xx வானமும் பூமியும்( O What a wonderful)
Lyric
1. வானமும் பூமியும் / காண்பதையும் / காணப்படாததையும்
யாவையும் படைத்த தேவன் முன்னால் / மானிடர் எம்மாத்திரம்
ஆனாலும் அவரின் அழைப்பினை ஏற்றுக் கொண்டோர் சிலரே
ஏற்றுக் கொண்ட விசுவாசிகள் யாவரும்
நன்றியில் மூழ்கினரே !
Chorus
தோத்ரம் உம் / மைத் து / திப்போம் என்றுமே
ஓயாத் தொனியாய் பாடிப் புகழ்வோம்
பர / லோகவாசி / யானோம் கிறிஸ் / தேசுவைக் காண்போம்
தோத்ரம் உம் / மைத் து / திப்போம் கர்த்தரே
2. என் மீட்பர் என்னையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டபின்னர்
என்னுயிர் மீட்கவே இங்கு வந்து தன்னுயிரையும் ஈந்தார்
என் நீதியால் அல்ல, கிருபையால் ரட்சிக்க சித்தங்கொண்டார்
ஆவியால் சுத்தமும் வாக்கியம் காக்கவும்
ஆத்துமத்தைத் தொட்டாரே.
3. ரட்சிக்கப்பட்ட அனைவருமே இயேசுக்கிறிஸ்துடனே
ஐக்கியப்படும்படி அழைத்திட்டார் என்ன ஈடுசெய்வோம் நாம்!
அழைப்பை ஏற்ற நாம் அனைவரும் இயேசுவின் சரீரத்தில்
ஏகசிந்தை ஏகமனதாகவுமாய்
மோட்ச வாசிகளானோம்
Credits
Tune: O What a wonderful
Author. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending