையில் தேவரீர்என்னோடிரும். நான் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதிலெல்லாம் தேவரீருடைய மகிமையையும்,பிறத்தியாருடைய நன்மையையும் தேடப்பண்ணியருளும். என் உட்சீர் புறச்சீர் யாவும் அறிந்த கர்த்தாவே,என்னை நன்மைக்கென்று நினைத்தருளும் சுவாமி, ஆமேன்.

18. திங்கள் மாலை ஜெபம்என் நேசமுள்ள கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே, இந்த நாள் மறுபடியும் உமது ஒப்பற்றஅன்புக்குச் சாட்சியானதை அறிந்து உமது திருநாமத்தை ஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் என்னைப்பராமரித்திராதேபோனால் நான் செத்துப் போயிருப்பேன். தேவரீர் என்னைத் தாங்கியிராவிட்டால், வேலைசெய்திருக்கமாட்டேன். ஆண்டவரே, இன்று நான் என் ஊழியத்தில் காண்பித்த சோம்பலையும் உண்மைத்தாழ்ச்சியையும் எனக்கு இரக்கமாய் மன்னித்தருளும். கீழ்ப்படிகிற இருதயத்தையும், உம்முடைய வழிகளில்நடக்கும் சிந்தையையும் அடியேனுக்குத் தந்து, நான் பரிசுத்தத்தில் வளர்ந்து தேறக் கிருபை செய்தருளும்.தேவரீர் நியாயந்தீர்க்க வரும்போது நான் திகிலும் பயமும் நிறைந்தவனாய் நிற்காமல், என் இரட்சகராகியஉம்முடைய நீதியைத் தரித்து உமது சந்நிதானத்தில் தைரியமாய் நிற்கவும், உத்தமமும் உண்மையுமுள்ளஊழியக்காரா, நீ கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அனேகத்தின்மேல் உன்னை அதிகாரியாய்வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்ற சொல்லை உமது திருவாயால் நான்கேட்கக்கூடியவனாயிருக்கவும் சகாயம் பண்ணும். இந்த இரவில் என்னை பொல்லாத சொப்பனங்களுக்கும்,பயங்கர வியாதிகளுக்கும், அசுப்பான துன்மரணத்துக்கும் விலக்கமாய்க் காத்தருளும். இயேசுவே, தாவீதின்குமாரனே, நான் உமது ஐந்துகாயக் கோட்டையில் பத்திரமாய் இளைப்பாறி, நற்சுகத்தோடும்சந்தோஷத்தோடும் மறுநாளில் எழுந்திருக்க எனக்குக் கிருபை செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ19. செவ்வாய் காலை ஜெபம்இரக்கமுள்ள பிதாவே, தேவரீர் எனக்கு சரீரத்தையும் ஆத்துமத்தையும் கொடுத்தருளினதுமன்றி,என்னை இன்றளவும் ஜீவனோடும் சுகத்தோடும் காத்து வந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம், சிநேகமாகியபராபரனே, என்னை மெய் சிநேகத்தால் நிரப்பியருளும். பகை, கோபம், எரிச்சலாகிய பொல்லாதபாவங்களுக்கு என்னை விலக்கிக் காரும். பிறத்தியாருடைய நல்நிலைமையையும் சுகவாழ்வையும் பார்த்துப்பொறாமைப்படுகிறவர்களின் சதியோசனைக்கு என்னை நீங்கலாக்கும். தேவரீர் உமது அன்பின் ஆவியைஎன் இருதயத்தில் ஊற்றி, என்னில் பொறாமை உண்டாகாதபடிக்குக் கிருபை செய்யும். நான் சகலதுர்க்குணத்தையும் அருவருத்துத் தள்ளுவதற்கான பெலனை எனக்குத் தாரும். உமக்குப் பிரியமான சகலநற்குணமும் என்னில் வளரக்கூடும்படிக்குத் தேவரீர்தாமே என்னில் வாசம்பண்ணியருளும். இந்தநாளிலும், நான் உயிரோடிருக்கும் எல்லா நாளிலும் யாவருக்கும், விசேஷமாய் விசுவாசத்தின்வீட்டாருக்கும் நன்மை செய்கிறவனாயிருக்கப்பண்ணும். இயேசு ராஜாவே, உமது அன்பு என்னை ஆண்டு,உமது ஞானம் என்னை நடத்துவதாக. உத்தமமும் நிதானமும் என்னைக் காக்கக் கடவது. உம்முடையபாடுகள் மரணம் உயிர்த்தெழுத−ன் நிமித்தம் என் கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து என்னைஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

20. செவ்வாய் மாலை ஜெபம்கர்த்தராகிய பராபரனே, இன்று பகலெல்லாம் என்னை ஆதரித்தவரே. இந்த இரவிலும் என்னைஉமது திருக்கரத்தில் ஒப்புவிக்கிறேன். என்னைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். பிதாவே, இன்று நான்உமது திருச்சித்தத்துக்கு ஏற்க நடவாமல், உமது கோபத்துக்கு என்னைப் பாத்திரனாக்கினேன். எனக்குஇரங்கும் கர்த்தாவே. என் பாவங்களை எனக்கு மன்னித்தருளும், இயேசுவே. தேவரீர் என்னை உமதுஐக்கியத்தில் ஏற்றுக் கொண்டு, உமக்கு என்னைச் சாயலாக்கியருளும். துஷ்டருக்குச் சாந்தத்தையும்,பகைஞருக்குச் சிநேகத்தையும், சத்துருக்களுக்குப் பொறுமையையும் காண்பிக்க எனக்குப் பெலன் தாரும்.அந்தி நேரமாகிய இப்பொழுது சூரிய வெளிச்சம் விலகிப் போயிற்று. தேவரீர் என்னை விட்டுவிலகாதேயும். எல்லாக் கண்களும் மூடிவிட்டன. உமது திருக் கண் என்பேரில் திறந்திருப்பதாக. இந்தஇரவிலே தேவரீர் என் வீட்டிலும் இருதயத்திலும் தங்கி, ஆத்துமத்துக்கும் சரீரத்துக்குமுரிய சகலவிக்கினங்களுக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். நல் நினைவுகளும் எண்ணங்களும் விருப்பங்களுமேஎன் இருதயத்தை நிரப்பி ஆளக்கடவது. கர்த்தாவே, உமக்கு சித்தமுண்டானால், நான் மறுத்தினத்தையுங்கண்டு, உம்மைத் தோத்தரித்து மகிமைப்படுத்தத் தயை புரியும். தேவரீருக்கு நித்தம் காத்திருக்கிறேன்,சுவாமி, ஆமேன்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ21. புதன் காலை ஜெபம்தேவ திருச்சுதனாகிய இயேசுநாதரே, சென்ற இரவில் என்னைச் சேதமறக் காப்பாற்றின உமதுதிருநாமத்துக்கு ஆயிரந்தரம் சங்கீர்த்தனம். இப்பக−லும் என்னைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு, தாங்கி,ஆசீர்வதியும். உம்மையல்லாமல் நான் ஒரு நன்மையும் செய்யக்கூடாதவனாயிருக்கிறேன். தீவிதிராட்சைச்செடியாகிய உம்மில் என்னைக் கொடியாய் நிலைத்திருக்கப் பண்ணும். அப்பொழுது நான்பரமபிதாவின் திருச்சித்தத்துக்குப் பொருந்தின நற்கனிகளைக் கொடுக்கக்கூடியவனாயிருப்பேன்.ஆண்டவரே, நான் இந்த அசுத்த லோகத்தால் தீட்டுப்படாமல், கற்பும் சுத்தாங்கமுமாய் நடக்கத்துணைபுரியும். அசுத்தப் பார்வையால் நான் தீட்டாகாதபடி என் கண்ணையும், அசுத்தக் கேள்வியால் நான்தீட்டாகாதபடி என் காதையும், அசுத்தப் பேச்சால் நான் தீட்டாகாதபடி என் நாவையும் காவல்காரும்.எல்லாக் காவலைப் பார்க்கிலும் விசேஷமாய் என் இருதயத்தைக் காத்து அதைப் பிசாசு, லோகம்,மாமிசமென்ற சத்துருக்கள் கெடுத்துப்போடாதபடி கிருபை செய்யும். நான் போசனத்திலும் பானத்திலும்உடையிலும் நடையிலும் மட்டு மேலரயாயிருப்பதற்கு ஒத்தாசை புரியும். இன்று என்னை உமதுதிருச்சித்தத்திற்குப் பொருந்திய பாதையிலே நடத்தியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ22. புதன் மாலை ஜெபம்பரிசுத்த வஸ்துவாகிய இயேசுவே, இந்த ஏழைப் பாவிக்கு இரங்கும். நான் சிறுவந்தொட்டுஇற்றையில்வரைக்கும் செய்த எல்லாப் பாவங்களையும் எனக்கு இரக்கமாய் மன்னித்து, உமது பரிசுத்தஇரத்தத்தால் என்னைக் கழுவிச் சுத்திகரியும். இந்த இரவில் என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும்உமது திருக்கரத்தில் ஒப்புவிக்கிறேன். யாவரையும் இரக்கமாய்ப் பார்த்தருளும். விசேஷமாய், சகலசமுசாரிகளையும் கண்ணோக்கிப் பாரும். யாவரிடத்திலும் விவாகம் கனமாக எண்ணப்பட்டு, விவாகமஞ்சம்தீட்டில்லாதிருக்கக் கடவது. தேவரீர் விபச்சாரக்காரரையும் வேசிக்கள்ளரையும் அருவருத்து நியாயந்தீர்க்கிறபரிசுத்தமுள்ள தேவனென்றும், அவைகளை நடப்பிக்கிறவர்களைத் தேவரீர் அழிப்பீரென்றும் யாவரும்அறிந்து, அவைகளுக்கு விலகியிருக்கக் கிருபை பண்ணும். இந்த இரவில் தேவரீர் என்னையும் எல்லாக்கிறிஸ்தவர்களையும் உம்முடைய சிறகுகளாலே மூடி, இரவின் அருக்களிப்புக்கும், இருளில் நடமாடும்பெருவாரிக்காய்ச்சலுக்கும் விலக்கமாய்க் காத்தருளும். என்னை இந்த இரவில் பரிசுத்த நினைவுகளாலும்,நல்ல தியானிப்பாலும் பிரயோஜனமுள்ள யோசனைகளாலும் நிரப்பியருளும். கர்த்தாவே, உம்மைப் போல்என்னைப் பாதுகாப்பார் ஆருமில்லை என்று அறிந்து, நம்பிக்கையோடு படுத்து, அமைதாக இளைப்பாறி,மகிழ்ச்சியோடு எழுந்திருந்து உம்முடைய திருநாமத்துக்குத் துதி செலுத்துவேன், சுவாமி ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ23. வியாழன் காலை ஜெபம்சர்வத்திற்கும் வல்ல அநாதி பராபரனே, இதோ, காலை ப−யாக என் நன்றியறிந்த ஸ்தோத்திரத்தைஉமக்குச் செலுத்துகிறேன். இயேசுவின் நிமித்தம் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். நானும், எனக்கு உள்ளதுஉரியது யாவும் உமக்குச் சொந்தம் என்று நான் அறிந்திருக்கிறேன். உமக்குச் சொந்தமானதை உமக்குமகிமையாகவும் உமது பிள்ளைகளுக்கு நன்மையாகவும் கையாட என்னை உமது பரிசுத்தஆவியால்ஏவியெழுப்பியருளும். கர்த்தாவே, அந்நிய சொத்து எதுவும் என்னிடத்தில் வந்து சேராமலும் அதனால்

எனக்கு சாபம் லபிக்காமலும் இருக்கத்தக்கதாகத் தேவரீர் என் காவலாளியாயிரும். நான் ஒருபோதும்யாருக்கும் பாரமாயிராமல், என் முடிவுமட்டும் என் சொந்தப் பிரயாசையால் சாப்பிடும்படிக்கு எனக்குவேண்டிய சுகத்தையும், பலத்தையும் உண்மையையும் கட்டளையிடும். கர்த்தாவே உம்மை என்அடைக்கலமும், என் கோட்டையும், நான் நம்பியிருக்கிற என் பராபரனும் என்கிறேன். தேவரீர் என்னைப்பக−ல் பறக்கும் அம்புக்கும், மத்தியானத்தில் பாழ்க்கடிக்கும் சங்காரத்திற்கும் விலக்கமாய்க் காத்தருளும்.கருணாநிதியே, இன்று காலமே உமது கிருபையை நான் கேட்கப்பண்ணும், ஏனெனில் உம்மைநம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு அறிவியும். ஏனெனில் உம்மண்டைக்கு என்ஆத்துமத்தை உயர்த்துகிறேன், சுவாமி ஆமேன்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ24. வியாழன் மாலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, இந்நாள் முழுவதும் தேவரீர் என்னோடிருந்து எனக்கு ஒருபொல்லாப்பும் நேரிடாமல் காத்து, இந்த இளைப்பாற்றி நேரத்துக்குக் கொண்டுவந்து சேர்த்ததற்காக உம்மைஸ்தோத்தரிக்கிறேன். இன்று நான் என் ஊழியத்தில் காண்பித்த உண்மைத்தாழ்ச்சியையும் சோம்பலையும்நான் செய்த என் எல்லாப் பாவங்களையும் தேவரீர் எனக்குக் கிருபையாய் மன்னித்தருளும். தேவரீர்எனக்கு இரங்குவதுபோல் நானும் பிறனுக்கு இரங்கவும், வெறும் பேச்சால் மாத்திரம் அல்ல,நற்செய்கையால் அவனுக்கு இரக்கம் காண்பிக்கவும் தேவரீர் எனக்கு ஒத்தாசை பண்ணும். பொழுதுசாய்ந்த இந்த நேரத்தில் நான் ஆரண்டைக்குப் போவேன். என் ஒன்றான தகப்பனும் ஆதரவுமாகியஉம்மண்டைக்கே ஓடிவருகிறேன். இதோ, கர்த்தாவே உம்மை எப்போதும் எனக்கு முன்பாக வைத்துக்கொள்ளுகிறேன். தேவரீர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் அசைக்கப்படாதிருப்பேன். என்கர்த்தராகிய இயேசுவே, உம்மைப்பற்றி, உம்மில் நிலைத்திருக்கும் திடவிசுவாசத்தை எனக்குத் தந்து,என்னையும் எனக்கடுத்த எல்லாரையும் தற்காத்து இரட்சிக்கும்படி, உமது ஐந்து காயங்களை முன்னிட்டுஉம்மைப் பணிவாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ25. வெள்ளி காலை ஜெபம்எனக்காகப் பாடுபட்ட என் அருமை ரட்சகரே, நான் அதிகாலையில் உம்மை நினையாமல் யாரைநினைப்பேன். உம்மைத் துதியாமல் யாரைத் துதிப்பேன். இன்று தேவரீர் என்னைக் கண்ணோக்கிப் பார்த்து,உமது திருப்பாடுகளின் புண்ணியத்தை அடியேனுக்குப் ப−தமாக்கியருளும். என்னை உமது உள்ளானஐக்கியத்தில் ஏற்றுக் கொண்டு உமது மகிமைக்கு என்னைப் பங்காளியாக்கும். சத்தியத்துக்குச் சாட்சிகொடுக்க வந்த இயேசுவே, என்னை சத்தியவானாக்கியருளும். நான் எல்லாக் காலத்திலும் என்வாக்கினாலும் நடக்கையினாலும், என் பாடுகள் மரணத்தாலுங்கூட சத்தியத்துக்கு சாட்சி கொடுக்கப்பண்ணும். பொய்யினாலும், பொய்யராலும் நிறைந்திருக்கும் என் ஏழை தேசத்துக்காகத் தேவரீர் பரிதபித்து,அதைச் சத்தியத்தின் அறிவுக்குக் கொண்டுவந்து சேர்த்தருளும். என் நாவைப் பொல்லாப்புக்கும் என்உதடுகளைக் கபட்டு வசனிப்புக்கும் விலக்கமாய்க் காரும். இந்தப் பக−ல் நான் என் கடமையைச் சரியாய்நிறைவேற்றப்பண்ணும். பொய், தூஷணம், அவதூறுகளால் நான் என்னைத் தீட்டாக்காமலும்,எவ்விதத்திலும் என் சகோதரருக்கு இடறல் உண்டாக்காமலும் தேவரீர் என்னைத் தற்காத்தருளும். நீர்உம்முடைய முகத்தை உம்முடைய ஊழியக்காரன் மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலேஎன்னை இரட்சியும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ26. வெள்ளி மாலை ஜெபம்இரக்கமுள்ள பரம தகப்பனே, இன்று தேவரீர் அடியேனுக்குச் செய்துவந்த எல்லாஉபகாரங்களுக்காகவும் நான் செலுத்தத்தக்க ஈடென்ன. என் நொறுங்குண்ட இருதயத்தையே உமக்குஅந்திப்ப−யாக ஒப்படைக்கிறேன். தேவரீர் அதைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். உமதுதிருக்குமாரனின் பரிசுத்த இரத்தத்தினால் அதைக் கழுவிச் சுத்திகரித்து ஆற்றித் தேற்றியருளும். எனக்குஉமது பரிசுத்தஆவியைக் கொடுத்து, நான் சுத்த இருதயத்தினாலும் சுத்தநாவினாலும் உம்மைமகிமைப்படுத்தப்பண்ணும். எனக்கு இந்த இரவில் நல் இளைப்பாறுதலைத் தாரும். என் புறக்கண்தூங்கினாலும் என் அகக்கண் தூங்காமல் எந்நேரமும் விழித்திருக்கவும் நான் உம்மோடு சஞ்சரித்து உமதுஐக்கியத்தில் நிலைத்திருக்கவும் பண்ணும். தேவரீர் இந்த இரவில் என்னை உமது சிநேகக்கரத்தால்அணைத்து, உமது கிருபை செட்டையால் மூடி, எனக்கு நல் இளைப்பாறுதலையும் சுகநித்திரையையும்தந்தருளும். தேவரீர் என்னை அழைக்கும்போது என் அருமை ரட்சகருடைய திருப்பாடுகளின்புண்ணியத்தால் அலங்கரிக்கப்பட்டவனாய் உமது மகிமையில் பிரவேசிக்க எனக்கு சகாயம் செய்வீராக.

உம்மையே நம்பியிருக்கிறேன், என்னைக் கைவிடாதேயும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ27. சனி காலை ஜெபம்என் ஒன்றான மீட்பராகிய இயேசுநாதரே, தேவர்களில் உமக்கு ஒப்பானவன் ஆர். பரிசுத்தத்தில்மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்குஒப்பானவன் ஆர். உமது கிருபையால் நான் சென்ற இரவில் இளைப்பாறி இந்தப் புதுப்பகலைக் கண்டேன்.உமக்கு அனந்த ஸ்தோத்திரம். கர்த்தாவே, நான் துர்க்குணத்தில் உருவானவன். பாவத்தில்கர்ப்பந்தரிக்கப்பட்டவன் என்பதைத் தேவரீர் அறிந்திருக்கிறீர். என் இருதயத்தின் தோற்றுதல்சிறுவயதுமுதல் நித்தம் பொல்லாததாய் இருக்கிறது. இரட்சகரே, தேவரீர் எனக்கு இரங்கி, உமதுபரிசுத்தஆவியை எனக்குத் தந்து, நான் என் பொல்லாத ஆசை இச்சகளைச் சிலுவையில் அறைகிறதற்குத்துணை செய்தருளும். இந்த நாளில் நான் என் இரட்சிப்பைப் பயத்தோடும் நடுக்கத்தோடும்நடப்பிக்கத்தக்கதாக உமது ஆவி என் பலமும், உமது வசனம் என் வழிகாட்டியுமாயிருக்க விரும்புகிறேன்.இயேசுவே, என் விருப்பத்தை நிறைவேற்றியருளும். தேவரீர் உமக்குப் பயந்தவர்களுக்குவைத்திருக்கிறதும், உம்மை நம்புகிறவர்களுக்கு நீர் உண்டுபண்ணினதுமான நன்மைகளை அடியேனும்அனுபவிக்கச் செய்தருளும். கர்த்தாவே, உம்மை நோக்கியிருக்கிறேன். உமது திருச்சித்தத்தின்படி எனக்குஆகக்கடவது, சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ28. சனி மாலை ஜெபம்சகல நன்மைகளுக்கும் காரணராகிய பராபரனே, சென்ற பக−லும், சென்ற வாரம் முழுமையிலும்தேவரீர் எனக்குச் செய்துவந்த உபகாரங்களுக்காக உம்மைப் புகழ்ந்து போற்றுகிறேன். உமது தயவை நான்நினைக்கும்பொழுது, என் பாவத்தையும் நன்றிக்கேட்டையும் நினைத்து துக்கப்படுகிறேன். ஆண்டவரே,நான் உமது கற்பனைகளை மீறினதால் உமது உபகாரங்களில் எதுக்கும் நான் பாத்திரவானல்லவென்றுஅறிக்கையிடுகிறேன். தேவரீர் எனக்கிரங்கி, என் பேரில் உமது திருக்கரத்தை வைத்து: மகனே, திடன்கொள்,உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று அடியேனுக்குச் சொல்லும். அப்பொழுது நான்சந்தோஷத்தோடு படுத்துச் சமாதானமாய் இளைப்பாறுவேன். இயேசுவே, நான் மரணநிழ−ன்பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். ஏனென்றால் உம்முடைய கோலும் உம்முடையதடியும் என்னைத் தேற்றுகிறது. ஆண்டவரே, தங்கள் முடிவை நினையாமலும் அதற்குத் தங்களைஆயத்தப்படுத்தாமலும் இருக்கிற நிர்விசாரிகளுக்குத் தேவரீர் இரங்கி, அவர்களைத் தட்டியெழுப்பி,அவர்களுக்கு மெய்யான குணப்படுதலைக் கட்டளையிடும். இந்த இரவில் நான் என்னையும், என்சகோதரரான சகல கிறிஸ்தவர்களையும் உமது பாதுகாப்புக்கு ஒப்புவிக்கிறேன். உமது அடியாரைக்கிருபையாய் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜமூன்றாம் வாரம்ஜஜஜஜஜஜஜஜஜ29. ஞாயிறு காலை ஜெபம்ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவே, தேவரீர் ஞாயிற்றுக்கிழமை மரித்தோரில் இருந்துஎழுந்ததால், நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உமது உயிர்த்தெழுதலை நினைத்து உம்மைமகிமைப்படுத்த எனக்கு பெலன் தாரும். உம்மையல்லாமல் நான் பாவி, உம்மாலோ நான் நீதிமான்.உம்மையன்றி நான் மரணத்துக்குள்ளானவன், உம்மாலோ நான் சீவனைப் பெற்றவன். கர்த்தாவே, தேவரீர்எனக்கு சம்பாதித்த நீதியையும் ஜீவனையும் நான் எப்போதும் வாஞ்சிக்கத்தக்கதாய் என் பாவக்கேட்டைநான் உணர்ந்துகொள்ளப் பண்ணும். வெளிச்சம் உண்டாகக்கடவது என்றவுடனை வெளிச்சம்உண்டானதுபோல் உமது வசனத்தால் என் இருண்ட இருதயத்தில் இன்று வெளிச்சம் உதிக்கப்பண்ணும்.ஆண்டவரே, இன்று உமது வசனத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கிறதற்கு என் கண்களைத்திறந்தருளும். தங்கள் பாவ நிர்ப்பந்தத்தையும், நியாயத்தீர்ப்பையும், நரகக் கொடுமையையும் நினையாமல்காலங்கழிக்கும் நிர்விசாரரைத் தேவரீர் உமது வாக்கின் வல்லபத்தால் குணப்படுத்தியருளும். கர்த்தாவேஎன்னைத் திருப்பும், அப்பொழுது திரும்புவேன்; என்னை நடத்தும், அப்பொழுது நடப்பேன்; என்னைஇழும். அப்பொழுது பின்செல்லுவேன். நீர் இந்தத் திருநாளின் ஆசீர்வாதத்தை எனக்கும் எல்லாக்கிறிஸ்தவர்களுக்கும் பரிபூரணமாய்க் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

30. ஞாயிறு மாலை ஜெபம்திரியேக பராபரனாகிய கர்த்தாவே, தேவரீர் என்நை இன்று முழுவதும் காப்பாற்றி, என்ஆத்துமத்தையும் சரீரத்தையும் போஷித்து ஆசீர்வதித்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இத்திருநாளில்நான் அறிந்தும் அறியாமலும் செய்த எல்லாப் பாவங்களையும் தேவரீர் கிருபையாய் மன்னித்து, நான்சமாதானமும் சந்தோஷமுமாய் இந்நாளை முடிக்கப்பண்ணியருளும். என் நேசமுள்ள ரட்சகர் சம்பாதித்தநீதியால், என்னைப் போர்த்து, அவருடைய சகல ஆசீர்வாதங்களாலும் என்னை நிரப்பியருளும். உம்மால்ஆசீர்வதிக்கப்பட்டவனை யார் சபிக்கக்கூடும். கிறிஸ்துவின் நீதியைப் போர்த்தவனை யார் குற்றஞ்சாட்டலாம். இந்த விசுவாசத்திலே என்னைப் பாதுகாத்தருளும். இந்த இரவில் நான் என்னையும், என்உபகாரிகள் பெரியோர் சிநேகிதரையும் உமது திருக்காப்புக்கு ஒப்படைத்து, இளைப்பாறி நித்திரை செய்யப்போகிறேன். உமது கிருபையும் ஆசீர்வாதமும் என்பேரிலும், என்னை ஜெபம் செய்யக் கேட்டுக்கொண்டயாவர் பேரிலும் வந்து தங்குவதாக. கர்த்தாவே எனக்கிரங்கும், கிறிஸ்துவே எனக்கிரங்கும், கர்த்தாவேஎனக்கிரங்கும் ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ31. திங்கள் காலை ஜெபம்எல்லா நல்லீவுகளுக்கும் ஊற்றாகிய பராபரனே, போன இரவிலே யாதொரு மோசமும் எனக்குநேரிடாமல் பாதுகாத்த உமது கிருபையை வணங்கித் தோத்தரிக்கிறேன். என் ஆத்துமத்தையும் சரீரத்தையும்உமது அரவணைப்பில் ஏற்றுக் கொள்ளும். உமது கிருபையையும் ஆசீர்வாதத்தையும் எனக்குக்கட்டளையிடும். இன்று நான் பாவத்துக்கு நீங்கலாயிருந்து, என் வேலையையெல்லாம் உமக்கேற்றவிதமாய்ச்செய்யும்படி எனக்கு மெய்விசுவாசத்தைத் தந்து என்னை அதிலே காப்பாற்றியருளும். விசுவாசத்தைத்துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவே, தேவரீர் என் அந்தகாரப்புத்தியைத் தெளிவாக்கும். என்துர்ச்சித்தத்தை உமக்குக் கீழ்ப்படுத்தும். நல்லுணர்வை எனக்குள் உண்டுபண்ணும். நீர் என்னைச் சோதித்து,என் சிந்தனைகளை அறிந்துகொண்டு, என்னில் வேதனை உண்டாக்கும் வழி உண்டோவென்று பார்த்துஎன்னை நித்திய வழியிலே நடத்தும். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றுதிருவுளம்பற்றின உம்மிடத்திலே நான் எக்காலமும் உண்மையாய் நிலைத்திருக்கப்பண்ணும். எனக்கு என்னகுறைந்த போதிலும், உம்மைப் பற்றும் விசுவாசம் ஒருபோதும் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துவரக்கிருபை செய்தருளும். இன்று நான் செய்யும் வேலைகளையெல்லாம் தேவரீர் நலமாக முடியப்பண்ணி,சகலவிதப் பொல்லாங்குகளுக்கும் என்னை விலக்கமாய்க் காத்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ32. திங்கள் மாலை ஜெபம்கர்த்தாவாகிய பராபரனே, உம்மை நம்பி இன்று காலையில் எழுந்தேன். உமது கிருபையால் ஒருபகலைப் போக்கினேன். இப்பொழுது உமது அடைக்கலத்தில் இளைப்பாறப் போகிறேன். நீர் என்பாவங்களைப் பாராமல், உமது திருக்குமாரனின் புண்ணியத்தைப் பார்த்து, அவர் நிமித்தம் என்னை உமதுகிருபையென்ற செட்டைக்குள் ஏற்றுக் கொள்ளும். என் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு அவர்செய்யும் வேண்டுதலைக் கேட்டு, என்னை உறுதியான விசுவாசத்தில் காப்பாற்றும். விசுவாசிக்கிறேன்ஆண்டவரே, என் அவிசுவாசத்துக்கு உதவிசெய்யும் என்று கூப்பிட்ட அந்த ஏழையைப்போல் நான்கூப்பிடுகிறேன். எனக்குச் சகாயம் செய்யத் தீவிரியும். என் மகனே, நீ வேண்டுமென்றபடி உனக்குஆகக்கடவது என்று அடியேனுக்குச் சொல்−யருளும். இந்த இரவிலும் தேவரீர் எனக்குப் பலத்தகன்மலையும் அரண்மனையுமாயிரும். அப்பொழுது நான் பத்திரமாயிளைப்பாறுவேன், சுகமாய் நித்திரைசெய்வேன். ஆண்டவரே, என் சகோதரராகிய யாவருக்கும் இந்த இரவு நல்இளைப்பாறுத−ன்இரவாயிருக்கும்படி அனுக்கிரகியும். சேனைகளுடைய கர்த்தாவே என்னோடுகூட இரும். யாக்கோபுடையபராபரனே, தேவரீர் என் உயர்ந்த அடைக்கலம் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ33. செவ்வாய் காலை ஜெபம்சர்வவல்லவரே, பரமபிதாவே, அதிகாலையில் அடியேனுக்குச் செவிசாய்த்தருளும். என்னைச்சூழ்ந்திருக்கிற ஏழை அக்கியானிகள் உம்மை அறியாதவர்களாய் இருக்கையில், தேவரீர் எனக்கு உம்மைவெளிப்படுத்தியிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறேன், புகழுகிறேன், மகிமைப்படுத்துகிறேன். தேவரீர்சர்வவல்லவர், எனக்கு வேண்டிய யாவற்றையும் செய்து நிறைவேற்றுவீர். தேவரீர் ஞானமுள்ளவர்,எல்லாவற்றையும் எனக்கு நன்மையாய் முடிப்பீர். நீர் எங்கும் நிறைந்தவர், நான் வீட்டி−ருந்தாலும்வேலைக்குப்போனாலும் என்னோடிருக்கிறீர். நீர் எல்லாமறிந்தவர், என் உட்சீர் புறச்சீர் ஒன்றும் உமக்கு

மறைவாயிராது. ஆ, பிதாவே, உமது அன்பின் பெருக்கத்தையும், இரக்கத்தின் ஐசுவரியத்தையும் நான்பூரணமாய் நம்பி, என்னையும் என் ஊழியத்தையும், என் போக்குவரத்து நினைவு பேச்சு செய்கையாவையும் உமது நடத்துதலுக்கு ஒப்புவிக்கிறேன். என்னை ஆசீர்வதியும், என் பேச்சை ஆசீர்வதியும், என்வேலையை ஆசீர்வதியும், என் கா−ன் ஒவ்வொரு அடியையும் ஆசீர்வதியும். அப்பொழுது நான்சந்தோஷமும் சுகமுமாய் இந்த நாளை முடிப்பேன். உமது திருச்சித்தத்தின்படி எனக்கு ஆகக் கடவது,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ34. செவ்வாய் மாலை ஜெபம்அன்புள்ள பரம தகப்பனே, என்னை இந்த நாள் முழுவதும் தாங்கி ஆதரித்த உமது பாதபடியில்அடியேன் தெண்டனிட்டு உம்மை நமஸ்கரிக்கிறேன். என்னைச் சூழ்ந்திருக்கும் யாவும் உம்முடையஅன்புக்கும் தயவுக்கும் சாட்சி கொடுக்கின்றன. வானத்தையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும்,பகலையும், இரவையும் தேவரீர் எனக்கென்று படைத்தருளினீர். நீர் கொடுத்த உணவைப் புசித்து, உமதுநீரூற்றின் தண்ணீரைக் குடித்துப் பக−ல் வேலை செய்தேன். நீர் என்னுடைய இளைப்பாற்றிற்குக்கொடுத்தருளிய இரவில் நித்திரை செய்யப்போகிறேன். எனக்குக் கலக்கமற்ற நல்ல நித்திரையைத் தாரும்.பாவமும் வீணுமான நினைவுகளுக்கும், அசுத்த சொற்பனங்களுக்கும், துஷ்டர் பயத்துக்கும், கொள்ளைநோய்களுக்கும், சகலவித மோச விக்கினங்களுக்கும் என்னையும் என்னுடையவர்களையும் விலக்கிக்காத்தருளும். அடியேனுக்கு எந்தெந்த நன்மைகள் தேவையென்பதைத் தேவரீர் அறிவீர். அவைகளைஉமது பிதாவடைவான சித்தத்தின்படி எனக்குக் கட்டளையிட்டருளும். நான் ஒருபிடி சாப்பாட்டுக்காவது,ஒரு மிணறு தண்ணீருக்காவது, ஒரு ஜான் வஸ்திரத்துக்காவது பாத்திரானாயிராதிருந்தும், என் இரட்சகர்நிமித்தம் என் பாவங்களை எனக்குக் கிருபையாய் மன்னித்து என் ஜெபத்தை இரக்கமாய்க் கேட்டருளும்சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ35. புதன் காலை ஜெபம்பரமபிதாவாகிய ஆண்டவரே, காலமே என் சத்தத்தைக் கேட்பீராக. காலமே உமக்கு நேரே வந்துஆயத்தமாகிக் காத்திருக்கிறேன். கர்த்தாவே, உமது தயவைப் புகழுகிறேன். கிருபையைத் துதிக்கிறேன்.தேவரீர் என்னைப் புத்தியற்ற மிருகமாய்ச் சிருஷ்டிக்காமல், புத்தி சித்தம் உணர்ச்சியுள்ள மனிதனாய்ச்சிருஷ்டித்த உமது மட்டற்ற அன்புக்குத் தோத்திரம். தேவரீர் எனக்குக் கொடுத்திருக்கிற ஆத்துமத்தினாலும்சரீரத்தினாலும் இன்றும் என்றும் உமக்கு ஊழியஞ்செய்து, உம்மை எல்லாக்காலத்திலும் மகிமைப்படுத்தஉமது பரிசுத்தஆவியால் என்னை ஏவி எழுப்பியருளும். கர்த்தாவே, பாவத்தால் நான் உமது திருச்சாயலைஇழந்து பரிதபிக்கிறேன்; என்னை இரக்கமாய்க் கண்ணோக்கிப் பாரும். என்னை உமது திருக்குமாரனின்ஐக்கியத்துக்குட்படுத்தி, தெய்வசாயலை எனக்குள் திரும்பவும் உண்டுபண்ணியருளும். சுத்தஇருதயத்தைஎனக்குச் சிருஷ்டியும் பராபரனே, நிலைவரமான ஆவியை என்னுள்ளத்தில் புதிதாய் உண்டாக்கும்.ஒன்றான மெய்த்தெய்வமாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசுக்கிறிஸ்துவையும் அறிகிற அறிவிலேநான் இந்நாளிலும் தேர்ச்சியடைய எனக்குத் துணைபுரியும். தேவரீர் எனக்குக் கொடுத்திருக்கும்பலத்தையும் வரத்தையும் உமது நாமத்தின் மகிமைக்கென்றே செலவிட ஒத்தாசை பண்ணும். உமக்கும்குமாரனுக்கும் பரிசுத்தஆவிக்கும் துதிதோத்திரமுண்டாவதாக, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ36. புதன் மாலை ஜெபம்சர்வஜீவ தயாபரரே, தேவரீர் சென்ற பகல் முழுவதும் உமது பரிசுத்த சம்மனசுகளை எனக்குக்கட்டளையிட்டுக் காப்பாற்றினீர். என் பாதம் கல்−ல் இடறாதபடிக்கு அவர்கள் என்னைக் கைகளில்ஏந்திக்கொண்டு போனார்கள் என்றறிந்து உம்மைத் தோத்தரிக்கிறேன். தகப்பனை, இந்த இரவிலும் உமதுபரிசுத்த தூதரை எனக்குக் காவலாக வைத்தருளும். உமது கற்பனைப்படி எனக்குப் பணிவிடை செய்யும்சம்மனசுகளை என் அசுத்த நடக்கையால் துக்கப்படுத்தாமல், நான் அவர்களைப் போல் மெய்யானபரிசுத்தத்திலே நடந்து, உமக்கு உண்மையும் உற்சாகமுமாய் ஊழியஞ்செய்கிற ஊழியக்காரனாக்கியருளும்.நான் சாகும் நேரம் சமீபிக்கும்பொழுது நீர் உமது பரிசுத்த தூதரை என்னண்டைக்கு அனுப்பி, ஏழைலாசருவுக்குச் செய்ததுபோல், என்னை உம்மிடம் ஆபிரகாமின் மடியிலே கொண்டுவந்துசேர்க்கப்பண்ணும். அங்கே நானுமக்கு அல்லெலூயா பாடி, சேனைகளுடைய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்,பரிசுத்தர் என்று புகழ்ந்து போற்ற ஆவலாயிருக்கிறேன். இந்த என் ஆவல் நிறைவேறுமளவும் என்னைஉமது அடைக்கலத்தில் வைத்துப் பாதுகாத்து, எனக்கும் என்னுடையவர்களுக்கும் உமது பரிபூரணஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டருளும். இயேசுவின் நிமித்தம் என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி,

ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ37. வியாழன் காலை ஜெபம்தயவுள்ள பிதாவே, காலைப்ப−யாக என் ஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளத் தேவரீரைப்பிரார்த்திக்கிறேன். தேவரீர் சகல ஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்காய்க் குஞ்சுகளுக்கும்ஆகாரங்கொடுக்கிறவராய் இருக்கிறீர். நானும் உம்மையே நோக்கியிருக்கிறேன். உம்மை நோக்கியேகூப்பிடுகிறேன். எனக்கிரங்கி என்னை ஆசீர்வதியும். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்துபட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாதென்று உமது வசனம்சொல்லுகிறதே. இது சத்தியம் என்தை நானும் அறிந்திருக்கிறேன். இந்த விசுவாசத்திலே இன்றுதினத்தையும் துவக்குகிறேன், போக்குவேன், முடிப்பேன். பரமபிதாவே, எனக்கு எது குறைந்தாலும்உம்மைப் பிடித்துக் கொள்ளுகிற விசுவாசம் ஒருபோதும் குறையாமல், நாளொருவண்ணமாய் அதுஅதிகரித்து வளரும்படி கிருபை செய்யும். என் வறுமையில் முதலாய் நான் உமது பராமரிப்பைக் குறித்துகொஞ்சமும் சந்தேகப்படாமல், போதுமென்ற மனதோடு உமது திருக்கரத்தை முத்தி செய்யும் பிள்ளைப்பக்தியை அடியேனுக்குத் தந்தருளும். தேவரீர் சரீரத்துக்கும் ஜீவனுக்கும் வேண்டிய சகல நன்மைகளையும்எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் கிருபையாய்க் கட்டளையிடும். என் சகோதரராகிய ஏழைக்கிறிஸ்தவர்களுக்கு நீர் பரிதபித்து அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தளர்ந்து போகாதபடிக்கு அவர்களைகைதூக்கி ஆதரித்தருளும். இயேசுவின் திருமுகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ38. வியாழன் மாலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, இன்று தினத்திலும், கடந்த எல்லா நாட்களிலும் நான் பெற்றனுபவித்தஉமது பிதாவடைவான பராமரிப்புக்காக உமக்கு அனந்த துதியுண்டாவதாக. ஆண்டவரே, என்னைநன்றிகேட்டுக்கு விலக்கமாய்க் காரும். உம்மிடம் சகல நன்மைகளையும் அனுபவித்தபின் உம்மைவிட்டுமனம்விலகி உமக்கு துரோகம் செய்கிறவர்களின் கூட்டத்தில் நான் இராமல், உமக்கு எல்லாக் காலத்திலும்தோத்திரம் செலுத்துகிற பரிசுத்த கூட்டத்தில் நான் இருக்கும்படி உமது பரிசுத்தஆவியால் என்னைஆண்டு நடத்தியருளும். நான் வாக்கினால் மாத்திரமல்ல, பரிசுத்த நடக்கையாலும் என் நன்றியறிதலைக்காண்பித்து உம்மை மகிமைப்படுத்த எனக்கு ஒத்தாசை பண்ணும். என் நாவு ஓய்ந்தாலும் என் மனதுஓயாமல் உம்மை எந்நேரமும் துதிக்கும் பாக்கியத்தை அடியேனுக்குத் தந்தருளும். ஆண்டவரே,பொழுதுசாய்ந்த இந்த நேரத்தில் குருவிகள் தங்கள் கூட்டிலும், மிருகங்கள் தங்கள் தொழுவத்திலும்இளைப்பாறும். நானோ என் அருமை இரட்சகரின் ஐந்து காயத்தில் என் இளைப்பாற்றியைத் தேடுகிறேன்.இதை எனக்குக் கிருபையாய்க் கட்டளையிட்டு, எனக்கு நல்ல நித்திரையைத் தந்து, காலமே என்னைசுகத்தோடு எழுப்பியருளும். உமது திருப்பாதமே என் பாக்கியத்தலம், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ-39. வெள்ளி காலை ஜெபம்ஒப்பற்ற நேசமுள்ள கர்த்தராகிய இயேசுவே, பராபரனுடைய ஏகசுதனே, தேவரீர் என்னைசிநேகித்த சிநேகத்தால், உமக்குப் பிதாவினிடத்தி−ருந்த சகல மகிமையையும் வெறுத்து, இந்தப்பூலோகத்துக்கு என் ரூபெடுத்துவரச் சித்தமானீரே, நீர் விசேஷமாய் என் பாவத்தைச் சுமந்து,தேவகோபத்துக்கும் சாபத்துக்கும் உம்மையுள்ளாக்கி சொல்−முடியாத பாடுகளுக்கும் சிலுவையின்மரணத்துக்கும் உம்மை உட்படுத்தினீர் என்பதை வெள்ளிக்கிழமையாகிய இன்று நினைத்து உம்மைமுழுமனதினாலும் தோத்தரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மால் பாவம் மரணம் பிசாசின் வல்லமைக்குநீங்கலானேன். என் இருதயத்தில் உமது ஆவியை ஊற்றி, உமது பரம பனியால் அதைச்செழிப்பாக்கியருளும். என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது ஐந்து காய அடைக்கலக்கோட்டையில்வைத்துப் பாதுகாரும். என்னை எல்லாப் பாவமும் நீங்கச் சுத்திகரியும். சகல நற்கிரியைக்கும், என்னைச்சமர்த்தனாக்கியருளும். இயேசுவே, என் உழைப்பிலும் களைப்பிலும் உமது திருப் பாடுகளே எனதுஆறுதலும், நம்பிக்கையும், ஜீவனும், பெலனுமாயிருக்கப் பண்ணும். தேவரீர் என்னை இந்த அழுகைப்பள்ளத்தாக்கில் வைத்திருக்குமளவும் என்னோடிருந்து என்னை ஆசீர்வதியும். என்னை நீர் அழைக்கச்சித்தமாகும்பொழுது, உமது நித்திய மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் என்னைப் பங்காளனாக்கியருளும்.பாவத்தைச் சுமந்த தெய்வஆட்டுக்குட்டியே, தேவரீர் அடியேன்பேரில் இரங்கி எனக்கு உமதுசமாதானத்தைக் கட்டளையிட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

40. வெள்ளி மாலை ஜெபம்மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசுநாதரே, எனக்காகப் பாடுபட்டு மரித்த தேவரீரை நினைக்காமல்நான் படுக்கக்கூடுவது எப்படி? பரிசுத்த சிலுவை மரத்திலே பாவிகளுக்காக வேண்டுதல் செய்தவரே, என்பாவங்களெல்லாவற்றையும் எனக்கு மன்னித்தருளும். வலதுபாகக் கள்ளனை நோக்கிப் பார்த்த கண்ணால்என்னையும் நோக்கிப் பார்த்து, எனக்கும் மோட்சப்பிரவேசம் கிடைக்கும் என்கிற திடநம்பிக்கையைத்தந்தருளும். இந்த நம்பிக்கையிலே நான் இன்றிரவையும், என் ஜீவகால முழுவதையும் பாக்கியமாய்க்கழிக்கத் துணைபுரியும். உமது சிலுவையண்டை நின்ற உமது தாய்க்கும் மற்றவர்களுக்கும்ஆறுதலளித்ததுபோல், இப்பொழுது எனக்கும் நல்லாறுதலைத் தந்து ஆசீர்வதியும். தேவரீர் எனக்காகஅனுபவித்த ஆத்தும வேதனையையும் சரீர வேதனையையும் எல்லா நேரத்திலும் நான் நினைத்துதியானிக்க உமது ஆவியானவர் என்னை ஏவியருள்வாராக. நீர் முற்றுமுடித்த இரட்சிப்பில் அடியேனும்பங்குபெற்று, கடைசியாய் நான் மரிக்கும்போது உம்மைப் போல்: பிதாவே, உமது கைகளில் என் ஆவியைஒப்புவிக்கிறேன் என்று சொல்−ப் பாக்கியமாய் மரிக்கவும் எனக்குக் கிருபை செய்தருளும். இந்தஇரவிலே தேவரீர் என்னை எவ்வித மோசத்துக்கும் விலக்கிக் காத்து, மறுநாளில் ஜீவனோடும் சுகத்தோடும்என்னை எழுந்திருக்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ41. சனி காலை ஜெபம்அன்பு மிகுந்த அருமை இரட்சகரே, உம்முடைய கிருபைக்கும் இரக்கத்துக்கும் அனந்தஸ்தோத்திரம். தேவரீர் என்னை எல்லாப் பாவங்களினின்றும் மீட்டிரட்சித்தீர் என்பதையறிந்து, நான் இன்றும்ஒவ்வொரு நாளிலும் பாவத்தைப் பகைத்து அதை மேற்கொண்டு, பரிசுத்தத்தில் நடந்து தேறப்பண்ணும்.தேவரீர் என்னை மரணத்துக்கு நீங்கலாக்கினீரே. ஆண்டவரே, நான் மரணத்துக்கஞ்சாமல், எப்போதும்அதற்கு சந்தோஷமாய்க் காத்திருக்கப் பண்ணும். நான் பசாசை எப்பொழுதும் உமது பலத்தால்மேற்கொண்டு, ஜெயமடைய எனக்குத் துணை நின்றருளும். கர்த்தாவே, உமது தெய்வீக ரத்தத்தால்கொள்ளப்பட்ட உமது ஆளாகிய நான் உம்மை விட்டு ஒருக்காலும் தப்பி ஓடிப் போகாமல் உம்மிடத்தில்முடிவுமட்டும் நிலைத்திருக்கும்படி என்னைக் காப்பாற்றியருளும். இந்தப் பகலை நான் உமக்கு மகிமையாகஉபயோகிக்கும்படி தேவரீர் எனக்கு ஒத்தாசை பண்ண வேண்டுமென்று உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.எனக்கும் என்னுடையவர்களுக்கும் என்ன தேவையென்பதை தேவரீர் அறிந்திருக்கிறீர். ஆகையால்என்னை முற்றிலும் உமக்கு ஒப்புவிக்கிறேன். என்னை உமது அற்புத கரத்தால் ஆதரித்து, உமதுநன்மைகளால் நிரப்பியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ42. சனி மாலை ஜெபம்இயேசு சுவாமியே, அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாகிய உமது கிருபையால் நான்திரும்பவும் ஒரு வாரத்தை முடிக்கிறேன். நீர் என் கர்த்தரும், நான் உமது ஆளுமாயிருக்கையில் எனக்குஎன்ன குறைவுண்டு. நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். தேவரீர் என்னைக் கேட்கிறீர். நான்மன்றாடுகிறேன். நீர் கொடுக்கிறீர். நான் தவறிவிழுந்தால், தேவரீர் என்னைக் கைதூக்கி ஆதரிக்கிறீர்.இயேசுவே, சென்ற பக−லும் நான் வெகுவாய்த் தவறினேன் என்று மனஸ்தாபப்படுகிறேன். நான் செய்யவேண்டாததைச் செய்து, செய்யவேண்டியதைச் செய்யாமற் போனேன் என்று அறிக்கையிடுகிறேன்.எனக்காகப் பரிதபித்து என் குற்றத்தை மன்னித்தருளும். உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவும்.என்னைப் பாபமறச் சுத்திகரியும். வாரத்தின் கடைசி இரவாகிய இப்பொழுது என் கடைசி முடிவைநினைக்கிறேன். எனக்குப் பாக்கியமான முடிவைத் தந்தருளும். உம்மைப் பற்றும் விசுவாசத்தில்உறுதியாகவும், மெய்நம்பிக்கையில் திடமாகவும், மோட்ச வாஞ்சையால் பூரித்தவனாகவும் என் ஆவியைவிட்டுவிடும்படி, என் மூச்சொடுங்கும் அந்த நேரத்தில் தேவரீர் என் பக்கத்துணையாயிரும். என்னில்நற்கிரியையைத் துவக்கின பராபரனே, தேவரீர் அதை இயேசுக்கிறிஸ்துவின் நாள்மட்டாக முடியநடத்திவாரும். என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பத்திரமாய் இளைப்பாறப்பண்ணி, உமதுதிருநாளைக் காணும்படி சுகத்தோடு எழுப்பிவிட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜநான்காம் வாரம்ஜஜஜஜஜஜஜஜஜஜ43. ஞாயிறு காலை ஜெபம்கர்த்தராகிய பராபரனே, தேவரீர் சென்ற இரவில் என்னைச் சகல மோசங்களுக்கும் மறைத்து, சகல

பொல்லாங்குகளுக்கும் தற்காத்திரட்சித்து இந்தத் திருநாளைக் காணச் செய்ததற்காக உம்மைஸ்தோத்தரிக்கிறேன். நான் இந்தப் பரிசுத்தநாளைச் சரியாய் ஆசரிக்கத் துணை செய்தருளும்.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருந்தால்,எத்தனைக்கு அதிகமாகப் பரமபிதா தம்மைக் கேட்கிறவர்களுக்குப் பரிசுத்தஆவியைக் கொடுப்பாரென்றுஎங்கள் இரட்சகர் திருவுளம்பற்றின வாக்குத்தத்தத்தை இன்று என்னில் நிறைவேற்றியருளும். உமதுஆவியானவர் என்னையும், இன்று தெய்வாராதனை செய்யப்போகிற எல்லாக் கிறிஸ்தவர்களையும்,விசேஷமாய் உமது திருவசனத்தைப் பிரசங்கிக்கிறவர்களையும் பிரகாசிப்பித்து ஆண்டுகொள்வாராக.ஆண்டவரே, இன்று நான் உம்மை மனமும் வாக்கும் ஒத்துப் புகழவும், உமது வசனத்தைக் கவனமாக்ககேட்டுப் படிக்கவும், உம்மை நோக்கி மெய்விசுவாசத்தோடு ஜெபிக்கவும் இப்படியே இத்திருநாளின் சகலஆசீர்வாதங்களையும் பெற்றனுபவிக்கவும் கிருபை செய்தருளும். பாடுபட்டு, மரித்து உயிர்த்தெழுந்தஇயேசுவின் நிமித்தமே என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ44. ஞாயிறு மாலை ஜெபம்பரிசுத்தத் திரியேக பராபரனே, தேவரீர் இன்று எனக்குப் பாராட்டின சகல கிருபைக்காகவும்உம்மை வணங்கி ஸ்தோத்தரிக்கிறேன். பிதாவே, உமது திருக்கரம் என்னைப் பராமரித்து நடத்திற்று.குமாரனே, உமது இரட்சிப்பு என்னைத் திருப்தியாக்கிற்று. பரிசுத்தஆவியே, உமது தேற்றரவால் நான்ஆறுதல் அடைந்தேன். இப்பொழுதும் ஆண்டவரே, என்னோடு தங்கியருளும். அதேனென்றால் அந்திநேரமாகிப் பொழுது சாய்ந்து போயிற்று. தேவரீர் என் பேரில் கிருபை கூர்ந்து, என்னைப் பரிசுத்தமாக்கி,நான் மெய்விசுவாசியாய்ப் படுத்து நித்திரை செய்யத் துணைபுரியும். யார் என்னைக் கைவிட்டாலும் நீர்என்னைக் கைவிடாதேயும். நான் எதுக்குத் தூரமானாலும் உமது கிருபைக்குத் தூரமாகாதபடிக் காப்பாற்றும்.கர்த்தாவே, நான் இன்று கேட்ட உமது வசனம் என்னில் நிலைத்து வேரூன்றிக் கனிகொடுக்கப் பண்ணும்.சபையின் பெரியோர், சிறியோர், ஸ்திரீகள், புருஷர்கள், வ−யோர், எளியோர் அனைவரையும், என்னைஜெபம் செய்யக் கேட்டுக்கொண்ட என் சகோதரர் சிநேகிதர் யாவரையும் இரக்கமாய்க் கண்ணோக்கிப்பார்த்து, அவர்களுக்கு வேண்டிய சகல நன்மைகளையும் கிருபையாயக் கட்டளையிடும். இரவின் சகலமோசங்களுக்கும் என்னை விலக்கமாய்க் காத்து, உமக்கு சித்தமுண்டானால் சுகத்தோடு எழுந்திருக்கப்பண்ணும். உமக்கு இப்பொழுதும் எப்பொழுதும் மகிமையுண்டாவதாக, சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ45. திங்கள் காலை ஜெபம்அன்புள்ள கர்த்தரே, தயவுள்ள பிதாவே, தேவரீர் எனக்குச் செய்துவந்த உபகாரங்களையும் எனக்குஅளித்திருக்கிற நன்மைகளையும் யோசித்துப் பார்க்கையில் அவை சொல்−முடியாதவைகளாகஇருக்கின்றன. நான் உம்மை அறியாத புறமதஸ்தர்களின் மத்தியில் ஜீவனுள்ள பராபரனாகிய உம்மைஅறிந்த கிறிஸ்தவனாயிருக்க கிருபை அளித்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆண்டவரே, தேவரீர்என்னை உமது திருச்சபையின் அவயமும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்துக்குப் பங்குள்ளவனுமாக்கினீர்.இந்தப் பெரிய சிலாக்கியத்தை நான் ஒருபோதும் இழந்துபோகாதிருக்கத்தக்கதாய் உமது கிருபையில்என்னை நிலைநிறுத்திக் காப்பாற்றும். நான் இம்மையில் போராடும் சபையின் அவயமாய்ப் பசாசோடுஎதிர்த்து நிற்கவும், மறுமையில் வெற்றிசிறந்த சபையில் ஜெயக் குருத்தோலாகளுடன் உம்மைஎன்றென்றைக்கும் மகிமைப்படுத்தவும் துணைபுரிந்தருளும். இன்று நான் செய்யப்போகிற வேலைகளைஆசீர்வதித்து, அவை உமது திருச்சித்தத்துக்குப் பொருந்தினபடியே நிறைவேறச் செய்தருளும். உமதுஒன்றான குமாரனாகிய இயேசுவின் நிமித்தமே எனக்கிரங்கியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ46. திங்கள் மாலை ஜெபம்கர்த்தராகிய ஆண்டவரே, உமது கிருபையால் நான் இந்நாள் முழுவதும் யாதொரு சேதமுமின்றிபிழைத்திருக்கிறேன். உமக்கே மகிமை உண்டாவதாக. இந்த இரவிலும் தேவரீர்தாம் என் துணை, என்காவல், என் அடைக்கலம். இப்பொழுது நான் யாதொரு பயமும் இல்லாமல் இளைப்பாறத்தக்கதாய் தேவரீர்என் பாவங்களையெல்லாம் எனக்குக் கிருபையாய் மன்னித்தருளும். கர்த்தாவே, நான் பாவமன்னிப்புஉண்டென்று விசுவாசிக்கிறேன். என் பாவம் இரத்தாம்பரத்தைப்போல் சிகப்பாயிருந்தாலும், தேவரீர்அதைப் போக்கி என்னை உறைந்த மழையிலும் வெண்மையாக்க வல்லவரும் சித்தமுள்ளவருக இருக்கிறீர்.இதை நான் எக்காலத்திலும் பரிபூரணமாய் நம்பப்பண்ணும். இந்த நம்பிக்கையைவிட்டு என்னைப்பேர்க்கப்பார்க்கும் பிசாசின் சோதனையை நான் மேற்கொள்ள அடியேனுக்குப் பெலன் தாரும்.பராபரனுடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் திருரத்தம் என்னை எல்லாப் பாவமும் நீங்கச்

சுத்திகரிக்கிறது என்கிற திவ்விய சத்தியம் என் ஊன்றுகோலாயிருக்கத் தயை புரியும். கர்த்தாவே, தேவரீர்என் பலவீனத்தில் பலமும், வியாதியில் ஒüஷதமும், எளிமையில் ஐசுவரியமுமாயிரும். இந்த இரவில்என்னையும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் விசேஷமாய் என் உபகாரிகளையும், சிநேகிதரையும், என்னைச்செபம் செய்யக் கேட்டுக்கொண்ட யாவரையும் உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாத்தருளும். உமதுபாதமே கதி, சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ47. செவ்வாய் காலை ஜெபம்இயேசு ஐயரே, உமது திருநாமத்தை முன்னிட்டு இந்த நாளைத் துவக்குகிறேன். இந்நாள்முழுவதும் தேவரீர் என்னோடிருந்து என் போக்கையும் வரத்தையும், என் நினைவுகள், வார்த்தைகள்,கிரியைகளையும் உமக்கு உகந்ததாக்கியருளும். விசேஷமாய் என் விசுவாசத்தைப் பலப்படுத்தி, நான்சிநேகத்தில் பெருகத் துணை செய்யும். நான் பரதேசம் பண்ணும் சகல நாளிலும் நித்தியஜீவ நம்பிக்கையில்பெருகி, பரம பரதீசை எனக்கு இலக்காக வைத்துப் பிழைக்கக் கிருபை கூர்ந்தருளும். இந்த நாள் தேவரீர்எனக்குக் கொடுத்த கிருபையின் நாள் என்று நான் நன்றையறிந்து, இதில் என் இரட்சிப்பைப் பயத்தோடும்நடுக்கத்தோடும் நடப்பிக்கப்பண்ணும். சாத்தானின் கண்ணியிலும், லோகத்தின் மாயையிலும், மாமிசஇச்சைகளிலும் நான் சிக்கிக் கொள்ளாமல், என் காலடிகளை உமக்குகந்த நீதியின் பாதையிலேநடத்தியருள உம்மைத் தாழ்மையாய்க் கெஞ்சி மன்றாடுகிறேன். என் சீர் நிருவாகமெல்லாம் அறிந்திருக்கும்பிதாவே, தேவரீர் என் குறைவை நிறைவாக்கி, என் பலவீனத்தில் என்னைப் பலப்படுத்தி, என்வேலைகளை வாய்க்கப்பண்ணி, என்னையும் எனக்கடுத்த யாவரையும் பேர்பேராய் ஆசீர்வதித்தருளும்.உமது புண்ணியத்தினால் என் ஜெபம் உமக்கு ஏற்றிருப்பதாக சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ48. செவ்வாய் மாலை ஜெபம்மகா, கிருபையுள்ள பராபரனே, தேவரீர் என் பிதாவும் நான் உமது பிள்ளையுமாயிருக்கிறதற்காகக்களிகூர்ந்து, உம்மைத் துதித்துத் தோத்தரிக்கிறேன். நீர் ஒருவரே வானத்திலும் பூமியிலுமுள்ள சகோதரக்கூட்டமனைத்துக்கும் நாமகாரணராயிருக்கிறீர். நான் உமது அடிமைக்கு அடிமையாயிருந்தஅபாத்திரனாயிருந்தும், என் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் தேவரீர் என்னை உமதுபிள்ளையாக்கிக் கொண்டீர். இந்த உமது சுத்தக் கிருபைக்கு நான் என்ன பதில் செலுத்தப் போகிறேன்.இன்று தேவரீர் என்னைப் பிதாவடைவாகக் கண்ணோக்கினீர். தாங்கி ஆதரித்தீர். தற்காத்து ரட்சித்தீர்.நானோ பிள்ளை பக்தியாக உம்மை முழுமனதாலும் சிநேகித்ததில்லை என்று மனஸ்தாபத்தோடுஅறிக்கையிடுகிறேன். கெட்டக் குமாரனை ஏற்றுக்கொண்ட தகப்பனைப் போல் என்னையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் பிதாவே. நாமே உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும், நருங்குண்ட பணிந்தஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறோம் என்று திருவுளம்பற்றின கர்த்தாவே, தேவரீர்அடியேனிடத்திலும் வாசம்பண்ணும். கல்லான இருதயத்தை என்னி−ருந்து எடுத்துப்போட்டுச் சதையானஇருதயத்தை எனக்குத் தாரும். தேவரீர் என்னை எவ்விதத் தீமைக்கும் விலக்கிக் காப்பாற்றும். ஆசீர்வாதக்கர்த்தராகிய உமது செட்டைக்குள் வந்தடைகிற இந்த ஏழையைத் தள்ளிவிடாதேயும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ49. புதன் காலை ஜெபம்பரமதகப்பனே, இரக்கமுள்ள பிதாவே, தேவரீர் ஏழை அடியேனுக்குப் பாராட்டின கிருபைக்காகஉம்மை முழுமனதினாலும் ஸ்தோத்தரிக்கிறேன். இந்தப் பக−லும் என்னைக் கண்ணோக்கிப் பாரும்.கர்த்தாவே, சேனைகளுடைய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று புகழ்ந்து போற்றப்படுகிறஉம்முடைய திருநாமம் என்னிடத்திலும் என்னாலும் பரிசுத்தமாகவேண்டும் என்பது என் வாஞ்சையும்தவனமுமாயிருக்கிறது. எல்லாக்காலத்திலும் உமது திருச்சபையில் உமது திருவசனம் உள்ளது உள்ளபடியேசுத்தமாய்ப் போதிக்கப்பட கிருபைசெய்யும். ஆண்டவரே, நானும் என்னுடையவர்களும் எந்தமுகாந்திரத்தை முன்னிட்டும் சத்தியத்தைவிட்டுப் பிசகிப்போகாமல், சுத்த போதகத்தில் மரணபரியந்தம்விசுவாசமாய் நிலைத்திருக்கப் பெலன் தந்தருளும். சத்தியத்துக்கு விரோதமாய்ப் போதிக்கிற கள்ளப்போதகருக்குத் தேவரீர் பரிதபித்து அவர்களைத் திருப்பியருளும். துர்ப்போதகத்தால் கெட்டுத்துர்நடக்கையாய் நடந்து, அஞ்ஞானிகளுக்குள் உமது நாமம் தூஷணிக்கப்படுவதற்குக் காரணராயிருக்கிறபொல்லாத கிறிஸ்தவர்களுக்கும் தேவரீர் இரங்கி அவர்களை மெய் விசுவாசத்துக்குக் கொண்டுவந்துசேர்த்தருளும். அடியேன் இந்தப் பக−ல் உமது வசனத்துக்கு ஒத்த நெருக்கமான வழியிலே நடந்து,உம்மை யாவிலும் மகிமைப்படுத்த எனக்கு ஒத்தாசை செய்தருள உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். தேவரீர்பரிசுத்தராயிருக்கிறதுபோல் நானும் பரிசுத்தனாகும்படி உமது பரிசுத்தஆவியால் என்னை நிரப்பிச்

சுத்திகரித்தருளும். சத்திய பராபரனே, உமது திருக்கரத்தில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும்ஏற்றுக்கொள்ளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ50. புதன் மாலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, அந்திப்ப−யாக நான் கொண்டுவருகிற என் ஸ்தோத்திரத்தைஏற்றுக்கொள்ளும். நான் எப்பொழுதும் உம்மை நோக்கி ஜெபம் செய்யவும், உமக்கே துதிசெலுத்தவுங்கூடும்படி தேவரீர் என்னை உமது ராஜ்ஜியத்தின் குடியாக்கின மட்டற்ற கிருபைக்காக உம்மைமகிமைப்படுத்துகிறேன். இன்னமும் உமது கிருபையை ஏற்றுக் கொள்ளாமலும், உமது ராஜ்ஜியத்துக்குஉள்ளாகாமலும் இருக்கிற ஏழை அக்கியானிகளுக்கு இரங்கி அவர்களை அந்தகார ராஜ்ஜித்தி−ருந்துதிருப்பி உமது திருக்குமாரனின் இராஜ்ஜியத்தில் கொண்டுவந்து சேர்த்தருளும். இதற்காகப்பிரயாசைப்படுகிற உமது ஊழியருக்கு நற்சுகத்தையும் பலத்தையும், விசேஷமாய் உமது ஆவியின்வரத்தையும் கட்டளையிட்டு அவர்கள் வேலைகளை ஆசீர்வதியும். உமது கிருபையின் ராஜ்ஜியத்திலேஇருக்கிற நானும் மற்றெல்லாக் கிறிஸ்தவர்களும் தெய்வபக்தியாய்ச் சீவனம் பண்ண உமதுபரிசுத்தஆவியால் பலப்படுத்தியருளும். நான் மரிக்கும்போது பரிசுத்தவான்களும் தேவதூதரும் இருக்கிறமகிமையின் ராச்சியத்தில் தப்பாமல் வந்துசேரக் கிருபை செய்யும்படி உம்மைப் பணிந்து வேண்டிக்கொள்ளுகிறேன். நீர் அங்கே என்னை சேர்க்குமளவும் நான் அதன்மேல் வாஞ்சையுள்ளவனாய்க்காத்திருக்க என்னைப் பரமசிந்தையால் நிரப்பியருளும். இந்தச் சிந்தையோடு நான் இந்த இரவிலும்நித்திரை செய்து, இதே சிந்தையோடு எழுந்திருக்க ஒத்தாசைபண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ51. வியாழன் காலை ஜெபம்அன்புள்ள பராபரனே, உமது பிதாவடைவான பாதுகாப்பில் நான் பத்திரமாய் இளைப்பாறினேன்.உமது கிருபையினால் சுகத்தோடு எழுந்திருக்கிறேன். இந்தப் பகல் முழுவதும் நான் உமதுதிருச்சித்தத்துக்குக் கீழமைந்து நடக்க விரும்புகிறேன். நான் யாவிலும் அதை நிறைவேற்றத் தேவரீர்துணைபுரியும். உமது சித்தம் ஒன்றே மகா நல்லதும், அது கிருபையுள்ளதுமாயிருக்கிறதென்பதை நான்இம்மட்டும் அறிந்திருப்பதுபோல் இன்றும் அறிந்துகொள்ளப்பண்ணும். எனக்கு வரும் பாடுகள்உபத்திரவங்கள் யாவிலும் நான் என் அருமை ரட்சகர் சொன்னதுபோல், எனக்கல்ல, உமக்கேசித்தமாயிருக்கிறபடி ஆவதாக என்று சொல்லக் கிருபை செய்தருளும். கர்த்தாவே, உமது பரிசுத்தசித்தத்தைச் சம்மனசுகள் நிறைவேற்றுவதுபோல், அடியேனும் உற்சாகமும் தீவிரமுமாய் இரவும் பகலும்நிறைவேற்ற உமது பரிசுத்தஆவியைக் கொண்டு என்னை நடத்தியருளும். நான் உமது பரிசுத்த சித்தத்தைநிறைவேற்றாதபடி பலவிதத்திலும் தடைசெய்கிற பசாசு உலகம் மாமிசம் என்ற பொல்லா சத்துருக்களின்துர்ச்சித்தம் என்னிடத்தில் நிறைவேறாதபடிக்குத் தேவரீர்தாமே என் காவலாளியாயிரும். நான் இன்றுசெய்யப்போகிற வேலைகளில் எது உமக்கு ஏற்காததோ அதைத் தேவரீர் தடுத்துப்போடும். எது உமக்குஏற்றதோ அதை ஆசீர்வதித்து, நான் இந்த நாளைச் சரியாய் முடிக்கத் துணை செய்தருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ52. வியாழன் மாலை ஜெபம்சர்வஜீவ தயாபரராகிய பராபரனே, எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கின்றன. தேவரீர் ஏற்றவேளையிலே அவைகளின் போசனத்தை அவைகளுக்குக் கொடுக்கிறீர்.உம்முடைய கையைத் திறந்து ஜீவனுள்ளதெல்லாவற்றையும் இரம்மியமாய்த் திருப்தியடையப் பண்ணுகிறீர்.இதை நான் இந்த நாளிலும் கண்டுணரத்தக்கதாய்த் தேவரீர் என் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும்தேவையானவற்றைக் கட்டளையிட்டுப் பராமரித்ததற்காக உம்மை முழுமனதினாலும் தோத்தரிக்கிறேன்.இன்னமும் எனக்குத் தேவையானவைகள் என்னவென்று தேவரீர் அறிவீர். அவைகளையும் எனக்குக்கிருபையாய்க் கட்டளையிட்டருளும். விசேஷமாய் ஏழைக் கிறிஸ்தவர்களுக்காக உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். தேவரீர் அவர்களுக்கு இரங்கி, அவர்கள் குறைவை நிறைவாக்கி, அவர்களை ஆற்றித்தேற்றிபலப்படுத்தியருளும். எனக்கு நன்மை செய்துவருகிற எல்லா உபகாரிகளையும் தேவரீர் ஆசீர்வதியும். என்கன்மலையாகிய கர்த்தாவே, பொழுதுசாய்ந்த இந்த நேரத்திலே அடியேன் என்னையும்,என்னுடையவர்களையும், எனக்கடுத்த யாவரையும் உமது திருக்கரத்தில் ஒப்புவித்து, உமது பாதாரவிந்தத்தில்படுத்துக்கொள்ளுகிறேன். நான் மெய்விசுவாசியாய் இளைப்பாறி நித்திரை செய்யவும், சுகத்தோடும்பத்தோடும் எழுந்து உம்மை மகிமைப்படுத்தவும் எனக்கு ஒத்தாசை செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

53. வெள்ளி காலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, தேவரீர் மன்னிப்பில் பெருத்த தேவனென்று நான் அறிந்து உமக்குப்பயந்து, உம்மைத் தோத்தரிக்கிறேன். நான் ஜென்மத்தாலும் கெட்டவன், செய்கையாலும் பாதகன் என்பதைதேவரீர் அறிவீர். என் பாவங்களையெல்லாம் எனக்குக் கிருபையாய் மன்னியும். என் அருமை ரட்சகர் என்கடனைத் தீர்க்கும்படி பட்டனுபவித்த பாடுகளைப் பாரும். அவர் சிந்தின திரு இரத்தத்தையும், அவருடையபரிசுத்த மரணத்தையும் கண்ணோக்கும். தேவரீர் தினந்தோறும் என் பாவங்களைக் கிருபையாய்மன்னிக்கிறீர் என்பதை நான் நினைத்து, என் சகோதரருக்கு அவர்கள் குற்றங்களைமன்னிக்கிறவனாயிருக்கப்பண்ணும். நான் என் சத்துருக்களைச் சிநேகிக்கவும், சபிக்கிறவர்களைஆசீர்வதிக்கவும், பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யவும் கூடும்படிக்கு தேவரீர் என்னை ஆண்டுநடத்தியருளும். என் நீதியின் பராபரனே, நான் கூப்பிடுகையில் என்னைக் கேளும். தேவரீர்உம்முடையவர்களை அதிசயமாய் நடத்துகிறவர் என்பதை நான் இன்றும் அறிந்து உம்மைமகிமைப்படுத்தத் துணை செய்தருளும். உமது திருக்குமாரனினிமித்தம் என்மேல் இரங்கி, என்விண்ணப்பத்தைக் கேட்டு, என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ54. வெள்ளி மாலை ஜெபம்இரக்கமுள்ள தகப்பனை, இன்று தேவரீர் அடியேனுக்குப் பாராட்டின எல்லாக் கிருபைக்காகவும்,உண்மைக்காகவும் உமக்குக் கனம் புகழ்ச்சி தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, நான் பரிசுத்தத்தில்தேர்ச்சியடையத் துணைபுரியும். நான் பாம்புக்குப் பயந்து ஓடுவதுபோல் பாவத்துக்குப் பயந்து ஓடும்படிஉமக்கு பயப்படுகிற பயம் என்னை ஆள்வதாக். உமது திருக்கரம் என்னை மோட்சவழியிலே நடத்தக்கடவது. நான் உமது கற்பநைகளை மீறிப் பாவம் செய்வதற்கு என்னை சோதிக்கும் எல்லாசத்துருக்களையும். நான் திடமாய் எதிர்த்து மேற்கொள்ளும்படிக்கு எனக்குப் பெலன் தந்தருளும்.கர்த்தாவே, இது சோதனை மிகுந்த  பொல்லாத உலகம் என்பதைத் தேவரீர் அறிவீர். எனக்கு வரும் எல்லாசோதனைகளிலேயும் நான் என் இரட்சகர் செய்ததுபோல், உமது திருவசனத்தை எப்பொழுதும்விசுவாசமாய்க் கையாடவும், என் கண் தூங்கினாலும், இருதயம் விழித்திருந்து ஜெபம்பண்ணவும் தேவரீர்உமது பரிசுத்த ஆவியால் என்னை ஏவியருளும். ஆண்டவரே, நான் மெய்விசுவாசிகளுக்கு ஒத்தபடி என்படுக்கையில் என் இருதயத்தில் பேசி அமர்ந்திருக்கப்பண்ணும். அப்பொழுது நான் சமாதானத்திலேசயனித்துக்கொண்டும் நித்திரை பண்ணியும் இருப்பேன். ஏனெனில் கர்த்தாவே, தேவரீர் ஒருவரே என்னைசுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ55. சனி காலை ஜெபம்தயாபரராகிய கர்த்தாவே, உமது சொல்−முடியாத கிருபைக்காக உம்மை அதிகாலையில்தோத்தரித்து, உமது நாமத்தில் என் கைகளை ஏறெடுப்பேன். நான் இன்று காலையில் என் ஆத்துமம்சரீரம், வேலை சோ−கள், போக்குவரத்து, பொருள், கனம், யாவையும் எனக்குள்ளதனைத்தையும் உமக்குஒப்புவிக்கிறேன். ஆண்டவரே, எனக்கு வரக்கூடிய எல்லாத் தீமையினின்றும் தேவரீர் என்னைக்கிருபையாய் இரட்சித்துக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். பரமபிதாவாகிய உமது திருச்சித்தமில்லாமல் என்தலையின் ஒரே மயிர் முதலாய் விழுவதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். தகப்பனே, எனக்கு எந்தத்தீமை நேரிட்டாலும், அது உம்மைவிட்டு என்னைப் பிரிக்கிறதாயிராமல், உம்மைப் பற்றும்மெய்விசுவாசத்தில் என்நைப் பலப்படுத்துகிறதாயிருக்கப்பண்ணியருளும். கர்த்தாவே, என் விசுவாசத்தைவளர்ப்பியும். என்னை உமது சிநேகத்தில் வேரூன்றப்பண்ணும், மெய்நம்பிக்கையில் என்னைஉறுதிப்படுத்தும். நான் இந்த அழுகையின் பள்ளத்தாக்கில் தங்கியிருக்குமளவும் தேவரீர் என் ஆறுதலும்பலமுமாயிரும். அப்பொழுது நான் எந்தப் பொல்லாப்புக்கும் பயப்படேன். மரணத்துக்கும் அஞ்சேன்.கர்த்தாவே, நான் உமக்கென்று பிழைக்கவும் உமக்கென்று மரிக்கவும் எனக்குத் துணை புரிந்தருளும்சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ56. சனி மாலை ஜெபம்பிதா, குமாரன், பரிசுத்தஆவியாகிய திரியேக பராபரனே, உமது மட்டில்லாத இரக்கம் என்னைஇம்மட்டும் கொண்டுவந்ததென்று அறிக்கையிட்டு உமக்கு அத்தியந்து பணிவோடு தோத்திரம்செலுத்துகிறேன். தேவரீர் இன்று பக−ல் என்னை ஆதரித்ததுபோல் இந்த இரவிலும் என்னைஆதரித்தருளும். தேவரீர் எனக்குத் துணையாயிருக்கிறதினால் உம்முடைய செட்டைகளின் நிழ−லே

கெம்பீரிப்பாயிருக்கிறேன். கர்த்தாவே, நான் படுத்தாலும், எழுந்தாலும், நித்திரை செய்தாலும்,விழித்திருந்தாலும் உம்மை ஒருபோதும் மறவாமல் எக்காலத்திலும், உம்மோடுசஞ்சரிக்கிறவனாயிருக்கப்பண்ணும். நான் எக்காலத்திலும் உமது இராச்சியத்தின் குடியாயிருந்து அதன்நன்மைகளை அனுபவிக்கவும், உமது வல்லமையை நம்பும் நம்பிக்கையிலே பெருகவும், உமதுமகிமையையே என் இலக்காக வைத்துப் பிழைக்கவும் ஒத்தாசை பண்ணும். என் கவலைகளையும்,விசாரங்களையும் உமதுபேரில் எறிந்து போட்டுப் படுத்துக் கொள்ளுகிறேன். எனக்குநல்−ளைப்பாற்றியையும், சுகமான நித்திரையையும் கட்டளையிட்டருளும். சேனைகளின் பராபரனாகியகர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் பராபரனே செவிகொடும். என் கேடயமாகியபராபரனே, கண்ணோக்கமாயிரும். நீர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக்கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஐந்தாம் வாரம்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ57. ஞாயிறு காலை ஜெபம்கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீருடைய கிருபைகள் பெரியவைகள் என்பதை நான் உண்மையாய்அறிக்கையிட்டு உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உம்மை அடிக்கடி நான் மறந்தும், தேவரீர் என்னைக்கைவிடாமல் கடந்த இரவிலும், சென்றவாரம் முழுமையிலும் சுகபத்திரமாய்க் காப்பாற்றினீர். உம்முடையதிருநாளைக் காணவும் எனக்குச் சமயங்கொடுத்தீர். இந்நாளில் நான் உமது வசனத்தைக் கேட்டுப்படிக்கவும்,உமது ஐக்கியத்திலே இந்நாளைக் கழிக்கவும் என்னை ஏவி எழுப்பியருளும். உமது வசனத்தைப்பிரசங்கிக்கும் உமது ஊழியர்களை உமது வல்லமையுள்ள சாட்சிகளாக்கியருளும். உமது வசனத்தின்திருச்சபையை ஆசீர்வதிக்கவும், நான் இன்று கேட்டுப் படிப்பவைகளால் உமது வழிகளில் நிலைப்படவும்கிருபை செய்தருளும். இந்நாளில் உமது திருக்கற்பனைகளுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ய சோதிக்கும்பிசாசையும், அதன் தோழரையும் நான் ஜெயித்து, சமாதானமும் சந்தோஷமுமாய் இந்நாளை முடிக்கச்செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ58. ஞாயிறு மாலை ஜெபம்கர்த்தாவே, உமது கிருபையால் நான் இந்த நாளை முடிக்கிறேன். கடந்த பக−ல் நான் கேட்டுப்படித்தவற்றை மறவாமல் அவைகளின்படி நடப்பதற்கான மனதையும், பலத்தையும் அடியேனுக்குத்தந்தருளும். தேவரீர் என் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பிய உமது வசனத்தின் பலத்தை என் நடக்கையால்நான் ரூபிக்க உமது ஆவியை அதிகமதிகமாக எனக்கு அருளும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.உமது வசனத்தை அசட்டை பண்ணுகிறவர்களைத் தேவரீர் கண்ணோக்கிப் பார்த்து, அவர்களைகுணப்படுத்தியருளும். உமது வசனத்தை சிநேகிக்கும் சிநேகத்தை எனக்குள்ளும் என்நைச் சேர்ந்தஎல்லாருக்குள்ளும் அதிகமதிகமாய் உண்டாக்கியருளும். உம்முடைய பரிசுத்தநாளை நான்எவ்விதத்திலாவது வீணாக்கியிருந்தால், தேவரீர் என் அருமை இரட்சகர் நிமித்தம் எனக்குக் கிருபையாய்மன்னியும். இந்த இரவிலே தேவரீர் என்னோடும், போதகமார் சபையார் யாவரோடும் இருந்து, யாவரையும்உமது செட்டைகளின் நிழ−லே திடங்கொண்டு தங்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ59. திங்கள் காலை ஜெபம்பரமதகப்பனே, உமது பெரிய இரக்கத்துக்காகவும், தயவுக்காகவும் நான் உம்மை வணங்கிஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் கடந்த இரவிலே எனக்கு வரக்கூடிய சகல பொல்லாப்புகளுக்கும் அடியேனைவிலக்கியருளினீர். கர்த்தாவே, நன்றியறிதலுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். தேவரீரை நான்என்னுடைய வேலை சோ−களிலும் சம்பாஷணைகளிலும் மறக்கவொட்டாதேயும். நான் இன்று செய்யும்யாவையும் தேவரீருடைய பலத்தால் செய்யவும், தேவரீருடைய மகிமைக்கென்று செய்யவும் உமதுஆவியினால் என்னை ஆண்டு நடத்தியருளும். நான் என் வாக்கினாலும் நடக்கையினாலும் என்னைச்சுற்றிலுமுள்ள புறமதஸ்தருக்குமுன் உமக்குச் சாட்சிகொடுக்கத் தகுந்தவனாக்கியருளும். உமதுமகிமைக்கென்றும், பிறத்தியாரின் நன்மைக்கென்றும் இந்நாளை உபயோகிக்க என்னை உமது ஆவியால்நடத்தி எனக்குத் துணைநின்றருளும். இந்த என் ஏழை மன்றாட்டை இயேசு ரட்சகர் நிமித்தம்கேட்டருளும், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

60. திங்கள் மாலை ஜெபம்அன்புள்ள இயேசுவே, உமது திருநாமத்திலே இந்நாளைத் துவக்கினேன்; உமது நாமத்திலேயேஅதை முடிக்கிறேன். நான் இந்த நாளில் என் வேலையில் காண்பித்த அஜாக்கிரதையையும்சுறுசுறுப்பில்லாமையையும் கிருபையாய் மன்னித்தருளும். என்னைப் பாரப்படுத்தும் கவலைகள்,விசாரங்கள் எவ்வளவு என்பதைத் தேவரீர் ஒருவரே அறிவீர். என் உள்ளத்தின் விசாரங்கள்பெருகுகையில் தேவரீருடைய வசனம் என்னைத் தேற்றரவு பண்ணாவிட்டால், நான் அழிந்தே போவேன்.ஆண்டவரே, எனக்காகப் பரிதபியும். தேவரீர் எனக்காக விசாரிப்பாயிருக்கிறீர் என்ற நிச்சயத்தை எனக்குத்தாரும். என் ஆத்தும இரட்சிப்பைத் தடைப்படுத்தும் உலகக்கவலைக்கு என்னை நீங்கலாக்கியருளும். உமதுஜனத்தின் கூப்பாட்டைக் கேட்கிற ஆண்டவரே, எனக்குச் சகாயம் செய்யத் தீவிரியும். தேவரீருடையபிதாவடைவான பராமரிப்பை நான் நம்பி, இந்த இரவிலே என்னையும், எனக்கடுத்தவர்களையும், என்னைஜெபம் செய்யக் கேட்டுக்கொண்ட யாவரையும் உமது திருக்காப்புக்கு ஒப்படைக்கிறேன். உமது சித்தம் என்பாக்கியம் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ61. செவ்வாய் காலை ஜெபம்வல்லமையுள்ள ஆண்டவரே, பரமபிதாவே, தேவரீருடைய திருச்சந்நிதிக்கு முன்பாகஸ்தோத்தரிப்போடும் புகழ்ச்சியோடும் வந்து நிற்கிறேன். என் பாவங்களைப் பாராமல் என் ஏழைஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொள்ளும். என்னுடைய சித்தத்தை உமது சித்தத்துக்குக் கீழாக்கும். உமதுவசனத்தை எப்போதும் என் நடக்கைக்குப் பிரமாணமாக்கும் புது இருதயத்தை எனக்குக் கொடுத்தருளும்.நான் கேடுபாடுள்ள என் பழைய வழிகளை முற்றிலும் விட்டு, என் வயது ஆகஆக, உமது குமாரனைஅறிகிற அறிவிலும் உமது வசனத்தை வாஞ்சிக்கும் வாஞ்சையிலும் அதிகரிக்க எனக்குச் சகாயம்செய்தருளும். உமது வழிகளில் என் கால்கள் நிலைவரப்பட இன்று உமது பரிசுத்த தூதரின் காவலைஎனக்குக் கட்டளையிடும். நான் மறுமையிலே உமது பரிசுத்த சமுகத்தை முகமுகமாய்த் தரிசிக்குமட்டும்உமது கிருபையை என்பேரில் பெரிதாக்கி, உமது பாதையிலே என்னை நடத்தியருளும். தேவரீர் என்ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது பாதுகாப்பில் ஏற்றுக்கொண்டு என்னை ஆசீர்வதித்தருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ62. செவ்வாய் மாலை ஜெபம்கர்த்தராகிய இயேசுவே, இந்த அந்திநேரத்திலே என் வீட்டுக்குள் வாரும். பாவியைன சகேயுவின்வீட்டை ஆசீர்வதித்தவரே, பாவியாகிய என் வீட்டையும் தேவரீர் ஆசீர்வதியும். என்நைச் சூழ்ந்திருக்கும்யாவருக்கும் என் வீடு முன்மாதிரியான கிறிஸ்தவ வீடாய் விளங்கக்கூடும்படி எனக்கும் என் வீட்டார்யாவருக்கும் உமது பரிசுத்தஆவியைத் தந்தருளும். தேவரீர், உமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்துநடந்ததுபோல், நானும் எனக்கு மேலாகத் தேவரீர் வைத்தவர்களுக்கு அடங்கியிருக்கும் மனத்தாழ்மையைஎனக்குத் தந்தருளும். உமது பரிசுத்த சித்தத்துக்கு எதிர்த்து நிற்கும் பெருமையைத் தேவரீர் என்னையும்என் வீட்டார் யாவரையும் விட்டு அகற்றியருளும். உமது கிருபைக்கு என்னைப் புறம்பாக்கும் சாபத்தீடானயாவையும் என் வீட்டினின்று விலகிப்போகப் பண்ணும். நானும் என் குடும்பத்தார் யாவரும் உமக்குஉண்மையான ஊழியராக நடக்கவும், கடைசியிலே நிர்ப்பந்தம் நிறைந்த இவ்வுலகத்தைவிட்டு உமதுபரிசுத்த பட்டணத்துக்குள் சந்தோஷமாய்ப் பிரவேசிக்கவும் கிருபை செய்தருளும். இந்த இரவில் தேவரீர்என் காவலாளியாயிருந்து, எனக்கு நல்ல நித்திரையைத் தந்து, என்னைச் சுகத்தோடும் ஜீவனோடும்மறுகாலையில் எழுப்பியருள உம்மை மன்றாடிக் கேட்கிறேன், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ63. புதன் காலை ஜெபம்என் பராபரனே, உமது கிருபையுள்ள காவலைக் கடந்த இரவில் அபாத்திரனாகிய எனக்குக்கட்டளையிட்டீர். உமது பெரிய அன்புக்கு ஸ்தோத்திரம். நான் இந்நாள் முழுவதும் உமது வெளிச்சத்தில்நடக்க என் புத்தியையும் மனதையும் உமது பரிசுத்தஆவியினால் பிரகாசிப்பித்தருளும். குருட்டாட்டமானஎண்ணங்களுக்கும் சகல அவபக்திக்கும் என்னை விலக்கிக் காத்தருளும். உமது வசனத்தின் வழியைவிட்டுவிலகிப்போகப்பண்ணும் சகல சோதனைகளையும் நான் மேற்கொள்ள எனக்குப் பலந்தாரும். பூரணசற்குணராகிய உமது திருச்சாயலை நான் தரித்து நடக்க எனக்கு ஒத்தாசை பண்ணும். என்னையும் என்வீட்டாரையும் மாத்திரம் சிநேகிக்கும் தற்சிநேகத்துக்கு என்னை விலக்கிக் காத்தருளும். எல்லாரையும்சிநேகிக்கும் கருத்தான சிநேகத்தை என்னில் ஊற்றியருளும். தேவரீர் என்னைச் சிநேகித்துவரும் உமதுசிநேகத்துக்கு நான் பாத்திரமாக நடந்து, உமக்கு மகிமையாக இந்நாளை முடிக்கத் துணைசெய்தருளும்,

சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ64. புதன் மாலை ஜெபம்பரமதகப்பனே, அந்திநேரமாகிய இப்பொழுது நான் உமக்கு ஸ்தோத்திரப−களைச் செலுத்த உமதுகிருபையின் ஆசனத்துக்கு முன்பாக வருகிறேன். இந்நாளில் நான் உமக்கு விரோதமாகச் செய்த சகலபாவங்களையும் மன்னித்து, என் ஸ்தோத்திரப−யைக் கிருபையாய் ஏற்றுக்கொள்ளும். தேவரீர் எனக்குச்செய்திருக்கும் உபகாரங்களுக்குத் தகுந்தவண்ணமாய் உம்மை ஸ்தோத்தரிக்க நான் கூடாதவன் என்பதைநீர் அறிவீர். என்றாலும் ஆண்டவரே, என் வாயின் வார்த்தைகளையும், என் நடக்கையையும் உமக்குஸ்தோத்திரமாக தேவரீர் மாற்ற வல்லவர். அடிக்கடி நான் என் இருதயத்தின் யோசனையினாலும், என்பேச்சினாலும், நடக்கையினாலும் உம்மை விசனப்படுத்தினேன். என் இருதயத்தைத் திருப்பும். அதைஉம்முடையதாக்கும். என் வாயி−ருந்து புறப்பட்ட தூஷண வார்த்தைகளும் சாபனைகளும் உமக்குத்தெரியாததல்ல. இவைகளையெல்லாம் தேவரீர் எனக்கு மன்னித்து என் இருதயத்தை சுத்திகரியும். உமதுபரிசுத்தஆவியை எனக்குத் தாரும். நான் உமது நேசகுமாரனைக் குறித்துப் பிறருக்குச் சொல்லக்கூடும்படிஎன்னை இரட்சிப்பின் சந்தோத்தால் நிரப்பியருளும். என்னுடைய சகல கவலைகளையும் உமதுதிருப்பாதத்தில் எறிந்துவிட்டுப் படுத்துக்கொள்ளுகிறேன். எனக்கும் என் வீட்டார் சிநேகிதருக்கும் இந்தஇரவில் நல்இளைப்பாறுதலைக் கட்டளையிட்டு, எல்லாரையும் மறுநாள் காலையில் ஜீவனோடும்சுகத்தோடும் எழுப்பி உம்மைத் துதிக்கப்பண்ணியருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ65. வியாழன் காலை ஜெபம்என் ஆண்டவரே, உமது கிருபையை நம்பி நான் இந்த நாளைத் துவக்க, தேவரீருடையஆசீர்வாதத்துக்காகக் காத்திருக்கிறேன். என்னை ஆசீர்வதியும். உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் மாத்திரம்நான் என் வேலையைச் செய்யக்கூடும். உமது ஆசீர்வாதமில்லாமல் நான் என்ன செய்தாலும்வீணாயிருக்கும். ஆதலால் உமது ஆசீர்வாதம் என் குடும்பத்தார் யாவர்பேரிலும் வந்து தங்குவதாக.இன்றைக்கு நான் என் வரத்தையும், பலத்தையும் உமக்கு மகிமையும் என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்குப்பிரயோசனமுமாகக் கையாட எனக்குத் துணையாயிரும். உமது நாமத்தை அறிக்கை பண்ணுவதில் நான்அஞ்சாதவனாய் விளங்க என்னைப் பலப்படுத்தும். என்னையும் என் வீட்டையும் நான் பார்க்கையில்உமது ஆசீர்வாதம் இல்லாததுபோல் பல சமயங்களில் காணுகிறது. உமது கரம் மெய்யாகவே எங்களைஆசீர்வதிக்கிறது என்கிற நிச்சயத்தை எனக்குத் தாரும். உமது ஆசீர்வாதத்துக்கு என்னையும் என்வீட்டையும் தூரமாக்கும் இருதயத்தின் சீர்கேட்டை எடுத்துப்போடும். உமது பரம பனியினால் அதைச்செழிப்பாக்கும். என் உட்படுதலையும், புறப்படுதலையும் தேவரீர் ஆசீர்வதித்து நான் என் ஆத்துமத்திலும்சரீரத்திலும் உமது நன்மைகளை ருசித்தவனாய் இந்நாளை முடிக்க எனக்குக் கிருபை செய்தருளும் சுவாமி,ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ66. வியாழன் மாலை ஜெபம்சகல நன்மைகளுக்கும் ஊற்றாகிய பராபரனே, தேவரீர் இந்நாளிலும் சகல நாட்களிலும் எனக்கும்என் வீட்டாருக்கும் செய்துவந்த நன்மைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். இன்று நான் உமது மகிமைக்குக்குறைவாகச் செய்திருக்கும் சகல பாவங்களையும் மன்னித்தருளும். என் இருதயத்தில்சமாதானமடைந்தவனாய் என் படுக்கைக்குப் போகும்படி எனக்குக் கிருபை செய்தருளும். என் தரித்திரம்,வியாதி முத−ய சரீரக்கவலைகள் என் சமாதானத்தைக் குலைத்துப் போடுவதைத் தேவரீர் அறிவீர். என்பலவீனத்துக்காகப் பரிதபியும். எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தால் என் இருதயத்தைநிரப்பியருளும். அப்பொழுது நான் என்ன வந்தாலும் கலங்க மாட்டேன். என் வீட்டிலே மெய்யானசமாதானத்தைத் தாரும். என் வீட்டார் யாவரும் சமாதானப்பிரபுவாகிய இரட்சகரின் பிள்ளைகளாய்விளங்கும்படி உமது ஆவியை எங்கள் உள்ளத்தில் அனுப்பும். உலகக்காரியங்களாலும் பிசாசின்தந்திரத்தாலும் என் வீட்டின் சமாதானம் குலைந்து போகாதபடி என்னைப் பாதுகாத்தருளும். நானும்,என்னுடையவர்களும் ஒருவரையொருவர் பகைக்காமல், பிசாசையும் பாவத்தையும் மாத்திரம் பகைக்கவும்,உம்மையும் உமக்குள்ளே மற்றவர்களையும் சிநேகிக்கவும் ஒத்தாசை செய்தருளும். நான் அமைதலாய்நித்திரை செய்து உமது ஆவியினால் பலமடைந்தவனாய்க் காலையில் எழுந்திருக்கச் சகாயம்செய்தருளும். உமது திருக்குமாரன் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

67. வெள்ளி காலை ஜெபம்எனக்காகப் பாடுபட்ட இயேசு சுவாமி, உமது திருச்சிலுவையினடியிலே வந்து நிற்கிறேன். என்பாவத்தினாலேதான் உமக்கு இந்தப் பாடுகள் வந்தன; என்னை மீட்கத் தேவரீர் இவ்வளவு அகோரவேதனைக்குள்ளானீரே. உமக்கு என்ன ஈடு செலுலிóதுவேன். ஆண்டவரே, உமது பாடுகளுக்குக்காரணமான சகல பாவத்தையும் பகைக்கவும், உமக்கு நன்றியறிந்தவனாய்ப் பிழைக்கவும் என்னில் உமதுநேசத்தை ஊற்றியருளும். உமது நேசத்தால் எனக்குப் பாவம் யாவும் கசக்கவும், உமது திருப்பாடுகளின்தியானத்தால் நான் எனக்குள் என் சகலத்தையும் என் ஜீவனையும் கூட உமக்கென்று இழந்துபோகஆயத்தமுள்ளவனாகவும் என்னைத் திருப்பியருளும். உமது சிலுவையின் மகத்துவத்தைஅறியாதிருப்பவர்களுக்கு அதை உமது சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தும். உமது சிலுவையின்சுவிசேஷத்துக்கு எதிர்த்து நிற்கும் சகல எதிரிகளின் துர்ஆலோசனையையும் அவத்தமாக்கியருளும்.நானும் என் வீட்டாரெல்லாரும் தேவரீர் அனுப்பும் சிலுவையை முறுமுறுக்காமல் சந்தோஷத்தோடுஏற்றுக்கொள்ளும் பொறுமையைத் தாரும். இந்நாள் முழுவதும் தேவரீர் என்னையும் என் வீட்டார்சிநேகிதர் உபகாரிகள் யாவரையும் உமது ஐக்கியத்திலே வைத்துப் பாதுகாத்தருளும். உமது சிலுவையின்மரணத்தினிமித்தமே என் ஜெபத்தைக் கேட்டருளும். சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ68. வெள்ளி மாலை ஜெபம்கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே, எங்களுக்காக ப−யான தேவஆட்டுக்குட்டியே, எங்கள்மே−ரங்கும். தேவகோபத்துக்குப் பாத்திரனாகிய எனக்காகப் பிணைபட்டீரே; என்னை முழுவதும் உமக்குக்கையளிக்கிறேன். தேவரீர் பிதாவின் சித்தத்துக்கு அடங்கினதுபோல் என் சித்தமல்ல, உமது சித்தமேஎன்னில் நிறைவேறவும், என் வழிகள் அல்ல, உமது வழிகள் என்னில் ஆயத்தமாகவும் உமக்கென்னைமுழுவதும் ஒப்புவிக்கிறேன். என்னை என்னுடைய சகல பாவங்களுக்கும் அக்கிரமங்களுக்கும்நீங்கலாக்கியருளும். தேவரீர் உம்மைத் துன்பப்படுத்தின சத்துருக்களுக்காகச் செபம் செய்தீரே. உம்மைப்பாடுபடுத்தின பாதகனாகிய எனக்காகவும் தேவரீர் பிதாவின் வலதுபாகத்தில் வேண்டுதல் செய்கிறீர்.ஆண்டவரே, பிறரிடத்தில் பழிவாங்கும் சுபாவத்தை என்னைவிட்டு முழுவதும் விலக்கியருளும்.யாவருக்கும் மன்னிக்கும் சிந்தையையும் நன்மை செய்யும் குணத்தையும் எனக்குத் தாரும். இந்த இரவிலேசாத்தானாவது வேறெந்த பொல்லாப்புமாவது என்னையும் எனக்கடுத்த யாவரையும் அணுக ஒட்டாமல்பாதுகாத்தருளும். உமது ஐந்து காயங்களினிமித்தம் என் ஜெபத்தைக் கேட்டருளும். சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ69. சனி காலை ஜெபம்கிருபை மிகுந்த பிதாவே, தேவரீர் கடந்த இரவில் என்னைச் சகல பொல்லாப்புக்கும் விலக்கி,இந்நாளைக் காணச் செய்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்நாளிலே நான் உமது பிள்ளையாய் நடக்கஎனக்கு உமது ஆவியின் ஒத்தாசையைத் தாரும். உமது திருக்குமாரனின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நான்உமக்குப் பிரியமாய் நடக்க என்னைப் பலப்படுத்தும். உமது நாமத்துக்கு அவமானமாகவும் உமதுதிருச்சபைக்கு இடறலாகவும் நடக்கும் மோசத்துக்கு என்னையும் சகல கிறிஸ்தவர்களையும் தூரமாக்கும்.உமது திருச்சபையிலுள்ள யாவரையும் உமது பரம சுதந்தரவாளிகளாக்கும். நான் மோட்சத்திலுள்ள நித்தியவாழ்வையே பெரிதாக மதித்து, உலக வாழ்வை அற்பமாக எண்ண என்னைப் பரமசிந்தையுள்ளவனாக்கும். லோகத்தை சிநேகித்து உமது சிநேகத்தை இழந்து போகும் மோசம் எனக்குண்டுஎன்பதைத் தேவரீர் அறிவீர். என்னையும் என் வீட்டாரையும் எங்களை அழைத்த பரிசுத்தரின்சாயலாக்கியருளும். இத்தேசத்தார் யாவரையும் உமது பிள்ளைகளாக்கியருளும். பிள்ளைக்கொத்தவிசுவாசத்தையும், நம்பிக்கையையும் என்னில் அதிகரிக்கச் செய்தருளும்; தேவரீர் எனக்குக் கிருபையாய்க்கொடுத்தருளிய நாளையும் நேரத்தையும் நான் உமக்குப் பொருந்தியபடி செலவிட அனுக்கிரகம்செய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ70. சனி மாலை ஜெபம்மட்டில்லாத தயவுள்ள பராபரனே, கடந்த பக−லும், சென்ற வாரம் முழுமையிலும் தேவரீர்எனக்குச் செய்து வந்திருக்கும் உபகாரம் மிகுதி. உமது உபகாரங்களில் எதுக்கும் நான் பாத்திரனல்ல. கடந்தவாரத்தில் நான் செய்திருக்கும் வேலையைப் பார்த்தால், என் கடமையை நான் உண்மையாய்ச்செய்யவில்லை என்று அறிக்கையிட வேண்டியவனாயிருக்கிறேன். உமது மகிமையைப் பார்க்கிலும் என்மகிமையை நாடும் சோதனை எனக்கு வந்தது என்பதையும் தேவரீர் அறிவீர். உள்ளிந்திரியங்களைஎல்லாம் அறிந்த ஆண்டவரே, என் பாவங்களுக்குத் தக்கபடி எனக்குச் செய்யாமலும், என்

அக்கிரமங்களுக்குத் தக்கதாக எனக்குச் சரிக்கட்டாமலும் இரும். நான் நல்ல மனச்சாட்சியுள்ளவனாய்இவ்வாரத்தை முடிக்கும்படி தேவரீர் என் பாவங்களையெல்லாம் மன்னியும். நான் புதிய வாரத்தில்பிரவேசிப்பேனா என்று அறியேன்; ஆதலால் இப்பொழுதே என்னையும் என் வீட்டாரையும் முடிவுக்குநல்லாயத்தப்படுத்தியருளும். உம்மைச் சந்திக்க எப்போதும் ஆயத்தமானத் தாரும். உமது வருகைக்குக்கொஞ்சமேனும் கவலைப்படாத கிறிஸ்தவர்களை நிர்விசாரத்தினின்று எழுப்பியருளும். நாளைக்கு உமதுசபைக்கு வசனத்தைக்கூற ஆயத்தம் செய்யும் போதகருக்கு உமது ஆவியை அளித்துப்பலப்படுத்தியருளும். உமது வசனத்தைக் கேட்கச் சகல இருதயங்களையும் ஆயத்தமாக்கியருளும்.இன்பமாய் இளைப்பாறி ஜீவனோடும் சுகத்தோடும் எழுந்து, உமது திருநாளைக் காணக் கிருபைசெய்தருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

குடும்ப விசேஷங்களில் வாசிக்கத்தக்கஞான சங்கீதங்கள்விவாகம்: 128ஞானஸ்நானம்: 127இக்கட்டுக்காலம்: 77கொள்ளை நோய்: 91பிரயாணம்: 121துக்கம்: 90குடும்ப விசேஷஜெபங்கள்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ86. க−யாணம்பரிசுத்த சமுசார மார்க்கத்தை ஏற்படுத்தின பராபரனே, உமது திருநாமத்தை முன்னிட்டுத்திருச்சமுசார மார்க்கத்தில் பிரவேசித்த இந்த உமது பிள்ளைகளைக் கிருபையாய்க் கண்ணோக்கிஆசீர்வதியும். அவர்களைத் தேவரீர் இம்மட்டும் தாங்கி ஆதரித்தீர். அவர்கள் பிரவேசித்த இந்தச் சமுசாரமார்க்கத்திலும் தேவரீர்தாமே அவர்கள் ஆதரவாயிரும். அவர்களை உமக்கு மகிமையும் திருச்சபைக்குஅலங்காரமுமாயிருக்கப்பண்ணும். தேவரீர்தாமே அவர்கள் வீட்டைப் பலமாகக் கட்டி, அவர்களுக்குநற்சுகத்தையும், பலத்தையும், தீர்க்காயுசையும், புத்திரசந்தானத்தையும், சமுசார மார்க்கத்துக்குத் தேவரீர்வாக்குத்தத்தம் பண்ணின சகல பாக்கியத்தையும் பரிபூரணமாய்க் கட்டளையிடும். அவர்களைவிசேஷமாய் மெய்விசுவாசத்திலும் அனலான சிநேகத்திலும் காப்பாற்றி, அவர்கள் மோட்சசுதந்தரவாளிகளாகும்படி கிருபை செய்தருளும். கானாவூர் க−யாணத்தை ஆசீர்வதித்த அருமை ரட்சகரைமுன்னிட்டு இந்த ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ87. குழந்தை ஞானஸ்நானம்பிதா, குமாரனே, பரிசுத்தஆவியாகிய திரியேக பராபரனே, தேவரீர் இந்த ஏழைப்பிள்ளையைபரிசுத்த ஞானஸ்நானத்தின் வழியாய் உமது பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உமது சொல்லரியகிருபைக்காக உமக்கு அனந்த ஸ்தோத்திரம். இக்குழந்தையை முடிவுபரியந்தம் உமது கிருபையில்தற்காத்தருளும். அதன் சரீர வளர்த்தியோடு ஞானவளர்த்தியும் கூடிவரப்பண்ணும். இது உம்மை அறிகிறஅறிவிலும், மெய் விசுவாசத்திலும் வளர்ந்து தேறும்படி இதை உமது ஐக்கியத்தில் வைத்துப் பாதுகாரும்.இது திருச்சபையின் ஜீவனுள்ள அவயமும், தேசத்தின் உத்தமுமான குடியுமாய் வளரும்படி உமதுபரிசுத்தஆவியால் இதை நடத்தியருளும். இதன் பெற்றோரையும், இதைச் சேர்ந்த யாவரையும் தேவரீர்ஆசீர்வதித்து, அவர்களை ஆத்தும சரீர நன்மைகளால் நிரப்பியருளும். இயேசுவின் புண்ணியங்களைமுன்னிட்டு இந்த ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும், சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ88. ஞானஸ்நான உடன்படிக்கைப்புதுப்பிப்புஇன்று நான் என் பரிசுத்த ஞானஸ்நான உடன்படிக்கையைப் புதுப்பித்து, பிசாசையும் அதன்எல்லாக் கிரியைகளையும், அதன் எல்லா வழிகளையும், இந்தப் பொல்லாத பாவலோகத்தையும், என் சுயபாவ மாமிசம் இரத்தத்தையும் அருவருத்து விட்டுவிடுகிறேன். பிதா, குமாரன், பரிசுத்தஆவியே உமதுகைகளில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் ஒப்புவிக்கிறேன். என் ஆத்தும, சரீர, நித்திய ஷேமத்தையும்,எனக்கருமையானவர்களின் ஷேமத்தையும் உமது பாதுகாப்புக்கு ஒப்படைக்கிறேன். என் பரம தகப்பனே,நான் என்னை உமது விசாரிப்பு, இரக்கம், அன்பு, உண்மைக்கு முற்றிலும் கையளிக்கிறேன். என்

இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவே, உமது புண்ணியம் நீதியால் என்னை உடுத்திக் கொள்ளுகிறேன். உமதுஅருமையான இரத்தமும், காயங்களும், ஐக்கியமும் அடியேனின் நம்பிக்கை. பரிசுத்தஆவியே,ஸ்தோத்தரிக்கப்பட்ட தேற்றரவாளனே, நான் உமது இரக்கமுள்ள நடத்துதலுக்கும், உமது பெலன்வெளிச்சம் ஆறுதலுக்கும் என்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறேன். திரியேக பராபரனே, தேவரீர்என்னுடையவர், நான் உம்முடையவன். தேவரீர் என் பிதா, நான் உமது பிள்ளை. தேவரீர் என் மேய்ப்பர்,நான் உமது ஆட்டுக்குட்டி. தேவரீர் என் கர்த்தரு, நான் உமது ஆள். என் பராபரனே, நான் உம்மைப்போந்தபடித் தோத்தரிக்க அறியேன். தேவரீர் நீசப்பாவியாகிய என்னை ஒரு பொருட்டாயெண்ணி, பரிசுத்தஞானஸ்நானத்தால் என்னை மறுபடியும் செனிப்பித்துக் கிறிஸ்து இயேசுவிலுள்ள இரட்சிப்பை எனக்குக்கொடுத்தருளினீரே. இந்த உமது கிருபையில் என்னை மரணபரியந்தம் காப்பாற்றும். என் பராபரனே,தேவரீரின் மீட்பு எல்லாக் காலத்திலும் பேய், பாவம் மரணத்துக்கு எதிராக என் ஆறுதலாயிருக்கப்பண்ணும். ஆ, நான் இதையே எல்லா உலக கனத்துக்கும் கீர்த்திக்கும் மேலாக மதித்து, கிறிஸ்துஇயேசுவுக்குள் நான் பாக்கியமாய் மரிக்குமளவும் நான் பெற்ற இரட்சிப்புக்கேற்றவண்ணம் பரிசுத்தமும்தேவபக்தியுமாய் சீவனம் பண்ணச் சுறுசுறுப்பாய் முயலுவேன். ஆ, பிதாவே உமது பரிசுத்த ஆவியின்பலத்தால், உமது நேசகுமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் நிமித்தம் என் ஜெபத்தை இரக்கமாய்க்கட்டளையிட்டருளும். இவையெல்லாவற்றிற்காகவும் திரியேக பராபரனாகிய உமக்கே கனம், துதி,தோத்திரம் என்றென்றைக்கும் உண்டாகக் கடவது, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ89. இக்கட்டு நேர ஜெபம்சர்வத்திற்கும் வல்ல பராபரனே, நெருக்கப்படுகிற நாழியிலே, நம்மை நோக்கிக் கூப்பிடு,அப்பொழுது உம்மை விடுவிப்போம், அதற்காக நீ நம்மை மகிமைப்படுத்தக்கடவாய் என்று தேவரீர்கிருபையாய்த் திருவுளம் பற்றினீரே. இதோ, அடியேன் நெருக்கத்தில் இருக்கிறேன். என் கூப்பிடுதலுக்குச்செவிகொடும். தேவரீர் எனக்கு அனுசாரியாயிருந்தால் எனக்கு விரோதமாயிருப்பவனார்? கர்த்தாவே,எனக்கிரங்கும். என் பாவங்களுக்குத் தக்கபடி செய்யாமல், உமது கிருபையின்படி என்னைக் கண்ணோக்கிப்பார்த்து, என்னை என் இடுக்கண்களுக்கு நீங்கலாக்கி விடுவியும். அக்கினிச் சூளையில் நின்று கூப்பிட்டஅந்த நீதிமான்களுக்கு மாத்திரமல்ல, காவற்கிடங்கி−ருந்து கூப்பிட்ட காதகனாகிய மனாசேக்கும்இரங்கினவரே, பாவியாகிய எனக்கும் சகாயம் செய்யத் தீவிரியும். எல்லாக் காலத்திலும் என் விசுவாசம்தள்ளம்பாறாமல் என்னைக் காத்திரட்சித்தருளும். பாவிகளை இரட்சிக்க இவ்வுலகத்தில் வந்த உமதுதிருக்குமாரனாகிய இயேசுவின் முகத்தைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ77. துக்கம்இயேசையரே, தேவரீர் துக்கத்தில் ஆறுதலாயிருக்கிறீர் என்று அறிந்து, இந்த நேரத்தில் உம்மண்டைஓடிவருகிறோம். மரணத்தினால் இங்கே நேரிட்டிருக்கும் துக்கத்தில் எங்களையும், விசேஷமாய் இந்தவீட்டாரையும் கண்ணோக்கிப் பார்த்து, அழாதோயுங்கள் என்று சொல்−, உமது நல்லாறுதலால்நிரப்பியருளும். நாங்கள் நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் துக்கப்படாமல், கர்த்தருக்குள் சாகிறமரித்தோர் பாக்கியவான்கள் என்பதை நாங்கள் நம்பி ஆறுதலடையப்பண்ணும். கண்ணீர்விடுகிறவர்களுக்கு உமது பரிசுத்தஆவியை அருளி, அவர்களை மகிழ்ச்சியினால் நிரப்பியருளும். எங்கள்மரணநேரம் எப்பொழுது என்று நாங்கள் அறியாமையால், நாங்கள் அதற்கு ஆயத்தமுள்ளவர்களாய்எந்நேரமும் விழித்திருக்கப்பண்ணும். நாங்கள் இவ்வுலகில் இருக்குமளவும் எங்கள் இரட்சகரைப் பற்றும்மெய்விசுவாசத்தில் பிழைக்கவும், தேவரீர் எங்களை அழைக்கும்போது நித்திய சீவநம்பிக்கையோடுபாக்கியமாய் மரிக்கவும் எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும், சுவாமி, ஆமேன்ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ78. பிரயாணம்கர்த்தாவே, நான் உமது திருநாமத்தை முன்னிட்டு என் வீட்டி−ருந்து புறப்படுகிறேன். என்பயணத்தில் தேவரீர் என்னோடுகூட வாரும். பக−ல் மேகத்தூணிலும், இரவில் அக்கினித் தூணிலுமிருந்துநீர் உமது சனத்தைக் காத்து நடத்தினதுபோல் என்னையும் நடத்தியருளும். என் பிரயாணத்தை நீர்வாய்க்கப்பண்ணி, நான் சந்தோஷத்தோடு என் வீட்டுக்குத் திரும்பிவரக் கிருபை செய்யும். தேவரீர் என்வீட்டாரோடும் இருந்து அவர்களைப் பாதுகாத்து, நான் அவர்களை சீவனோடும் சுகத்தோடும் கண்டுசந்திக்கப்பண்ணும். நான் இப்பூமியில் தங்குமளவும் அரதேசியும் பரதேசியுமாயிருக்கிறேன் என்பதைநினைத்து, மோட்சமாகிய என் சுதேசத்துக்குப் போய்ச் சேர்வதற்கான பாதையிலே நடக்கும்படி உமதுபரிசுத்தஆவியால் என்னை நடத்தியருளும் சுவாமி, ஆமேன்.

ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ79. வேதவாசிப்புக்கு முன்கர்த்தாவே, உம்முடைய வேதத்தில் உள்ள அதிசயங்களை நான் பார்க்கிறதற்காக என் கண்களைத்திறந்தருளும் சுவாமி, ஆமேன்.80. வேதவாசிப்புக்குப் பின்நான் இப்பொழுது வாசித்த உமது வசனம் என்னிருதயத்தில் நன்றாய்த் தரித்து வேரூன்றி நித்தியசீவனுக்கென்று திரளான கனிகளைக் கொடுக்கப்பண்ணும் சுவாமி, ஆமேன்.ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: